ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்

கிறிஸ் கெயில்
கிறிஸ் கெயில்

#4. பிரவீன் குமார்

சமீப காலமாக இந்திய ரசிகர்களால் மறக்கபட்ட வீரர்களில் ஒருவர் பிரவீன் குமார். 2007 ஆம் ஆண்டு துவங்கி 5 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடினார் பிரவீன் குமார். 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இந்திய அணி வெற்றி பெற உதவினார் பிரவீன் குமார். 2011-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்காண அணியில் தேர்வு செய்யப்பட்டார். காயம் காரணமாகப் பின்னர் அணியிலிருந்து விலகினார்.2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்காக அவர் விளையாடத் தேர்வு செய்யப்படவில்லை.

ஐபிஎல் போட்டிகளில் 5 அணிகளுக்காக பிரவீன் குமார் விளையாடியுள்ளார். 111 போட்டிகளில் 90 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

பிரவீன் குமார்
பிரவீன் குமார்

2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணிக்காக அவர் ஹாட்ரிக் எடுத்தார். டேமியன் மார்ட்டின், பாராஸ் டொக்ரா, சுமித் நர்வால் ஆகியோரை மூன்று பந்துகளில் ஆட்டமிழக்க செய்து தனது ஹாட்ரிக்கை எடுத்தார். பிரவீன் குமாரின் அதிரடி பந்துவீச்சில் 92 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி சுருண்டது. பின்னர் ஆடிய பெங்களூரு 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது.

அந்த வருடம் ஐபிஎல் போட்டிக்கு பிறகு பெங்களூரு அணியில் இருந்து பிரவீன் குமார் விடுவிக்கபட்டார். பின்னர் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப்,மும்பை,ஹைதராபாத்,குஜராத் அணியில் இடம் பெற்ற போதிலும் அவரால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் பிரவீன் குமார்.

Quick Links

Edited by Fambeat Tamil