ஆஸ்திரேலிய - நியூசிலாந்து தொடர்களின் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த நன்மைகள் 

Indian Team
Indian Team

இந்திய அணி கடந்த மூன்று மாதங்களாக ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. நேற்றுடன் தொடர் முடிந்து இந்திய வீரர்கள் இன்று இந்தியாவிற்கு திரும்பினர். இந்த இரு வெளிநாட்டு தொடர் மூலம் இந்திய அணிக்கு நிறைய வலிமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மழையால் 1-1 என டிரா ஆனது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைத்தது. அத்துடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இரு நாட்டு தொடரையும் 2-1 என முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கைப்பற்றியது இந்திய அணி.

நியூசிலாந்து தொடரிலும் தனது ஆதிக்கத்தை இந்திய அணி தொடர்ந்தது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் டி20 தொடரில் வெற்றிக்கு விளிம்பில் சென்று 2-1 என தோல்வியை தழுவியது இந்திய அணி.

இந்த இரு வெளிநாட்டு தொடர்களும் இந்திய அணிக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்த வெற்றிகளின் மூலம் 2019 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இரு வெளிநாட்டு தொடர்களின் மூலம் இந்திய அணியில் நன்றாக ஆட்டத்திறனை வெளிபடுத்தக்கூடிய சில புதிய வீரர்களை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த இரு வெளிநாட்டு தொடர்களின் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த 5 நன்மைகளை நாம் காண்போம்

#5.முகமது ஷமியின் அற்புதமான பந்துவீச்சு:

Mohammed shami
Mohammed shami

இந்த இரு வெளிநாட்டு தொடர்களிலும் முகமது ஷமி மிகவும் அற்புதமான ஆட்டத்திறனை வெளிபடுத்தி தனது முழு ஆட்டத்தை நிருபித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடருக்கு முன் முகமது ஷமி இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் தற்போது இவருடைய இடம் ஒருநாள் அணியில் நிரந்தரமாகியுள்ளது.

இந்த தொடரில்தான் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இவருடைய தற்போதைய ஆட்டத்திறனில் எவ்வித சந்தேகமும் இல்லை. டெஸ்ட் போட்டிகளில் இவருடைய அற்புதமான பந்து வீச்சு அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் என்றாலே முகமது ஷமிதான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். இவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் பங்கேற்று 11 விக்கெட்டுகளையும், 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இரண்டு இன்னிங்ஸிலுமே சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளார் முகமது ஷமி. அத்துடன் சில வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் அணியிலும் இடம்பிடித்து தனது சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார். 2019 உலகக் கோப்பையில் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ராவுடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#4.ரிஷப் பண்ட்டின் பயமறியா பேட்டிங் திறன்

Pant Definitely one of the future
Pant Definitely one of the future

இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி வெளிநாட்டு தொடர்களில் பேட்டிங்கில் அவ்வளவாக ஜொலிப்பதில்லை. ஆனால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் ஃபன்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ரிஷப் பண்ட் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆவார். ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பந்துவீச்சை கணித்து சிறப்பாக விளையாடியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால் இருப்பினும் உலகக் கோப்பை திட்டத்தில் இவர் இருக்கிறார் என இந்திய தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

தோனியின் சகாப்தத்திற்கு பிறகு ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ரிஷப் பண்ட் கண்டிப்பாக தோனிக்குப் பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்துவார் என்பது சந்தேகமில்லா உண்மையாகும். கடினமான சமயங்களில் இவரது பேட்டிங் இந்திய அணிக்கு வலிமையாக அமைகிறது.

இவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார். இரண்டு சதங்களுமே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என வெளிநாட்டு மண்ணில் தான் அடித்துள்ளார என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பேட்டிங் அதிரடியாகவே உள்ளது. எந்த சமயத்தில் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டுமென சரியாக தீர்மாணித்து அதிரடியாக விளையாடும் திறமை உடையவர் ரிஷப் பண்ட்.. 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#3.ஒருநாள் கிரிக்கெட்டில் வலிமையான மிடில் ஆர்டர்

They came good but there is still go long way to go
They came good but there is still go long way to go

இந்திய ஒருநாள் அணியில் மிகவும் நீண்ட காலமாக இருந்து வந்த பெரிய குறை இந்திய அணியின் மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் தான்.அந்தக் கவலை தற்போது தற்போது தீர்ந்துள்ளது. இந்திய மிடில் ஆர்டர் வீரர்களான தோனி , ராயுடு , கேதார் ஜாதவ் கடந்த இரு வெளிநாட்டு தொடர்களிலும் சிறப்பாக தங்களது ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளனர்.

