இந்திய அணி உலக கோப்பையை வெல்ல 2019ன் ஐபிஎல் போட்டி எவ்வாறு உதவபோகிறது - 5 முக்கிய அம்சங்கள்

Captains with IPL Trophy
Captains with IPL Trophy

இவ்வாண்டில் ஐபிஎல் போட்டியானது இந்தியாவில் நடைபெறுமா? இல்லையா? என்ற சந்தேகத்திலே இந்திய ரசிகர்கள் இருந்தனர். ஏனெனில் உலக கோப்பை மற்றும் இந்தியாவில் தேர்தல் நடைபெற இருக்கிறது என்பதால் ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறுவது சந்தேகமாகவே இருந்தது. தற்போது பிசிசிஐ 2019ன் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் என அறிவித்துள்ளது. வருடாவருடம் வருவாய் அதிகரித்து வருவது ஒருபுறம் இருந்தாலும் ஐபிஎல் போட்டி இந்திய அணிக்காக சிறந்த இளம் வீரர்களை கண்டெடுத்துள்ளது. இதற்கு மிகசிறந்த உதாரணம் தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தனது சிறப்பான பந்துவீச்சால் திணரடித்துவரும் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ரா. சில வருடங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட துவங்கிய இவர் தனது முழுதிறமையால் தற்போது இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக உயர்ந்து இருக்கிறார்.

உலகக்கோப்பை போட்டிகளை அருகில் வைத்துக்கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவது கடினம் தான். விறுவிறுப்பான ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு காயம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம். இதனால் அவர்களால் முக்கியத்துவம் வாய்ந்த உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்காமல் போக நேரிடலாம். இது ஒருபுறம் இருந்தாலும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தர சற்று உதவிகரமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்திய அணி தன்னிடம் உள்ள சில நிறைக்குறைகளை ஐபிஎல் தொடரின் மூலம் சரி செய்யும் வாய்புள்ளது. இந்திய அணி விராட் கோலி தலைமையில் உலககோப்பையில் பங்கேற்க இங்கிலாந்து செல்ல இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உலகக்கோப்பையை நடத்தவிருக்கும் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோப்பையை வெல்ல இந்தியாவும் இங்கிலாந்து அணிக்கு சரிசமமாக போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது இந்திய அணி ஐபிஎல் பன்னிரெண்டாம் சீசன் போட்டிகள் மூலம் தீர்க்ககூடிய நிறைக்குறைகளை காண்போம்

#1 நான்காம் இடத்தில் யார்?

ராயுடு தனக்கான இடத்தை பிடிப்பாரா?
ராயுடு தனக்கான இடத்தை பிடிப்பாரா?

இந்திய அணி பாரம்பரியமாக தனது பேட்டிங்கிள் சிறந்து விளங்கிவருகிறது. ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன் ஓய்வு பெற்றால் அவ்விடத்தை நிரப்ப ஓர் சிறந்த இளம் வீரர் வந்துவிடுவர். துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி டெண்டுல்கர்-கங்குலி அல்லது டெண்டுல்கர்-ஷேவாக் அளவிற்கு வரவேற்பை பெறாவிட்டாலும் தற்போது இந்த ஜோடி தான் உலகில் தலைசிறந்த ஓப்பனிங் ஜோடியாக திகழ்ந்து வருகிறது. இவர்களது தற்போதைய ஆட்டத்திரமைகளை வைத்து பார்த்தால்

இந்தியாவின் ஜாம்பவான் துவக்க ஜோடிக்கு சற்றும் சளைத்தவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வரும் விராட் கோலி இருப்பது இந்தியாவிற்கு பெரிய பலத்தை அளிக்கின்றது. ஆனால் இதற்கு அடுத்த இடத்தில் யார்? என்ற கேள்விக்கு இந்திய அணியிடத்தில் பதில் இல்லை. கடந்த 7-8 வருடங்களாக இந்திய அணி நான்காம் இடத்தில் சிறந்த வீரரின்றி தவித்துவருகிறது. கடைசியாக நான்காம் இடத்தில் யுவராஜ் சிங் இருந்தவரையில் இந்திய அணி அசைக்கமுடியாத அணியாக இருந்துவந்தது.

2011-ற்கு பிறகு யுவராஜ் சிங் புற்றுநோய் காரணமாக அணியில் தொடர இயலவில்லை. அதிலிருந்து இந்திய அணி ரஹானே, மனிஷ் பாண்டே, கே.எல் ராகுல் உள்ளிட்ட பல்வேறு வீரர்களை முயற்சித்து பார்த்தது. ஆனால் யாரும் நான்காம் இடத்தில் தனது பெயரை பதிவு செய்யும் வகையில் விளையாட வில்லை. கடைசியாக இந்தியா கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளில் அம்பத்தி ராயுடுவை கண்டெடுத்தது. ஆசிய கோப்பையில் சிறந்து விளையாடிய ராயுடு தொடர்ந்து சிறந்து விளையாடுவாரா? உலகக்கோப்பையில் இடம்பெறுவாரா? என்பதை பொறுத்து தான் பார்க்கவேண்டும்.

இந்தியாவின் வலிமை வாய்ந்த மூன்று மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட கட்டாயத்தில் இருந்து வருகின்றனர். இவர்கள் சற்று தடுமாறினால் அடுத்தபடியாக அணியின் ஸ்கோரை உயர்த்த ஒரு சிறந்த வீரராக ராயுடு உதவுவார் என இவர் கடந்த ஐபிஎல் 11-ஆம் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதை வைத்து நம்பலாம். சென்னை அணியில் இவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விளையாடினால் இந்திய அணிக்கு நிச்சியமாக பெருமளவில் உதவும்.

#2 தோனியின் பேட்டிங் ஃபார்ம்

தோனியின் ஃபார்ம் கேள்விக்குறி !
தோனியின் ஃபார்ம் கேள்விக்குறி !

தோனியின் தற்போதைய சுமாரான பேட்டிங் ஃபார்மை பற்றி அனைவரும் அறிவர். ஆனால் அதைப்பற்றி பேச யாரும் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர் இந்திய அணிக்கு பெற்று தந்த பெருமைகளை வேறு யாரும் பெற்றுத்தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அனுபவம் மற்றும் போட்டியின் விழிப்புணர்வு போன்றவை இந்திய அணிக்கு மிகவும் அவசியம். மேலும் அதிவேக ஸ்டெம்பிங் மற்றும் ஸ்பின்னர்களுக்கு வழிகாட்டுவது போன்ற திறமைகள் கொண்டவர் ஆவார்.

கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி இன்றும் மக்கள் மனதில் ஓர் தலைவராகவே வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் தற்போது இந்திய அணிக்கு பேட்டிங்கில் எந்த விதத்திலும் உதவுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

சென்னை ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் தோனி கடந்த முறை சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை பெற்றுதந்தார். தோணி அவரது பழைய ஃபார்மிற்கு வந்தால் எதிர் அணிகளுக்கு இந்தியாவின் முன்வரிசை வீரர்களை விட இருமடங்கு அச்சுறுத்தலாக இருப்பார். உலக கோப்பைக்கு முன்னராக தோணி அவரது பழைய ஃபார்மிற்கு திரும்புவார் என நம்பலாம்.

#3 மூன்றாம் வேகப்பந்து வீச்சாளர்

கலீல் அஹ்மதிற்கு இடம் கிடைக்குமா?
கலீல் அஹ்மதிற்கு இடம் கிடைக்குமா?

புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராவுடன் இணைய போகும் அந்த மூன்றாம் வேகப்பந்து வீச்சாளர் யார் ? என்ற கேள்விக்கு இந்திய அணியிடம் பதில் இல்லை. இந்தியாவும் முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் முதல் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் வரை பலரை முயற்சித்து பார்த்து பதிலின்றி தவித்துவருகிறது.

