இந்தியா vs ஆஸ்திரேலியா 2019: ரோகித் சர்மா இன்னும் 46 ரன்கள் அடித்தால் புதிய மைல்கல்லை அடைவார்.

Rohit Sharma
Rohit Sharma

நடந்தது என்ன?

இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இன்னும் 46 ரன்கள் விளாசினால் 8000 சர்வதேச ரன்களை கடக்க போகிறார். இதன் மூலம் உலகின் 31வது வீரராக ரோகித் சர்மா இந்த மைல்கல்லை அடையவிருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடர் இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மா-விற்கு புதிய மைல்கல்கள் தொடராக அமைந்துள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் சர்வதேச போட்டிகளில் அதிகவேகமாக 350 சிக்ஸர்களை விளாசியவர் என்ற மைல்கல்லை ஏற்கனவே இவர் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னணி

2013 முதல் இந்திய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி அசத்தி வரும் இவர் தனது ஆட்டத்திறனை மிகவும் அதிகமாகவே மெருகேற்றியுள்ளார். உலக கிரிக்கெட்டில் ஒரு முக்கிய பேட்ஸ்மேனாக திகழந்து வரும் இவர் ஒருநாள் போட்டிகளில் 47.34 என்ற சராசரியையும், 88.20 ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ் நின்று விளையாடும் திறமை பெற்ற ரோகித் சர்மா 3 இரட்டை சதங்களை குவித்துள்ளார். இதில் 2 இரட்டை சதங்கள் இலங்கை அணிக்கு எதிராக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் மார்ச் 10 அன்று மொகாலியில் நடந்த ஒருநாள் போட்டியில் 95 ரன்களை குவித்தார். மார்ச் 13 அன்று டெல்லியில் நடைபெறவுள்ள போட்டியில் 8000 சர்வதேச ரன்களை கடந்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதைக்கரு

இதுவரை 8 இந்திய பேட்ஸ்மேன்கள் சர்வதேச கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்துள்ளனர். இதன்மூலம் ஒரு சர்வதேச அணியில் 8000 சர்வதேச ரன்களை குவித்த அதிக வீரர்களை கொண்ட அணியாக இந்திய அணி திகழ்கிறது. கடைசியாக 8000 சர்வதேச ரன்களை கடந்தவர் இந்திய கேப்டன் விராட் கோலி. இவர் இதற்கு 175 சர்வதேச இன்னிங்ஸை எடுத்துக் கொண்டார். டெல்லியில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியில் ரோகித் 46 ரன்கள் குவித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 8000+ ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை முன்னாள் இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலி-யுடன் பகிர்ந்து கொள்வார்.

ரோகித் சர்மா தற்போது சர்வதேச ஓடிஐ பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.

சிறந்த தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கடந்த வருடம் செப்டம்பர் 28ல் தான் 181 இன்னிங்ஸ் விளையாடி 7000 சர்வதேச ரன்களை விளாசினார். அதற்கடுத்த 18 இன்னிங்ஸிலேயே ரோகித் சர்மா 956 ரன்களை குவித்துள்ளார். இதே உத்வேகத்துடன் ரோகித் சர்மா செயல்பட்டால் மிகுவும் குறைந்த இன்னிங்ஸிலேயே 10,000 சர்வதேச ரன்களை கூடிய விரைவில் எட்டி விடுவார்.

அடுத்தது என்ன?

டெல்லியில் மார்ச் 13 அன்று ரோகித் சர்மா இந்த 46 ரன்களை அடிக்கத் தவறினால் ஜீன் 5 வரை காத்திருக்க வேண்டும். ஜீன் 5 அன்று இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் தனது முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கவுள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil