சென்னை அணியை விட்டு வெளியேறிய பின்னர் சொதப்பிய ஐந்து வீரர்கள்

Michael Hussey
Michael Hussey

2. முத்தையா முரளிதரன்

Muralidaran
Muralidaran

சுழற்பந்து வீச்சு ஜாம்பவனான இலங்கை அணியை சேர்ந்த முரளிதரன், சென்னை அணியில் 2008- ஆம் ஆண்டு முதலே இடம் பெற்று வந்தார். 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர், 15 விக்கெட்டுகளை அள்ளினார் . மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் மும்பை அணியை தோற்கடித்து கோப்பையை வெல்ல இதுவும் ஒருகாரணமாக அமைந்தது.அந்த மூன்று ஆண்டுகால சென்னை அணி வாழ்க்கையில் மொத்தம் 40 விக்கெட்களை கைப்பற்றினார், முரளிதரன் . 2011- ஆம் ஆண்டு கொச்சி அணிக்காக ஒப்பந்தமாகி வெறும் 2 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றினார்.அதற்கடுத்த ஆண்டு பெங்களூர் அணியில் இடம்பெற்றார். தொடர்ந்து மூன்றாண்டுகள் அதே அணியில் விளையாடி 21 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றம் அளித்தார்.

1. மைக் ஹசி

Mic Hussey
Mic Hussey

சென்னை அணி ரசிகர்களால் மறக்கமுடியாத வீரர்களில் ஒருவர், “ மிஸ்டர் கிரிக்கெட்” என்றழைக்கப்படும் மைக் ஹசி.ஏனென்றால், இவர் சென்னை அணிக்காக செய்த சாதனைகள் ஏராளம். சென்னை அணிக்கான தனது முதல் ஆட்டத்திலேயே 54 பந்துகளில் 116* குவித்து அனைவரையும் மிரட்டினார். தொடர்ந்து 2013 வரை தோனி படையில் விளையாடி அணிக்கு பெரும் பங்காற்றினார். ஆறாண்டு கால சென்னை அணியின் ஐபிஎல் வாழ்க்கையில் 46 போட்டிகளில் விளையாடி 1691 ரன்களை குவித்துள்ளார்.2013 - இல் 733 ரன்கள் குவித்து அந்த தொடரின் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி சாதனை படைத்தார்.2010 மற்றும் 2011 சென்னை அணி கோப்பையை வெல்ல காரணமாய் வீரர்களில் இவரும் ஒருவர். பின்னர், 2014- ஆம் ஆண்டு மும்பை அணிக்காக 5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த ஏழாவது ஐபிஎல் சீசனில் வெறும் 209 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பிய இவர், வெறும் நான்கு போட்டிகளில் விளையாடி 56 மட்டுமே குவிக்க முடிந்தது. அந்த ஆண்டு முதலே இவரால் ஐபிஎல் தொடர்களில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

எழுத்து :

அஷ்வன் ராவ்

மொழியாக்கம் :

சே.கலைவாணன்

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now