இந்திய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டவரான தோனியை அடையாளமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவரால் தான் ஐபிஎல் தொடரே இந்தியாவிற்கு வர காரணம் என்றும் சொல்லலாம். இவரது தலைமையில் T20 உலக கோப்பையை இந்திய அணி வென்று சாதித்த அந்த தருணத்தில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவின்பேரால் உருவாக்கப்பட்டது இந்த ஐபிஎல் எனலாம். இந்தியா கிரிக்கெட்டிற்க்காக சாதித்த தோனி, சென்னை அணிக்காக ஒரு படி மேலே போய் சாதித்துள்ளார் எனலாம். சென்னை அணி, தான் பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது மட்டுமின்றி ஏழு முறை பைனலுக்கு முன்னேறி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது.
சிறிய இரண்டாண்டு தடைக்கு பின் திரும்பிய CSK அணிக்கு கடந்த சீசன் உணர்வுபூர்வமாக அமைந்தது. இதில் பலரின் விமர்சனங்களை பொய்யாக்கும் விதத்தில் அணியை மீண்டும் கோப்பையை வெல்ல வைத்தார் தோனி. இந்த முறை ஏலத்தில் வேகப்பந்துவீச்சை மெருகேற்றும் நோக்கில் பங்குகொண்டது அதில் முன்னாள் CSK வீரரான மோஹித் சர்மாவை மீண்டும் வாங்கியது.
அணியின் விபரம்:
பேட்ஸ்மேன்கள்:
சுரேஷ் ரெய்னா, பாப் டூப்ளஸிஸ், எம்.விஜய், அம்பட்டி ராயுடு, துருவ் சோரே.
விக்கெட் கீப்பர்கள்:
எம்.எஸ்.தோனி, ஜெகதீஷன், சாம் பில்லிங்ஸ்.
ஆல்ரவுண்டர்கள்:
ரவீந்திர ஜடேஜா, டேவிட் வில்லி, டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், சி.பிஷ்னாய், மிட்சேல் சாண்ட்னர்.
பௌலர்கள்:
இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், மோஹித் சர்மா, கரண் சர்மா, தீபக் சஹார், கேஎம்.ஆசிப், மோனு குமார், ஷார்துல் தாகூர்,
லுங்கி ங்கிடி [ காயம் காரணமாக தற்போது அவர் விலகியுள்ளார் ]
அணியின் கலவை:
இந்த அணியின் வீரர்கள் பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை. அனுபவ வீரர்கள் நிறைந்து காணப்படும் ஒரு நிலையான அணி. நெருக்கடியான சூழ்நிலையில் தனி ஒருவராக வெற்றி தேடி தருவதில் தனி ஒரு வீரரும் வல்லவர்கள். இதை நம்மால் கடந்த சீசனில் பார்க்கமுடிந்தது. குறிப்பாக அணியில் சுழற்பந்துவீச்சுக்கு பஞ்சமில்லை என்பதால் அதை எப்படி தோனி கையாளப்போகிறார் என்பது தனி சிறப்பு. காரணம் சென்னை சேப்பாக் ஆடுகளம் சுழற்பந்துவீசிச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதாகும்.
துவக்க வீரர்கள்:[1,2]
ஷேன் வாட்சன், பாப் டூப்ளஸிஸ்/எம்.விஜய்/அம்பத்தி ராயுடு.
பலம்: துவக்க வீரராக வாட்சன் களமிறங்குவது உறுதி. டூப்ளஸிஸ் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடி வருவதால் அம்பத்தி ராயுடு அல்லது விஜய் களமிறங்கலாம். வாட்சன், ராயுடு ஜோடி மிகவும் அபாயகரமான ஜோடி எனலாம். கடந்த சீசனில் அசத்தலாக ரன்களை குவித்து தள்ளியது இந்த இணை.
பலவீனம்: எம்.விஜயின் பார்மை பலவீனம் என்று சொல்லலாம். அவரை களமிறக்கபடுவது கொஞ்சம் கேள்விக்குறியான் விஷயம் தான்.
அதுமட்டுமில்லாமல் ராயுடு சமீபகாலமாக ஒருநாள் தொடர்களில் சொதப்பி வருகிறார், அவர் இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்தி கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மேலும் டூப்ளசிஸ் தேசிய அணிக்காக விளையாட தாயகம் திரும்பினால் ஒரு அனுபவ வீரரை இழக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
துவக்க வீரர்கள் மதிப்பெண் : 8/10