ஐபிஎல் 2019: தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ள 5 நம்பிக்கைக்குரிய இந்திய வீரர்கள்

Which Indian debutant will make the most impact?
Which Indian debutant will make the most impact?

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் உலகின் மிக பிரபலமான டி20 தொடராக பார்க்கப்படுகிறது. இந்த டி20 தொடரில்தான் உலகின் தலைசிறந்த டி20 சூப்பர் ஸ்டார்களை அதிகம் காணலாம். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த தொடரில் வீரர்கள் இடம்பிடிக்க கடும் தவமிருப்பர். அத்துடன் இளம் இந்திய வீரர்கள் சர்வதேச அணியில் இடம்பிடிக்க ஒரு வழித்தடமாக ஐபிஎல் தொடர் அமைகிறது.

ஹர்திக் பாண்டியா, ஜாஸ்பிரிட் பூம்ரா, ஷிரேயாஸ் ஐயர் போன்றோர் ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்துதான் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடித்தனர். நாம் இந்த கட்டுரையில் தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள 5 இளம் வீரர்கள் பற்றி காண்போம். இந்த வீரர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுரைக்கு செல்லும் முன் 2019 ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள சில இளம் வீரர்களின் பட்டியலை காண்போம்: அன்குஸ் பெய்ன்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்), ஷஷன்க் சிங் (ராஜஸ்தான் ராயல்ஸ்), பிரித்வி ராஜ் யாரா (கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்), ரூத்ராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்), பிரயாஸ் ரே பார்மன் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), அனமோல்பிரிட் சிங் (மும்பை இந்தியன்ஸ்)

நாம் இங்கு தங்களது முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள 5 இளம் வீரர்களை பற்றி காண்போம்:

#5 தேவ்தத் படிக்கல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

Devdutt Padikkal
Devdutt Padikkal

தேவ்தத் படிக்கல் பெங்களூரு அணியில் அடிப்படை விலையான 20 இலட்சத்திற்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் 2018 கர்நாடக பிரிமியர் லீக் தொடரில் பெலேரி டஸ்கர் அணிக்காக 4 போட்டிகளில் களமிறங்கி 124 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்காக சில போட்டிகளில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கேரளாவில் பிறந்த இவர் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். 18 வயதுடைய இளம் பேட்ஸ்மேனான இவர் பேட்டிங்கில் அதிக நம்பிக்கையுடன் விளையாடுவார். இந்த இளம் வீரர் வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆவார்.

படிக்கல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க பேட்ஸ்மேனான இவர் இந்த ஐபிஎல் தொடரில் தன்னை நிருபிப்பார் எனத் தெரிகிறது.

#4 ஹர்பிரிட் பிரார் (கிங்ஸ் XI பஞ்சாப்)

Harpreet Brar
Harpreet Brar

ஹர்பிரிட் பிரார் அடிப்படை விலையான 20 இலட்சத்திற்கு கிங்ஸ் XI பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். மோகாவில் பிறந்த ஆல்-ரவுண்டரான இவர் இளம் பஞ்சாப் அணியில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

23வயதான இவரின் சிறப்பான ஆட்டம் மற்றும் நுண்ணிய பந்துவீச்சே ஐபிஎல் தொடரில் இவர் விளையாட காரணமாக இருந்தது. தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கிரிக்கெட்டில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால் கனடாவில் தனது சகோதரியுடன் சென்று ஏதேனும் வேலைக்கு சேரலாம் என திட்டமிட்டிருந்தார். ஆனால் தக்கசமயத்தில் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மொகாலி மைதானத்தில் 2 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் பந்து வீச்சு கணிக்க முடியாத வகையிலும், அதிகமாக சுழன்று திசை மாறும் வகையிலும் இருக்கும். அத்துடன் இந்த இளம் வீரர் நீண்ட சிக்ஸர்களை விளாசும் திறமை படைத்துள்ளார்.

சிறந்த வீரரான இவர் உள்ளுர் கிரிக்கெட்டில் 7 வருடங்களாக பங்கேற்று கடைசியாக பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் 2019ல் பங்கேற்க உள்ளார். இவருக்கு வாயப்பளித்தால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

#3 ப்ரப்ஸிம்ரன் சிங் ( கிங்ஸ் XI பஞ்சாப்)

Prabhsimran Singh
Prabhsimran Singh

ப்ரப்ஸிம்ரன் சிங் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக சற்று அதிக தொகயாக 4.8 கோடிக்கு வாங்கப்பட்டார். 18 வயதான இவர் ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். 23 வயதிற்குட்பட்டோருக்கான மாவட்ட தொடரில் 301 பந்துகளை எதிர்கொண்டு 298 ரன்களை குவித்ததன் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை தம் பக்கம் இழுத்தார். இந்த சிறப்பான ஆட்டம் அரையிறுதியில் அமிர்தசரஸ் அணிக்கு எதிராக வந்தது.

