ஜேசன் ராய்: இங்கிலாந்து அணியின் நம்பிக்கை தூண்

Jason Roy gave England a sensational start
Jason Roy gave England a sensational start

இதனால் தான், முழு உடல் தகுதி பெறவில்லை என்றாலும் முக்கியமான நேற்றைய போட்டியில் ராயை விளையாட வைத்தார் கேப்டன் மார்கன். இதை போட்டிக்கு முன்பு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தெரிவித்தார் மார்கன். ஏனென்றால் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருந்ததால், ராய் விளையாடியே ஆக வேண்டும் என்ற துணிச்சலான முடிவை எடுத்தது இங்கிலாந்து அணி நிர்வாகம்.

“இந்த முடிவை எடுப்பதற்கு முன், இதனால் ராய் நீண்ட காலம் விளையாட முடியாமல் போகுமா என்பதை பார்த்தோம்; அப்படியெல்லாம் ஆக வாய்ப்பில்லை, ஆனால் சில வாரங்கள் மட்டும் விளையாட முடியாமல் போகும் என தெரிந்ததும் துணிந்து ராயை விளையாட வைத்தோம்” என பேட்டியின் போது கூறினார் மார்கன்.

Jason Roy was the most talked about by England media and fans in the 24 hours before the India match
Jason Roy was the most talked about by England media and fans in the 24 hours before the India match

இந்த துணிச்சலான முடிவு இங்கிலாந்து அணிக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி பேர்ஸ்டோ மற்றும் ராய், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் இந்திய பந்துவீச்சை விரட்டி அடித்தனர். குல்தீப் மற்றும் சஹாலை குறிவைத்து இருவரும் தாக்கினர். இவர்களின் ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் தவறாமல் சென்றது. குறிப்பாக ராய் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க தயங்கவில்லை.

21 ரன்னில் இருக்கும் போது அவுட் ஆகும் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார் ராய். அவரது க்ளொவுசில் பட்ட பந்து தோனியிடம் கேட்ச் ஆனது. ஆனால் நடுவர் அவுட் கொடுக்காததோடு இந்திய அணியினரும் DRS கேட்கவில்லை. இவரும் பேர்ஸ்டோவும் இணைந்து 10 முதல் 20 ஓவர்களில் 98 ரன்களை அடித்தனர். இங்கிலாந்து அணியின் பெரிய ஸ்கோருக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது. இவர்களை 23-வது ஓவரிலேயே இந்திய பவுலர்களால் பிரிக்க முடிந்தது. 66 ரன்னில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஜடேஜா பிடித்த அற்புதமான கேட்ச்சால் அவுட்டானார் ராய்.

சதம் அடிக்காமல் வெளியேறினாலும் அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை பூர்த்தி செய்து அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து விட்டுச் சென்றார் ராய். முடிவில் 338 ரன் என்ற இமாலய இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்து 31 ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது இங்கிலாந்து.

Quick Links