உலககோப்பை தொடரானது மிகப் பிரம்மாண்டமாக இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது இன்று நடைபெற்றது. இதற்கு முன்னர் இந்த இரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மோதின. அதில் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை உலககோப்பை தொடரில் ஆறு முறை மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இந்நிலையில் மான்செஸ்டர் மைதானத்தில் துவங்கிய இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சப்ராஸ் அகமதுபந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாடாததால் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.
அதன் படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். ஷிகர் தவான் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக கருதப்பட்டாலும் அந்த இடத்தினை ராகுல் நிரப்பி விட்டார். இவர் ரோகித் ஷர்மாவுடன் இணைந்து அணிக்கு நல்ல துவக்கத்தினை தந்தார். ராகுல் நிதானமாக ஆடி வர மறுமுனையில் ரோகித் ஷர்மா அதிரடியாக ஆடி வந்தார். இவர்களின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு பாகிஸ்தான் அணி பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டும் அது பலனளிக்கவில்லை. சிறப்பாக இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை 100 ரன்னாக உயர்த்தினர். உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிராக இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு நூறு ரன்கள் குவிப்பது இதுவே முதல் முறை. அரை சதத்தினை கடந்த ராகுல் 57 ரன்களில் இருந்தபோது வாகப் ரியாஸ் வீசிய பந்தில் பாபர் அஸாமிடம் கேட்ச் ஆனார்.
![India v Pakistan - ICC Cricket World Cup 2019](https://statico.sportskeeda.com/editor/2019/06/972e6-15607049792478-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/06/972e6-15607049792478-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/06/972e6-15607049792478-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/06/972e6-15607049792478-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/06/972e6-15607049792478-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/06/972e6-15607049792478-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/06/972e6-15607049792478-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/06/972e6-15607049792478-800.jpg 1920w)
அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராத்கோலி களமிறங்கினார். அவர் ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்த துவங்கினார். மறுமுனையில் ரோகித் ஷர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். பாகிஸ்தான் பந்து வீசாசாளர்களை கதிகலங்க வைத்த இவர் சர்வதேச அரங்கில் தனது 24வது சதத்தினை பதிவு செய்தார். சதமடித்த பின்னரும் இவரது வேகம் குறையவில்லை. பவுண்டரிகளாக விளாசிய இவர் 140 ரன்களில் ஹசேன் அலி பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். பின் ஹார்திக் பாண்டியா விராத்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இதில் சிறப்பாக ஆடிவந்த கோலி அரைசதத்தினை கடந்தார்.
![India v Pakistan - ICC Cricket World Cup 2019](https://statico.sportskeeda.com/editor/2019/06/08cd3-15607054142394-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/06/08cd3-15607054142394-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/06/08cd3-15607054142394-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/06/08cd3-15607054142394-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/06/08cd3-15607054142394-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/06/08cd3-15607054142394-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/06/08cd3-15607054142394-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/06/08cd3-15607054142394-800.jpg 1920w)
ஹார்திக் பாண்டியா தனது அதிரடியை காட்டி 26 ரன்கள் குவித்த அமீர் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த தோணியும் அதே ஓவரில் வெளியேறினார். பின்னர் கோலி நிலைத்து ஆடி 77 ரன்கள் எடுத்த நிலையில் அமீரின் பந்தில் ஆட்டமிழந்ததாக கருதி வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 336 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அமீர் 3 விக்கெட்டுகளும், வாகப் ரியாஸ் மற்றும் ஹசேன் அலி தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
![India v Pakistan - ICC Cricket World Cup 2019](https://statico.sportskeeda.com/editor/2019/06/4c0cc-15607058107431-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/06/4c0cc-15607058107431-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/06/4c0cc-15607058107431-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/06/4c0cc-15607058107431-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/06/4c0cc-15607058107431-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/06/4c0cc-15607058107431-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/06/4c0cc-15607058107431-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/06/4c0cc-15607058107431-800.jpg 1920w)
பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு பஃகர் ஜமான் மற்றும் இமாம் உல் அக் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டி துவங்கி ஐந்தாவது ஓவரிலேயே புவனேஷ்வர் குமார் தசை பிடிப்பு காரணமாக போட்டியை விட்டு வெளியேறினார். எனவே அவருக்கு பதிலாக விஜய் சங்கர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் வீசிய முதல் பந்திலேயே இமாம் உல் அக் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்தார். அதன் பின் அந்த அணியின் நட்சத்திர வீரரான பாபர் அஸாம் களமிறங்கினார். இவர் பஃகர் ஜமானுடன் ஜோடி சேர்ந்து இலக்கை துரத்த துவங்கினார். இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். இதில் பஃகர் ஜமான் சிறப்பாக ஆடி தனது அரைசதத்தினை பதிவு செய்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தது.
![India v Pakistan - ICC Cricket World Cup 2019](https://statico.sportskeeda.com/editor/2019/06/fa524-15607064920173-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/06/fa524-15607064920173-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/06/fa524-15607064920173-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/06/fa524-15607064920173-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/06/fa524-15607064920173-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/06/fa524-15607064920173-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/06/fa524-15607064920173-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/06/fa524-15607064920173-800.jpg 1920w)
இதில் பாபர் அஸாம் 48 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்தார். அதனைத் தொடர்ந்து பஃகர் ஜமானும் 68 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய ஹபீஸ், சப்ராஸ் அகமது மற்றும் சோயிப் மாலிக் என முண்ணனி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இந்நிலையில் பாகிஸ்தான் அணி 35 ஓவர்களுக்கு 166 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு பாகிஸ்தான் அணிக்கு 302 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனால் பாகிஸ்தான் அணி 30 பந்துகளில் 136 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது களத்திலிருந்த இமாட் வாசிம் மற்றும் சதாப் கான் இணைந்து 40 ஓவரிகளில் 212 ரன்கள் மட்டுமே குவித்ததால். இறுதியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் விஜய் சங்கர், குல்தீப் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடி 140 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது இந்த தொடரில் இவரின் இரண்டாவது ஆட்ட நாயகன் விருதாகும்..