2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத உள்ளன. சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளுமே ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டு திகழும் அணியாகும். இந்த இரு பெரும் அணிகளுக்கு கேப்டன்களாக உலகக் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலி உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சாதித்த அணியாகும். இதுவரை நடந்த 11 ஐபிஎல் சீசனில் 9 சீசனில் பங்கேற்று 3 முறை கோப்பைகளை வென்றுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் எப்பொழுதுமே இந்த தொடரின் அனைவரின் விருப்ப அணியாக திகழ்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விட அதிக சாதனைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் 22 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 14 போட்டிகளில் சென்னை அணி வென்றுள்ளது. தனது சொந்த மண்ணில் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்ள இருக்கிறது. எனவே எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுமுனையில் சில மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் வரலாற்றை மாற்றி எழுதும் அணியாக வலிமையுடன் திகழ்கிறது. பெங்களூரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு சிறிது கூட பற்றாக்குறை கிடையாது. இந்நாளில் எவ்வளவு வலிமையான அணியையும் ஊதித் தள்ளும் அணியாக திகழ்கிறது பெங்களூரு.
ஐபிஎல் தொடரின் 12வது சீசனில் முதல் போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்தும் என்பதற்கான 3 காரணங்களை காண்போம்.
#1 விராட் கோலியின் அதிரடி ஆட்டத்திறன்
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் விராட் கோலி. ஒவ்வொரு அணியிலும் விராட் கோலி போன்று பேட்ஸ்மேன்கள் இருந்தால் கண்டிப்பாக அந்த அணி அரை சதவீதம் வெற்றி பெற்றது போல்தான் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வளவு வலிமை வாய்ந்த பேட்ஸ்மேன் இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். ஆனால் 2019 ஐபிஎல் சீசனில் இதனை மாற்றி எழுதவார் என நம்பப்படுகிறது.
தொடக்க போட்டியில் விராட் கோலி எதிர்கொள்ளும் சென்னை அணியானது ஐபிஎல் தொடரில் பங்குபெறும் ஒவ்வொரு அணிகளையும் அச்சுறுத்தும் நோக்கில் செயல்படும். எம்.எஸ்.தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தொடக்கத்திலேயே விராட் கோலியை வீழத்த திட்டமிடுவார்கள். ஏனெனில் விராட் கோலி நன்றாக நின்று விளையாட ஆரம்பித்தால் வீழ்த்துவது மிகவும் கடினமாகும்.
எம்.எஸ்.தோனி ஒரு தந்திரமான கேப்டன். விராட் கோலி முழு ஆட்டத்திறனை வெளிபடுத்தினால் அனைத்து தந்திரங்களும் தகர்க்கப்படும். விராட் கோலி தனி ஒருவராக நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் வல்லவர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான முதல் போட்டியில் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.