ஒருநாள் போட்டிகளில் ரோஹீத் சர்மாவால் சேஸ் செய்யப்பட்ட 5 சவாலான இலக்குகள்

Rohit Sharma has hit form in the first game of the World Cup
Rohit Sharma has hit form in the first game of the World Cup

#2 99 vs ஆஸ்திரேலியா, சிட்னி, 2016

Rohit in action during his 99-run knock
Rohit in action during his 99-run knock

இந்த போட்டியில்தான் ஜாஸ்பிரிட் பூம்ரா இந்திய அணியில் அறிமுகமானார். இந்தப் போட்டி அனைவருக்கும் நியாபகம் இருந்துருக்கும். ஏனெனில் இப்போட்டியில் தான் மனிஷ் பாண்டே சதம் விளாசி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார்.

இருப்பினும் இந்த சேஸிங்கிற்கு அடித்தளமிட்டவர் ரோஹீத் சர்மா. இந்த தொடரில் இந்திய அணி முதல் 4 ஒருநாள் போட்டியிலும் தோல்வியை தழுவியிருந்தது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வைட்-வாஸ் செய்யும் நோக்கில் 331 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் ரோகித் சர்மா அஸ்திரேலியாவின் கனவை கலைத்தார்.

ரோஹித் சர்மா மற்றும் ஷீகார் தவான் இனைந்து 123 ரன்களை பார்ட்னர் ஷிப் செய்து விளையாடினர். அதன்பின் தவான் மற்றும் விராட் கோலி தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ரோகித் சர்மா ஆட்டத்தின் தன்மையறிந்து மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்து 97 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடி ஆட்டத்தின் போக்கை இந்தியா வசம் திருப்பினார்.

ரோகித் 99 ரன்களில் இருந்த போது ஜான் ஹாஸ்டிங்ஸ் வீசிய சற்று அகலமான பந்தை அடிக்க முற்பட்ட போது மேதீவ் வேட்-டம் கேட்ச் ஆகி வெளியேறினார். இவரது அடித்தளத்தின் மூலம் இந்தியா எளிதாக அந்தப் போட்டியை வென்றது.

#1 122* vs தென்னாப்பிரிக்கா, 2019 உலகக் கோப்பை

Rohit Sharma showed patience to help India ride over the tide
Rohit Sharma showed patience to help India ride over the tide

இந்திய அணியின் தொடக்க உலகக் கோப்பை போட்டியில் பந்துவீச்சாளர்களின் சிறப்பால் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. யுஜ்வேந்திர சகால் 4 விக்கெட்டுகளை இப்போட்டியில் வீழ்த்தினார். இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய டாப் ஆர்டர் சற்று தடுமாறியது. ரோஹீத் அடித்த பெரும்பாலான பந்து டாப் எட்ஜ் ஆகி மிஸ் ஆகி கொண்டே இருந்தது. இதன்மூலம் இந்த போட்டியில் இவர் ஒரு அதிர்ஷ்ட காரராக திகழ்ந்தார். காகிஸோ ரபாடா அதிக வேகத்தில் பந்தை வீசினார். சில எட்ஜ் பவுண்டரிகளாக மாறியதால் ரோஹீத் சற்று செட் ஆனார்.

எதிர்பாரத விதமாக ஷீகார் தவான், விராட் கோலி ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து வெளியேறிய காரணத்தால் ரோஹீத் சர்மா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சற்று அதிரடியாக வந்த பந்தை பொறுமையாக எதிர்கொண்டார். தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அந்தப் போட்டி நன்றானதாக அமையவில்லை.

ரோஹீத் சர்மாவின் அனுபவ பேட்டிங்கால் தென்னாப்பிரிக்க பௌலர்கள் அவரது விக்கெட்டை வீழத்த தடுமாறினர். ரோஹீத் சர்மா இறுதியாக 144 பந்துகளை எதிர்கொண்டு 122 ரன்களை எடுத்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் 2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சார்பாக முதல் சதம் விளாசியவர் என்ற பெருமையை பெற்றார் ரோஹீத் சர்மா.

Quick Links