#2 மிடில் ஆர்டர்

அம்பாத்தி ராயுடு இந்த ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டரில் மிகவும் தடுமாறி வருகிறார். முதல் 3 ஒருநாள் போட்டிகளில் இவரது ரன்கள் 13, 12, மற்றும் 1. எனவே ராயுடுவை 4வது ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சங்கரை நம்பர்-4 வரிசையில் களமிறக்கலாம். ஏனெனில் இந்த ஒருநாள் தொடரில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை இவர் வொளிபடுத்தியுள்ளார். ராஞ்சி ஒருநாள் போட்டியில் சற்று சிறப்பான ரன்களை குவித்தார். இவரை சற்று முன்னதாக களமிறக்கினால் சிறிது நன்றாக நின்று நிதானமாக விளையாடி ஆட்டத்திறனை வெளிபடுத்துவார். எனவே விஜய் சங்கரை இந்திய அணி 4வது இடத்தில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி கடைசி இரு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்புள்ளது. இவர் நம்பர்-5 பேட்டிங் வரிசையில் களமிறக்கப்படுவார். இவர் இந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் 2019 உலகக் கோப்பை அணியில் இடம்பெறம்பெறுவார். கேதார் ஜாதவ் நம்பர்-6 பேட்ஸ்மேனாக களமிறங்குவார். இவருக்கு இந்த ஓடிஐ தொடர் சிறப்பாக அமைந்தது. சில விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் முதல் ஒருநாள் போட்டியில் 81 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.