தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில இருண்ட தருணங்கள்

2019 ICC Cricket World Cup Semi-final India v New Zealand Jul 10th
2019 ICC Cricket World Cup Semi-final India v New Zealand Jul 10th

#3.2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்:

2013 IPL spot-fixing scandal
2013 IPL spot-fixing scandal

2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா மற்றும் அங்கீத் சவான் ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மட்டுமல்லாது, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளருமான குருநாத் மெய்யப்பனும் இத்தகைய சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மும்பை போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டது. இதன் பின்னர், சென்னை அணியின் நிர்வாகத்துடன் மகேந்திர சிங் தோனியின் மேலும் பல்வேறு வதந்திகள் பரவின. எனவே, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது, ஐபிஎல் நிர்வாகம். எனவே, அந்த இரு ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ஸ்ட்ஸ் எனும் புதிய அணியில் சேர்க்கப்பட்டார், மகேந்திரசிங் தோனி. ஈராண்டு தடைகளுக்கு பின்னர் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்தது.

#4.2019 ஐசிசி உலக கோப்பை தொடர்:

India v New Zealand - ICC Cricket World Cup 2019 Semi-Final
India v New Zealand - ICC Cricket World Cup 2019 Semi-Final

ஒருநாள் போட்டிகளில் தோனி தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார், தோனி. ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த ஃபினிஷராக விளங்கிய தோனி 2019 உலகக்கோப்பை தொடரில் தனது மந்தமான ஆட்டத்தால் மிகவும் விமர்சிக்கப்பட்டார். நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி கண்டதால் சமூகவலைதளங்களில் மகேந்திர சிங் தோனியை பலரும் விமர்சித்தனர். இதுவரை தமது ஓய்வு பற்றி தோனி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் சில ஊடகங்களில் கூட வேண்டுமென்றே தனது ஓய்வினை அறிவிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த தோனியின் ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவர் ஓய்வு பெறக்கூடாது என வேண்டிக்கொண்டனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் 3 விக்கெட்களை இழந்து தவித்த இந்திய அணிக்கு நிதானமான ஆட்டம் தேவைப்பட்ட நிலையில், டோனிக்கு பதிலாக இளம் வீரர்கள் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த போட்டியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து நிதானமாக விளையாடிய தோனி தங்களது பார்ட்னர்ஷிப்பில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் திரட்டினர். இருப்பினும், ஆட்டத்தின் இறுதி கட்ட நேரத்தில் தவறான ஷார்ட் தேர்வு மற்றும் ரன்-அவுட் போன்ற காரணங்களால் இவர்கள் விக்கெட்களை இழந்ததனால் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தொடரில் இருந்து வெளியேறியது.

Quick Links