#3.இங்கிலாந்து அணி தொடர்ந்து தோல்விகளை சந்திக்க வேண்டும்:
இம்முறை உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணியும் சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணியான இங்கிலாந்து, நேற்றைய போட்டியில் இலங்கை அணியிடம் தோற்று அதிர்ச்சி அளித்தது. நேற்றைய போட்டியில் தோற்று இருப்பதால் தொடர்ந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப இன்னும் சற்று சிரமப்படும். புள்ளி பட்டியலில் இந்தியாவை விட அதிக புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து, இனி வரும் மூன்று போட்டிகளில் பல மிகுந்த ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளை சந்திக்க உள்ளது. இதற்கு எதிர்மாறாக, இந்திய அணி தன்னை விட பலம் குறைந்த அணிகளான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணியுடன் சந்திக்க இருப்பதால் ஆட்டத்தை தனக்கு சாதகமாக முடிக்கும் நிலையில் உள்ளது, இந்தியா. இதன் காரணமாக, இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அனைத்து அணிகளையும் தோற்கடிப்பது சற்று கடினம் தான்.
எனவே, இனிவரும் போட்டிகளில் அனைத்திலும் இந்த அணி தோல்வியை சந்தித்தால் நிச்சயமாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உடன் இணைந்து அரையிறுதிக்கு வங்கதேச அணி தகுதி பெறும். கிரிக்கெட் போட்டிகள் என்றுமே எதிர்பார்த்தது போல் அமைவதில்லை. எனவே, மேற்கண்டவை எல்லாம் சற்று மாறினாலும் வங்கதேச அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது சற்று பின்னடைவுதான்.