#3 இரு தரப்பு ஒருநாள் தொடர், 2017 vs இங்கிலாந்து - 150 ரன்கள்
ஜனவரி 19, 2017ல் கட்டாக்கில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் 150 ரன்களை குவித்தார். இது அவரது சிறப்பான இன்னிங்ஸ் மட்டுமல்லாமல் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது சிறப்பான வருகையை உலகிற்கு அறிவிக்கும் படியாகும் இந்த இன்னிங்ஸ் இருந்தது.
இந்த சிறப்பான ஆட்டம் தற்போது வரை ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸாக பார்க்கப் படுகிறது. எம்.எஸ். தோனியுடன் இப்போட்டியில் 256 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடினார் யுவராஜ் சிங். அத்துடன் தோனி யுவராஜ் சிங்குடன் கை கோர்க்கும் போது இந்தியா 25 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இரு ஓடிஐ/டி20 பேட்ஸ்மேன்களும் இணைந்து சிறப்பான பார்ட்னர் ஷிப்பை உருவாக்கினர்.
யுவராஜ் சிங்கின் சிறந்த ஆட்டத்தினால் 150 ரன்களும், எம். எஸ். தோனியின் 134 ரன்களின் மூலம் இந்திய அணி 381 ரன்களை இலக்காக இங்கிலாந்திற்கு எதிராக நிர்ணயித்தது. இறுதியாக இந்திய அணி இந்த போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இதற்கு முழு காரணம் யுவராஜ் சிங் மற்றும் தோனியின் சிறப்பான ஆட்டமே.
இந்த இரு சிறந்த பேட்ஸ்மேன்களின் பார்டனர் ஷீப்பின் மூலம் அதிரடி ஆட்டத்தை கடைசியாக ஒருமுறை இந்திய ரசிகர்கள் கண்டனர். இது அவர்களது அதிர்ஷ்டம் என தற்போது வரை எண்ணுகின்றனர்.
Published 11 Jun 2019, 09:22 IST