இலங்கையை அசால்டாக காலி செய்த இந்திய அணி!!!

Sri Lanka v India - ICC Cricket World Cup 2019
Sri Lanka v India - ICC Cricket World Cup 2019

உலககோப்பை தொடரின் இறுதி லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை வந்த முடிவு படி ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு 5 வது இடமே கிடைத்தது. இந்நிலையில் இந்திய அணியானது தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை சந்தித்தது. இந்த போட்டியானது லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் சகால் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டனர்.

Sri Lanka v India - ICC Cricket World Cup 2019
Sri Lanka v India - ICC Cricket World Cup 2019

அதன்படி இலங்கை அணி சார்பில் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் புவனேஷ்வர் குமார் ஓவர்களை வெளுத்து வாங்கி துவக்கம் தத்தனர். ஆனால் பும்ராவின் பந்தை இவர்கள் அடிக்க கூட தடுமாறி வந்தனர். பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் இலங்கை அணியின் கேப்படனான கருணரத்னே 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தோனியிடம் கேட்ச் ஆனார். அதன் பின் அந்த அணியின் இளம் நட்சத்திர வீரரான அவிஷ்கா பெர்னால்டோ களமிறங்கினார். இவர் குசால் பெரேராவுடன் இணைந்து புவனேஷ்வர் குமார் ஓவரை மட்டும் குறி வைத்து தாக்கி வந்தனர். அணியின் ஸ்கோர் 40 ஆக இருக்கும் போது குசால் பெரேரா 18 ரன்களுக்கு பும்ராவின் பந்திற்கு இறையானார். பின் வந்த குசால் மெண்டிஸ் 3 ரன்களுக்கு தனது விக்கெட்டை ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். அடுத்த ஓவரிலேயே அவிஷ்கா பெர்னால்டோவும் ஹார்திக் பாண்டியாவிடம் தனது விக்கெட்டை இழக்க இலங்கை அணி 55 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. போகும் நிலையை பார்த்தால் 150 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்ற நிலையில் இருந்தது.

Sri Lanka v India - ICC Cricket World Cup 2019
Sri Lanka v India - ICC Cricket World Cup 2019

அதற்கு பின் தான்.மேத்யூஸ் மற்றும் திரிமண்னே இணைந்தனர். இந்த ஜோடி விக்கெட்டை இழப்பை தடுத்து நிறுத்தி நிலைத்து ஆடத்துவங்கியது. இருவரும் நிதானமாக ஆடி கிடைக்கும் பந்துகளை மட்டும் பவுண்டரிகளாக மாற்றியும் ரன்களை குவித்து வந்தனர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை கடந்தனர். இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் குவித்தனர். திரிமண்னே 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவின் சுழலில் சிக்கி தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின் தனஜெயா டி சில்வா களமிறங்கினார்.இவர் நிதானமாகவே ஆடி வர மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த மேத்யூஸ் சர்வதேச ஒருநாள் பேட்டிகளில் தனது மூன்றாவது சதத்தினை பதிவு செய்தார். இறுதியில் அவரும் 113 ரன்களில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழக்க இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 264 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும், மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Sri Lanka v India - ICC Cricket World Cup 2019
Sri Lanka v India - ICC Cricket World Cup 2019

பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. வழக்கம் பேல ரேகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்தனர். அதிலும் இந்த உலககோப்பையில் செம்ம பார்ம்மில் இருக்கும் ரோகித் சர்மா துவக்கத்திலிருந்தே தனது அதிரடியை காட்டினார். மறுமுனையில் ராகுல் சற்று நிதானமாகவே ரன்கள் சேர்த்து வந்தார். இந்த ஜோடி இணைந்து இலங்கை பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தது. இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை கடந்தும் ஆட்டமிழக்காமல் ஆடி வந்தனர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த தங்களது அனைத்து பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தியது இலங்கை. ஆனால் எதுவும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. அதிரடியாக ஆடி வந்த ரோகித் சர்மா இந்த உலககோப்பை தொடரில் தனது ஐந்தாவது சதத்தினை கடந்து புதிய சாதனை படைத்தார். சதமடித்த வேகத்திலேயே தனது விக்கெட்டினையும் மலிங்காவிடம் இழந்தார்.

Sri Lanka v India - ICC Cricket World Cup 2019
Sri Lanka v India - ICC Cricket World Cup 2019

இந்த ஜோடி முதலாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து அணியின் கேப்டன் விராத்கோலி களமிறங்க அவரும் தனது பாணியில் ஆடத்துவங்கினார். இலக்கு குறைவாக இருந்ததால் ஆட்டம் முழுவதும் இந்தியாவின் கையிலேயே இருந்தது. இந்நிலையில் கேஎல் ராகுல் உலககோப்பை தொடரில் தனது முதலாவது சதத்தை கடந்தார். சதமடித்த பின் இவரும் ராஜிதா பந்தில் மேத்யூஸ் இடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த பண்ட் வெறும் 4 ரன்களில் வெளியேற பாண்டியா மற்றும் கோலி இணைந்து ஆட்டத்தை முடித்து வைத்தனர். இதன் மூலம் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இலங்கை அணி சார்பில் மலிங்கா, ராஜிதா மற்றும் உடானா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த தொடரில் ஐந்தாவது சதத்தினை பதிவு செய்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil