ஐபிஎல் 2019: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பற்றிய ஒரு அலசல் 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐபிஎல் தொடரில் சாதிக்க அனைத்து தகுதிகள் இருந்தும் சாதிக்க முடியாமல் தவிக்கும் அணி என்றால் அது பெங்களூர் அணிதான். இந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணியாக திகழ்கிறது RCB அணி. அதற்கு காரணம் அந்த அணியின் நட்சத்திர நாயகன் ரன் குவிக்கும் இயந்திரம் விராட் கோஹ்லி. இவரை தவிர்த்து உலகம் முழுக்க ரசிகர்களை ஈர்க்கும் எ.பி. டிவில்லியர்ஸ் அந்த அணிக்காக ஒரு தொடரை கூட விடாமல் பங்கேற்று வருகிறார். இவர் தற்போது தான் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் என்பது கூடுதல் செய்தி.

இந்த முறை ஏலத்தில் பங்குபெற்ற RCB அணியின் நிர்வாகம் தங்களது பந்துவீச்சை சரி செய்ய எண்ணி வீரர்களை தேர்ந்தெடுத்தது எனலாம். காரணம் பேட்டிங்கில் பட்டையை கிளப்பும் RCB அணி பந்துவீச்சில் சோடைபோவது வாடிக்கையான ஒன்று. ஆனாலும் கையில் பணத்தட்டுப்பாடு இருந்ததாலும், வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அதிகம் இருந்ததாலும் சரியான பந்துவீச்சாளர்களை இந்தமுறையும் எடுக்க தவறியது RCB அணி.

அதில் குறிப்பிடும்பட்சத்தில் ஸ்டோய்னிஸ், கோல்டெர் நைல் மற்றும் சிவம் துபே ஆகியோரை வாங்கியது சிறப்பு எனலாம்.

அணி விபரங்கள்:

RCB அணியின் வீரர்கள்
RCB அணியின் வீரர்கள்

பேட்ஸ்மேன்கள்:

விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், சிம்ரான் ஹெட்மைர், டி.படிக்கல், ஹிம்மத் சிங்.

விக்கெட் கீப்பர்கள்:

ஹென்றிச் க்ளாஸன், பார்திவ் பட்டேல்.

ஆல்ரவுண்டர்கள்:

அக்ஸதீப் நாத், பவான் நேகி, வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, மொயின் அலி, ஸ்டோய்னிஸ், கிராண்ட்ஹோம், பி.பர்மன், மிலிண்ட் குமார், குர்கீரத் சிங்.

பௌலர்கள்:

சஹால், கூல்டர் நைல், சிராஜ், டிம் சவுதி, உமேஷ் யாதவ், நவதீப் சைனி, கெஜ்ரொலியா.

அணியின் கலவை:

RCB அணியை பொறுத்தவரை கடினமான விஷயம் என்றால் அது சரியான கலவையில் அணியை தேர்ந்தெடுப்பது தான். அதற்கு சான்றாக கோஹ்லி RCB அணிக்காக பலமுறை தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். டீவில்லியர்ஸ் மற்றும் கெய்ல் அணியில் இருந்த பொழுது கூடுதல் வெளிநாட்டு வீரர்களை எடுக்கமுடியாமல் திணறியது, அதே போன்று தான் இந்த முறையும் நிகழ வாய்ப்புள்ளது. மேலும் கோஹ்லியை தவிர அனுபவம் வாய்ந்த சிறந்த இந்திய வீரர் என்று சொல்லிக்கொள்ளும்படி ஒருவர்கூட இல்லை.

[எ.கா] CSK - ரெய்னா, ராயுடு, கேதார் ஜாதவ், ஜடேஜா. MI - ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, பும்ராஹ் மற்றும் யுவராஜ் சிங். இதன் காரணமாகவே இந்த இரு அணிகளும் ஐபிஎல்லில் பலமுறை சாதிக்க முடிந்தது.

தொடக்க வீரர்கள்:[1,2]

பார்திவ் பட்டேல், மொயீன் அலி/ ஸ்டாய்னிஸ்.

ஸ்டோய்னிஸ்
ஸ்டோய்னிஸ்

பலம்: ஸ்டாய்னிஸ் மட்டுமே பலமாக காட்சி தருகிறார். பிபிஎல் தொடரில் தொடக்க வீரராக இறங்கி அதிரடியில் அசத்தியுள்ளார்.

பலவீனம்: அதிரடி தொடக்கம் தரும் RCB அணிக்கு, இந்தமுறை சரியான தொடக்கம் அமைவது கேள்விக்குறி தான். பார்திவ் பட்டேல் நேர்த்தியான ஆட்டக்காரர் என்றால் கூட, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. மொயீன் அலி எவ்வாறு சாதிப்பார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். காரணம் ஸ்டாய்னிஸ் தாயகம் திரும்ப நேரிட்டால் இவர் தான் களமிறங்கவேண்டும்.

மேலும் தொடக்க வீரர்களுக்கு மாற்றாக தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே உள்ளார்.

