கிறிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா...

Pravin
ரோஹித் சர்மா, கோலி
ரோஹித் சர்மா, கோலி

அதனை தொடர்ந்து நிலைத்து விளையாடி கொண்டிருந்த கேப்டன் விராட் கோலியும் 28 ரன்களில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய மனிஷ் பான்டே 6 ரன்களில் அதே காட்ரெல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரவிந்திர ஜடேஜா மற்றும் க்ருனாள் பாண்டியா இருவரும் நிலைத்து விளையாடினர். கடைசி ஓவர்களில் இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 167 என்ற இலக்கை நிர்ணயித்தது.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்

அதன் பின்னர் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் சுனில் நரைன் மற்றும் எவின் லிவிஸ் இருவரும் களம் இறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய இரண்டாவது ஓவரிலேயே லிவிஸ் டக்அவுட் ஆகி வெளியேறிய நிலையில் அடுத்த ஓவரிலேயே சுனில் நரைன் 2 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் ஓவரில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரன் மற்றும் ரோமன் பவுல் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். குறிப்பாக ரோவன் பவுல் அதிரடியாக விளையாடிய நிலையில் அரைசதம் விளாசினார்.

க்ருனாள் பாண்டியா
க்ருனாள் பாண்டியா

54 ரன்னில் க்ருனாள் பாண்டியா பந்தில் அவுட் ஆகி வெளியேறி பூரனும் 19 ரன்னில் க்ருனாள் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். இருவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் அதன் பின்னர் களம் இறங்கிய கீரேன் பொலார்ட் மற்றும் ஹெட்மயர் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் நடுவில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் தடை பெற்ற நிலையில் டிஎல்எஸ் முறையில் இந்தியா அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் முலமாக இந்த டி-20 தொடரை 2-0 என்ற நிலையில் கைபற்றியுள்ளது.

Quick Links