குறிப்பாக தோனியின் சிறப்பான ஆட்டத்திறன் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தோனி ஆட்டநாயகன் விருதினை வென்றார். இவரது சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினை அறவே நீங்கியது. நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராயுடு சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். அத்தொடரில் இந்திய அணி சார்பாக அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.

கேதர் ஜாதவின் ஆல்-ரவுண்டர் திரன் இந்திய அணிக்கு மிகுந்த பலத்தை சேர்க்கிறது. பேட்டிங்கிலும் சரி பந்துவீச்சிலும் சரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கேதார் ஜாதவ். சில முக்கியமான பார்ட்னர் ஷிப்களை உடைக்க கேதார் ஜாதவ் இந்திய அணிக்கு ஒரு துருப்புச் சீட்டாக உள்ளார். தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை முடித்து வைக்கும் ஒரு நல்ல ஃபினிஷராக இந்திய அணியில் செயல்படுகிறார்.

இந்திய அணி தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் திகழ்கிறது. பெரும்பாலும் தற்போது உள்ள இந்திய அணியே 2019 உலகக் கோப்பைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#4.இந்திய பௌலர்களின் சிறப்பான பந்து வீச்சு

They have tremendous form
They have tremendous form

இந்த இரு வெளிநாட்டு தொடர்களிலும் மற்றொரு சிறப்பான நிகழ்வு என்னவென்றால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு.ஆஸ்திரேலிய டெஸ்ட்டில் இந்திய அணியின் மூவேந்தர்கள் முகமது ஷமி, பூம்ரா , இஷாந்த் சர்மா போன்றோர் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களான ஷமி, பூம்ரா , இஷாந்த் ஷர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வரலாற்று டெஸ்ட் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். இந்த பௌலிங் குழுதான் உலகின் சிறந்த பௌலிங் குழுவாக தற்போது விளங்குகிறது. எந்த வகையான பேட்டிங் ஆர்டராக இருந்தாலும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை வாய்ந்தவர்களாக மூவேந்தர்கள் விளங்குகிறனர்.

ஃபிட்னஸ் மற்றும் ஆட்டத்திறனில் திணறிக் கொண்டிருந்த புவனேஸ்வர் குமார் இந்த இரு வெளிநாட்டு தொடர்களிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளனர். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார். நியூசிலாந்து தொடரில் புவனேஸ்வர் குமார் , முகமது ஷமி-யுடன் இனைந்து சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளார். இந்திய அணியின் 4-1 என்ற வெற்றிக்கு காரணமாகவும் அமைந்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தி வருகின்றனர். இந்த இரு தொடர்களிலும் தங்களது பணியினை செம்மையாக செய்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா , குல்தீப் யாதவ் மற்றும் சஹால்.

#1.இந்திய தொடக்கம் விராட் கோலியை நம்பி இல்லை

Cheteshwar Pujara - Perhaps the biggest positive
Cheteshwar Pujara - Perhaps the biggest positive

இரு வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய நன்மை , அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் அற்புதமான தொடக்க ஆட்டக்காரர்கள் தான். இந்திய அணி கோலியை நம்பியே இல்லை என இந்த இரு தொடர்களிலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களை நிருபித்து உள்ளனர்.

புஜாராவை வசைபாடியோர்களின் வாயை அடைக்கும் விதமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என இரு நாடுகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு கோலி மட்டும் காரணமல்ல. அணியின் முழு ஒத்துழைப்பே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகும்.

2014ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடியதை போலவே 2018-19 ல் நடந்த டெஸ்ட் தொடரில் புஜாரா விளையாடியுள்ளார். தனது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்தி டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் தொடர் ஆட்டநாயகன் விருதினையும் வென்று இந்திய வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியில் சாதனை படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு தொடர்களுமே இந்திய அணியின் பேட்டிங் வலிமையை நிருபிக்க கிடைத்த ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது .

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now