தொடக்க வீரர்கள் மதிப்பெண்: 6/10

மிடில் வரிசை வீரர்கள்:[3,4,5]

விராட் கோஹ்லி, டீவில்லியர்ஸ் மற்றும் சிம்ரான் ஹெட்மைர்.

டீவில்லியர்ஸ் மற்றும் கோஹ்லி
டீவில்லியர்ஸ் மற்றும் கோஹ்லி

பலம்: RCB அணியின் கோப்பை கனவு இவர்கள் மூவர் கையில் மட்டுமே உள்ளது. இவர்கள் சோபிக்க தவறினால் அனைத்தும் வீண், ஆனால் அதற்க்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான். கோஹ்லி எந்த சூழலிலும் ரன்கள் குவிப்பார், டீவில்லியர்ஸ் எந்த திசையிலும் ரன்கள் குவிப்பார் இவர்களுடன், ஹெட்மைர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரம். அணியின் மூன்றில் இரண்டு பங்கு ரன்களை இவர்கள் மூவரும் மட்டுமே குவிக்க அதிக வாய்ப்புள்ளது.

ஹெட்மைர்- [U-19 அணிக்காக உலக கோப்பை வென்று தந்தவர். மேலும் இந்தியாவில் தற்போது நடந்த தொடரில் அதிரடியாக சதம் அடித்துள்ளார்].

பலவீனம்: குறிப்பிடும் பட்சத்தில் எதுவும் இல்லை.

மிடில் வரிசை வீரர்கள் மதிப்பெண்: 9.5/10

பினிஷெர்கள்:[6,7,8]

மொயீன் அலி/ஸ்டாய்னிஸ், கிராண்ட்ஹோம்/சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர்/பவான் நேகி.

காலின் டி கிராண்ட்ஹோம்
காலின் டி கிராண்ட்ஹோம்

பலம்: கிராண்ட்ஹோம், ஸ்டாய்னிஸ் மற்றும் மொயீன் அலி சிறந்த அனுபவம் வாய்ந்த டி-20 வீரர்கள். இவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிடிலும் சரியான முறையில் ஆட்டத்தை முடிக்க வல்லவர்கள்.

பலவீனம்: பெரும்பாலும் இவர்களில் யாரையாவது இருவரை தான் அணியில் இணைக்க முடியும். ஒருவர் சரியாக ஆடாத பட்சத்தில் வீரர்களை அடிக்கடி மாற்றவேண்டிய சூழல் ஏற்படலாம். சுந்தர் மற்றும் நேகியின் அனுபவம் மிக குறைவு. பெரிய ரன்களை சேஸ் செய்யும்பொழுது தடுமாறுவது நிச்சயம்.

மிடில் வரிசை வீரர்கள் மதிப்பெண்: 7/10

பௌலர்கள்:[9,10,11]

சஹால், உமேஷ் யாதவ், சிராஜ்/நவதீப் சைனி.

RCB பௌலர்கள்
RCB பௌலர்கள்

பலம்: பவர்பிளே ஓவேர்கள் வீசுவதில் சிறந்த வீரர்கள் எனலாம். சஹால் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளதால் அணிக்கு கைகொடுப்பார் எனலாம். மேலும் சுந்தர் பவர்-பிளே ஓவர்களில் பந்துவீசுவதில் திறமை வாய்ந்தவர்.

[ வெளிநாட்டு வீரர்கள் சரியாக அளவில் எடுக்கும் பட்சத்தில் டிம் சௌதி மற்றும் கூல்டர் நைல் இவர்களில் ஒருவர் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் இவர்கள் பேட்டிங்கிலும் கைகொடுப்பது கூடுதல் சிறப்பு ].

பலவீனம்: டெத் ஓவேர்கள் வீசுவதில் பலவீனம் எனலாம். உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் இந்தியா அணிக்காக பங்கேற்ற போட்டிகளிலேயே இதை காண முடிந்தது. எனவே RCB பெரிய சிக்கல் இங்கு தான் உள்ளது. இதை எப்படி கையாள போகிறது என்று பொருத்திருந்தான் பார்க்கவேண்டும்.

பௌலர்கள் மதிப்பெண்: 7/10

இந்தமுறை வாய்ப்பு எப்படி?

மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களை ஆராயும் பொழுது இந்த முறை கோப்பை வெல்வது என்பது கடினமான ஒன்று தான் சொல்ல வேண்டும். பெரிய வீரர்களான ஸ்டாய்னிஸ் மற்றும் கூல்டர் நைல் தேசிய அணிக்காக விளையாட செல்வதால், அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படும்.

மேலும் முழுமையான வெற்றி என்பது கோஹ்லி, டீவில்லியர்ஸ் மற்றும் ஹெட்மைர் [மூவர்கள்] கையில் மட்டுமே உள்ளது. 2007-ம் ஆண்டு யாருக்கும் அறிமுகமில்லாத ராஜஸ்தான் அணி எப்படி கோப்பை வென்றதோ, அதே போல சுந்தர், துபே மற்றும் பௌலர்கள் எழுச்சி பெரும் பட்சத்தில் அனைத்து அணிகளுக்கும் RCB அணி மூவர்கள் துணையுடன் சவால் விடுக்கலாம்.

Quick Links