இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் நூலிழையில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் சர்வதேச டி20 போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணி 4வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது. ஜஸ்பிரிட் பூம்ரா 19வது ஓவரை சிறப்பாக வீசினார். இதனால் இந்திய அணி 1-0 என வென்று முன்னிலை வகிக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி ஓவரை வீச வந்த அனுபவ வீரர் உமேஷ் யாதவ் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கட்டுபடுத்த முடியாமல் ரன்களை வாரி வழங்கினார். இதன் மூலம் கடைசி 6 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற தேவையான 14 ரன்களும் வந்தது. இந்திய அணியின் பேட்டிங் மிகவும் சுமாரகவே இருந்தது.கே.எல்.ராகுலின் பேட்டிங் மட்டுமே சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது.மற்ற பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பினர்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 127 என்ற சுமாரன ரன்களை அடித்தது.இந்த இலக்கை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் நெருங்க முடியாத அளவிற்கு இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது.ஆனால் கடைசி ஓவரில் உமேஷ் யாதவின் சொதப்பலால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இரண்டாவது டி20 போட்டி பெங்களூரில் பிப்ரவரி 27 அன்று நடைபெறவுள்ளது.முதல் டி20யில் ஏற்பட்ட தோல்வியால் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.
நாம் இங்கு இரண்டாவது டி20 போட்டியில் இந்திய ஆடும்XIல் ஏற்டவுள்ள மாற்றங்கள் பற்றி காண்போம்.
#1 தொடக்க ஆட்டக்காரர்கள்: ஷிகார்தவான்,கே.எல்.ராகுல்,விராட் கோலி
கே.எல்.ராகுல் தமக்கு தொடக்க வரிசையில் அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான அரைசதத்தை முதல் டி20யில் அடித்தார். கே.எல்.ராகுல் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணி தற்போது மாற்று தொடக்க வீரரை தேடிக் கொண்டிருப்பதால் இந்த ஆஸ்திரேலிய தொடரில் அனைத்து போட்டிகளிலும் இவருக்கு வாயப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கே.எல்.ராகுலுடன் மற்றொரு தொடக்க வீரராக ரோகித் சர்மா மற்றும் தவான் சுழற்சி முறையில் களமிறக்கப்படுவர்.முதல் டி20யில் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இரண்டாவது டி20 போட்டியில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனிவரும் போட்டிகளில் ரோகித் ஷர்மாவிற்கு ஓய்வளிக்கப்படும். இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஏற்கனவே போதுமான ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டதால் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். ஆனால் நம்பர்-3 பேட்ஸ்மேனாக களமிறங்குவாரா அல்லது நம்பர்-4 பேட்ஸ்மேனாக களமிறங்குவார என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. விஜய் சங்கர் இந்திய ஆடும் XI-ல் இடம்பெற்றால் விராட் கோலியின் பேட்டிங் வரிசையான நம்பர்-3ல் களமிறக்கப்படுவார்.
விஜய் சங்கர் தற்போது இந்திய மிடில் ஆர்டரில் தேவையான ஒரு பேட்ஸ்மேன் ஆவார். ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியில் இல்லாத நிலையில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் வேண்டுகோளாகும். எனவே கேப்டன் விராட் கோலி , விஜய் சங்கரின் இடத்தை 2வது டி20 போட்டியில் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.