இதன் மூலம் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய தேசிய அணியில் இடம் பிடித்தார். இவரது சிறப்பான பங்களிப்பினால் சமீபத்தில் முடிந்த ஆசிய எமர்ஜிங் கோப்பையில் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. இவரது உறவினர் சகோதரரான அன்மோல் பிரிட் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2019 ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.

ப்ரப்ஸிம்ரன் சிங் முன்னாஸ் ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான ஆடம் கில்கிறிஸ்டை போல் அதிரடியாக விளையாடும் திறமை பெற்றுள்ளார். இவர் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பஞ்சாப் அணிக்காக அவ்வளவாக சோபிக்கவில்லை. மும்பை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் அரைசதம் விளாசினார்.

வலதுகை பேட்ஸ்மேனான இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் அதிகம் மதிப்பிடப்பட்டுள்ளார். லோகேஷ் ராகுல் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் விக்கெட் கீப்பங்கில் சிறந்தவராக இல்லை. ப்ரப்ஸிம்ரன் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடி பேட்டிங்கை நிச்சயமாக வெளிபடுத்துவார்.

#2 சிவம் தூபே (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

Shivam dhubae
Shivam dhubae

பெங்களூரு அணி சிவம் தூபேவை 5 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார். மும்பையில் பிறந்த ஆல்-ரவுண்டரான இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முஷ்டாக் அலி கோப்பையில் 2 போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

25 வயதான இவர் முதல்தர கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அசத்தியுள்ளார். சிவம் தூபே ரஞ்சிக் கோப்பையில் பரோடா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 6 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசினார். அதிகம் மதிப்பிடப்பட்டுள்ள இவர் மும்பை பிரிமியர் டி20 லீக்கில் பிரவின் தாம்பே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசினார்.

சிவம் தூபே பெங்களூரு அணியில் 6வது அல்லது 7வது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டு ஃபினிஸராக திகழ்வார் என தெரிகிறது. இவர் அதிகமாக கபில் தேவுடன் ஒப்பிடப்படுகிறார். தென்னாப்பிரிக்கா ஆல்-ரவுண்டர் ஜாக்கஸ் காலீஸ் போன்று சிவம் தூபே செயல்பட்டு பெங்களூரு அணிக்காக தனது ஆட்டத்தை 2019 ஐபிஎல் தொடரில் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் 8 ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடி 52.66 சராசரியுடன் 632 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் பௌலிங்கில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சிறப்பான ஆல்-ரவுண்டர் சென்னை அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக களமிறங்குவார் என தெரிகிறது. ஏ.பி.டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலியின் அனுபவத்தை பெற இவருக்கு மிகவும் உதவிகரமாக இந்த ஐபிஎல் தொடர் சிவம் தூபே-விற்கு அமையும்.

#1 வரூன் சக்ரவர்த்தி (கிங்ஸ் XI பஞ்சாப்)

Most Expensive Debuted IPL Player Mr. varun chakravarti (8.4 Cr)
Most Expensive Debuted IPL Player Mr. varun chakravarti (8.4 Cr)

வரூன் சக்ரவர்த்தி கிங்ஸ் XI பஞ்சாப் அணியால் மிகவும் அதிகத் தொகயான 8.4 கோடிக்கு 2019 ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்டுள்ளார். முன்னாள் கட்டிடக்கலை நிபுணரான இவர் கிரிக்கெட்டில் சாதித்த கதை கேட்பவர்கள் மனதை உருக்கும் வகையில் உள்ளது.

தொடக்கத்தில் விக்கெட் கீப்பர் மற்றும் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்த இவர் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் சுழற்பந்து வீச்சாளராக தன்னை மாற்றி 7 கோணங்களில் வீசும் திறமை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் 2018-19 விஜய் ஹசாரே கோப்பையில் 9 போட்டிகளில் பங்கேற்று 16.68 சராசரி மற்றும் 4.23 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் அத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இவர் சுழற்பந்து வீச்சை டென்னிஸ் பந்தில்தான் விளையாட கற்றுக் கொண்டதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 27வயதான இவர் இதே வித்தையை கிரிக்கெட் பந்திலும் முயற்சித்து வெற்றி கண்டார்.

பௌலிங் ஆல்-ரவுண்டரான இவர் கடந்த ஐபிஎல் சீசனில் பயிற்சி ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்களுக்கு பந்து வீசி உள்ளதால் அவர்களது குறைகளை இவர் அறிந்திருப்பார்.

முஜிப்புற் ரகுமான், அஸ்வின், ஹர்பிரிட் பிரார், வரூன் சக்ரவர்த்தி ஆகியோரை கொண்டு பஞ்சாப் அணி சிறந்த சுழற்பந்து வீச்சுடன் 2019 ஐபிஎல் தொடரில் திகழ்கிறது.

Quick Links