மூன்றாவது உலகக் கோப்பையை வெல்லும் நோக்கில் இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. ஜீன் 5 அன்று நடைபெற உள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி தனது முதல் தகுதிச் சுற்றில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்பாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள ஒரு அணியாக இங்கிலாந்துடன் சேர்ந்து திகழ்கிறது. உலகின் தலைசிறந்த இரண்டாவது ஓடிஐ கிரிக்கெட் அணியாக இந்தியா தற்போது திகழ்கிறது. அத்துடன் 2015 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கு சிறப்பான இந்திய அணி தேர்வுக்குழுவால் தேர்வு செய்து இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் இந்திய அணியின் வீரர்களை உலகக் கோப்பை தொடர் ஆரமிக்கும் முன் சோதித்து பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.
நாம் இங்கு இந்திய அணி உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் மேற்கொள்ள உள்ள 3 சோதனைகளை பற்றி காண்போம்.
#1 மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் மற்றும் கே.எல்.ராகுலை விளையாட வைக்க வேண்டும்
![KL Rahul needs to be tried in the middle order alongside Vijay Shankar in the warm-up games](https://statico.sportskeeda.com/editor/2019/05/e1258-15586659719110-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/05/e1258-15586659719110-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/05/e1258-15586659719110-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/05/e1258-15586659719110-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/05/e1258-15586659719110-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/05/e1258-15586659719110-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/05/e1258-15586659719110-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/05/e1258-15586659719110-800.jpg 1920w)
இந்திய அணியின் நம்பர்-4 இடத்தில் விஜய் சங்கரும், கே.எல்.ராகுல் மாற்று தொடக்க ஆட்டக்காரராகவும் உலகக் கோப்பை தொடரில் இருப்பார்கள் என இந்திய தேர்வுக்குழு தலைவர் பிரசாந்த் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரை வைத்து பார்க்கும் போது விஜய் சங்கர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். கே.எல்.ராகுல் ஒரு சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். எனவே கே.எல்.ராகுலை இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேனாக களமிறக்க அதிக வாய்ப்புள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் கே.ராகுல் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. ஆனால் தொடக்க ஆட்டக்காரராக மிகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். எனவே விஜய் சங்கரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பயிற்சி ஆட்டத்தில் சோதனை செய்து பார்க்க வேண்டும். இவர் நம்பர்4 முதல் நம்பர்-7 வரையிலான அனைத்து இடங்களிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராகுலை விட சங்கருக்கு மிடில் ஆர்டரில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரையுமே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே வாய்ப்பளித்து பார்க்க வேண்டும். ராகுலை நம்பர்-4 பேட்டிங் வரிசையிலும், விஜய் சங்கரை நம்பர்-5 பேட்டிங் வரிசையிலும் களமிறக்கப்பட வேண்டும். இதன்மூலம் இவர்களின் மிடில் ஆர்டர் பேட்டிங் திறனை சோதித்து பார்த்துவிட முடியும். அத்துடன் கே.எல்.ராகுல் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்வதால் அவர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என நம்பப்படுகிறது.
#2 இந்திய அணியின் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்துவிட வேண்டும்
![Bhuvneshwar and Shami both have similar numbers since October 2018](https://statico.sportskeeda.com/editor/2019/05/40497-15586661993971-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/05/40497-15586661993971-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/05/40497-15586661993971-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/05/40497-15586661993971-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/05/40497-15586661993971-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/05/40497-15586661993971-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/05/40497-15586661993971-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/05/40497-15586661993971-800.jpg 1920w)
கடந்த இரு வருடங்களாக ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரும் தொடக்க பவர்பிளே ஓவரிலும், டெத் ஓவர்களிலும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் இருவரும் உலகக் கோப்பை தொடரிலும் முன்னணி வீரர்களாக திகழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரில் எவரேனுக்கும் காயம் ஏற்பட்டு விட்டால் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்துவிடும்.
இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதிக பௌலர்களை மூன்றாவது வேகப்பந்து வீச்சிற்கு முயற்சி செய்து பார்த்து, இறுதியாக அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை 2019 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளது.
2015 உலகக் கோப்பை தொடரிலிருந்து அக்டோபர் 2018 வரையிலான காலகட்டத்தில் முகமது ஷமி 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று உள்ளார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதினை முகமது ஷமி வென்றதன் மூலமாகவே இந்திய அணி இவர் மீது அதிக நம்பிக்கையை வைத்தது. அத்துடன் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் டெத் ஓவரில் மிகவும் அருமையாக பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். அக்டோபர் 2018 முதல் இந்திய அணிக்காக புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவருமே கிட்டத்தட்ட சமமாகவே விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். புவனேஸ்வர் குமார் எட்டாவது பேட்டிங் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது ஷமி எத்தகைய மைதானங்களிலும், எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உடையவர்.
இருவருமே சிறப்பான சர்வதேச பௌலர்கள் ஆவார்கள். ஆனால் உலகக் கோப்பை தொடரில் இருவரில் ஏதேனும் ஒருவர் மட்டுமே வழக்கமான வேகப்பந்து வீச்சாளராக அணியில் இடம்பெற முடியும். பயிற்சி ஆட்டத்தின் வாயிலாக உலகக் கோப்பை தொடரில் பூம்ராவுடன் சேர்ந்து பந்துவீசப் போகும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்பதை தீர்மானிக்க விராட் கோலிக்கு ஒரு சரியான வாய்ப்பாக இருக்கும்.
#3 கேதார் ஜாதவிற்கு போதுமான பேட்டிங்கையும், விஜய் சங்கருக்கு போதுமான பௌலிங்கையும் அளிக்கப்பட வேண்டும்
![Kedar Jadhav, coming off a poor IPL and an injury, needs time in the middle to get his form back](https://statico.sportskeeda.com/editor/2019/05/3baeb-15586663006870-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/05/3baeb-15586663006870-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/05/3baeb-15586663006870-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/05/3baeb-15586663006870-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/05/3baeb-15586663006870-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/05/3baeb-15586663006870-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/05/3baeb-15586663006870-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/05/3baeb-15586663006870-800.jpg 1920w)
கேதார் ஜாதவ் ஒரு சிறந்த அனுபவ பேட்ஸ்மேன். ஆனால் ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் தோல்பட்டையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். கேதார் ஜாதவ் நம்பர்-6 பேட்ஸ்மேனாக இந்திய அணியில் களமிறங்குவார்.
நெருக்கடியான சமயங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர். எனவே உலகக் கோப்பையில் இவரது ஆட்டத்திறன் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது ஆகும். ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்திறன் மற்றும் தோல்பட்டை காயம் ஆகியவற்றிலிருந்து மீண்டு வெளிவந்த கேதார் ஜாதவ் அதிக பயிற்சியை மிடில் ஆர்டரில் மேற்கொள்ள வேண்டும். சரியான பேட்டிங் மனநிலையை உறுதிபடுத்த வேண்டும்.
விஜய் சங்கரை பாரக்கும் போது சர்வதேச கிரிக்கெட்டில் பௌலிங்கில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு பௌலிங் வாய்ப்பு வழங்கவில்லை.
பௌலிங் என்பது ஒரு அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டு விட்டாலோ அல்லது மோசமான பௌலிங்கை வெளிபடுத்தினாலோ, அந்த கட்டத்தில் விஜய் சங்கரின் பௌலிங் கைகொடுக்கும். பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கருக்கு பௌலிங் வாய்ப்பு வழங்கப்பட்டு அவரது ஆட்டத்திறனை மேம்படுத்தி வைக்க வேண்டும். எனவே உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற உள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விஜய் சங்கருக்கு அதிக பௌலிங் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாகும்.