ஐபிஎல் 2019: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இவ்வருட ஐபிஎல் தொடர் மோசமாக அமைந்ததற்கான 3 காரணங்கள்

3 reasons why this season might be devastating for RCB (AB Devillers & Virat kholi)
3 reasons why this season might be devastating for RCB (AB Devillers & Virat kholi)

2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளி அட்டவனையில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அணியில் உள்ள வீரர்களின் மோசமான ஆட்டத்திறனே ஆகும்.

இந்த நிலை தொடர்ந்தால் இந்த ஐபிஎல் சீசனிலும் பெங்களூரு அணி கடைசி இடத்திற்கு தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. பெங்களூரு அணியின் இந்த மோசமான ஆட்டம் அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பெரும் ஏமாற்றமாக இருந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு உலகக் கோப்பையில் பங்கேற்பார். ஆனால் ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகள் அவரது நம்பிக்கையை முழுவதுமாக பாதிக்கும் என தெரிகிறது. இனிவரும் போட்டிகளிலாவது தங்களது ஆட்டத்திறனை பெங்களூரு அணி வெளிபடுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன. இருப்பினும் தொடர் தோல்விகள் வீரர்களின் மனநிலையை மிகவும் பாதித்திருக்கும்.

#3 அனுபவ இந்திய வீரர்கள் என யாரும் அணியில் இல்லாதது

Lack of experienced Indian players & standing players. Other IPL Team's have Enough Experienced Indian players & standing players (Chetishwar pujara)
Lack of experienced Indian players & standing players. Other IPL Team's have Enough Experienced Indian players & standing players (Chetishwar pujara)

பெங்களூரு அணியில் அனுபவ இந்திய வீரர்கள் என்று பார்த்தால் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அணியில் ஒரு சில வீரர்களை தவிர பெரும்பாலான இந்திய வீரர்கள் அனுபவமில்லா வீரர்களே அதிகம் உள்ளனர். உள்ளூர் ஆட்டத்தை வைத்து இளம் வீரர்களாக ஏலத்தில் வாங்கியது பெங்களூரு அணி. ஆனால் ஐபிஎல் தொடரில் அந்த வீரர்கள் தங்களை நிறுபிக்கவில்லை.

மற்ற ஐபிஎல் அணிகளுடன் பெங்களூரு அணியை ஒப்பிடுகையில் அனுபவ இந்திய வீரர்கள் மிகவும் குறைவு. இது இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருந்தாலும், அனுபவ வீரர்களின் வழிநடத்துதல் இல்லாமல் ஒரு அணி களமிறங்கினால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய கேடாகவே இருக்கும்.

அக்ஸிப் நாத், சிவம் தூபே மற்றும் பிரயாஸ் ரே பார்மன் போன்றோர் இளம் சிறந்த கிரிக்கெட் வீரர்கள். ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்கும் திறமை இந்திய இளம் வீரர்களுக்கு அவ்வளவாக இல்லை. இதற்கு சரியான உதாரணமாக பெங்களூரு அணியின் இளம் வீரர்களை கூறலாம்.

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவ வீரர்களுடன் களமிறங்கியே சாதித்துள்ளார். எம்.எஸ்.தோனி, ரோகித் சர்மா, ரகானே, தவான், புஜாரா போன்ற அனுபவ வீரர்களின் அனுபவம் விராட் கோலிக்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான பெங்களுரு அணியில் அனுபவ வீரர்கள் அவ்வளவாக இல்லாததால் விராட் கோலியால் கூட சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்த இயலவில்லை. புஜாரா மற்றும் திவாரி போன்ற இந்திய நிலையான வீர்களை பெங்களூரு அணி ஏலத்தில் வாங்கியிருந்தால் சிறப்பான ஆட்டம் பெங்களூரு அணிக்கு கிடைத்திருக்கும்.

#2 வெளிநாட்டு வீரர்களின் மோசமான ஆட்டத்திறன்

Shimron Hetmeyer may need some time to settle
Shimron Hetmeyer may need some time to settle

வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் எப்பொழுதும் சிறப்பான அட்டத்தை வெளிபடுத்துவார்கள். வெளிநாட்டு வீரர்கள் தாங்கள் விளையாடும் அணிக்கு தங்களது அதிரடி ஆட்டத்தை வழங்குவர். ஒரு அணியில் உள்ள 4 வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு அந்த அணியின் வெற்றிக்கு சற்று அதிகமாகவே இருக்கும்.

இந்த 4 வீரர்கள் ஒவ்வொரு இடத்திலும் சிறந்த வீரர்களாக திகழ்வார்கள். பெங்களூரு அணியில் ஏபி டிவில்லியர்ஸை தவிர மற்ற எந்த வீரர்களின் ஆட்டத்திறனும் சிறப்பானதாக இந்த ஐபிஎல் தொடரில் இல்லை. வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு இல்லாதது அந்த அணிக்கு அமைந்த மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

மொய்ன் அலி மற்றும் காலின் டி கிரான்ட் ஹாம் கடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்தனர். ஷிம்ரன் ஹெட்மயர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஐபிஎல் தொடரில் வெளிபடுத்த தவறினார். ஹன்ரிஜ் கிளஸ்டனுக்கு வாய்ப்புகள் ஏதும் அளிக்கப்படவில்லை.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நாதன் குல்டர் நில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் பெங்களூரு அணியில் இன்னும் இடம்பெறவில்லை. டிம் சௌதி ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர். மற்ற பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடுகையில் இவரது பந்துவீச்சு சற்று சிறப்பான முறையில் இருக்கும்.

தற்போது ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன் போன்ற அனுபவ கிரிக்கெட் வீரர்கள் பெங்களூரு அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிறந்த டி20 பேட்ஸ்மேன் மெக்கல்லமை இவ்வருட ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி அணியிலிருந்து நீக்கியது.

#1 அனைத்து போட்டிகளிலும் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸையே நம்பியிருக்கும் பெங்களூரு அணி

when it comes to pressure situations these two pillers of the RCB have to absorb all those pressure by themselves
when it comes to pressure situations these two pillers of the RCB have to absorb all those pressure by themselves

விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள். எதிரணி யாராக இருந்தாலும் அவர்களது பந்துவீச்சை சிதைக்கக் கூடிய வலிமை பெற்றுள்ளனர். அணியின் தேவையறிந்து ஆட்டத்திறனை வெளிபடுத்தும் திறமை உடையவர்கள்.

இருப்பினும் பெங்களூரு அணியில் நிலையான பேட்டிங் என யாரும் இல்லாத நிலையில் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் மீது மிகுந்த அழுத்தம் தரப்படுகிறது. முக்கியமாக இவர்களது விக்கெட்டுகளே அதிகம் குறிவைக்கப்படுகிறது. முதல் 3 போட்டிகளில் இவர்களது பங்களிப்பே பெங்களூரு அணிக்கு அதிகமாக இருந்திருக்கும்.

விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். சிறந்த பேட்டிங் மற்றும் பௌலிங் இல்லாத அணியாக பெங்களூரு அணி திகழ்கிறது. இந்த நிலையில் இவர்களது ஆட்டம் அந்த அணிக்கு சிறிது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

விராட் மற்றும் ஏபிடி தவீர அனுபவ வீரர்கள் என அந்த அணியில் அவ்வளவாக இல்லை. இவர்களது அனுபவத்தையும் மற்ற இளம் வீரர்கள் பயன்படுத்தி கொள்ளவும் இல்லை. டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்களான இவர்களுக்கு பந்துவீச எந்த பௌலரும் சற்று தடுமாறுவர். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட காரணங்களே பெங்களூரு அணிக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

Quick Links