இந்த இடமும் பேட்டிங்கில் நான்காம் இடம் போல் சிறந்த வீரரின்றி காலியாக உள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரு ஸ்பின்னர்களை வைத்தும் மேலும் 50 ஓவர்களை பூர்த்தி செய்ய பாண்டியா மற்றும் ஜாதவ் உதவியாக இருந்தனர். இந்த யுக்தி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுதந்தது.

ஆயினும்கூட மூன்றாம் வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கலீல் அஹ்மது கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் மேற்குஇந்திய தீவுகள் இடையே நடந்த போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் ஷமி தனது பழைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புவனேஸ்வர் மற்றும் பும்ரா ஐபிஎல் போட்டிகளில் போது ஓய்வு எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் மற்ற பௌலர்களுக்கு ஐபிஎல் ஓர் சிறந்த வாய்ப்பு. இதில் சிறப்பாக செயல் படுபவர் நிச்சயமாக மூன்றாம் வேகப்பந்து வீச்சாளராக உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என்பது உறுதி.

#4 குல்தீபின் ஸ்பின் ஜோடி யார்?

குல்தீப்-சஹால் ஜோடி தொடருமா?
குல்தீப்-சஹால் ஜோடி தொடருமா?

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து. இத்தொடரில் இந்திய அணி தனது ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் மற்றும் சஹாலை வைத்து அனைத்து அணிகளையும் அச்சுறுத்தியது. இவர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி முன்னணி பேட்ஸ்மேன்களை தினறடித்தனர். ஆனால் கடந்த ஆசிய கோப்பை போட்டியின் போது ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக விலகினார். அவரிடத்தை நிரப்ப இந்திய அணி ஜடேஜாவை முயற்சி செய்தது இந்த முயற்சி சிறப்பாக செயல்பட சஹால் தனது இடத்தை இழந்தார். ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் திறமையினால் இந்திய அணியில் தற்போது இடம்பெற்று வருகிறார். இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்படுபவரே உலகக்கோப்பையில் குல்தீபுடன் ஜோடி சேருவர் என்பது தான் உண்மை.

#5 ஆல்-ரவுண்டர்

ஆல்-ரவுண்டர் யார்? பாண்டியா/ஜாதவ்
ஆல்-ரவுண்டர் யார்? பாண்டியா/ஜாதவ்

இந்தியாவின் ஆல்-ரவுண்டர் யார்? ஹர்திக் பாண்டியாவா?, கேதார் ஜாதவா?, அல்லது ரவீந்திர ஜடேஜாவா? இல்லை இதில் ஏதேனும் இருவர் இடம் பெறுவார்களா என பொறுத்து தான் பார்க்கவேண்டும். இவர்களின் திறமைகளை வைத்து பார்த்தால் பாண்டியாவும், ஜாதவும் கேப்டனின் விருப்பமாக இருந்து வருகின்றனர். பேட்டிங்கில் ராயுடுவும், தோனியும் சிறந்த ஃபார்மில் இருந்தால் இந்தியா அணி இங்கிலாந்தில் இருக்கும் பிளாட் பிட்ச்களில் 5 பௌலர்கள் கொண்டு விளையாடி எதிர் அணியை குறைந்த ஸ்கோர்க்குல் கட்டுப்படுத்த முயற்சிக்கும்.

அதேபோல் ஜடேஜாவையும் எளிதாக நீக்கிவிட முடியாது அவரது ஆல்-ரவுண்ட் திறமையால் அணியில் திரும்பவும் இடம்பெற்று உள்ளார். மேலும் எதிர்பாராத விதமாய் க்ருனால் பாண்டியாவும் இடம் பெறலாம். இந்தியாவின் உலக கோப்பை ஆல்-ரவுண்டர் யார் என்பதை தீர்மானிக்க ஐபிஎல் போட்டி சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

எழுத்து: கிருஷ்ணன்

மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்

Quick Links

Edited by Fambeat Tamil