ஐபிஎல் ஏலத்தில் அணிகள் செய்த ஒரு தவறு

சென்னை சூப்பர் கிங்ஸ் 
சென்னை சூப்பர் கிங்ஸ் 

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான ஏலம் கடந்த செவ்வாய்கிழமை ஜெய்ப்பூர் நகரில் நடந்தது. ஏலத்தில் மொத்தம் 60 வீரர்கள் வாங்கப்பட்டனர்.

ஆச்சர்யமூட்டும் வகையில் நட்சத்திர வீரர்கள் மெக்கல்லம், ஸ்டெய்ன், மோர்னே மோர்கெல் ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை

2019ஆம் ஆண்டு உலக கோப்பை நடைபெறுவதால் வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.

இந்த தொகுப்பில் ஐபிஎல் ஏலத்தில் அணிகள் செய்த ஒரு தவறை பற்றி பார்ப்போம்

(குறிப்பு:- 5 அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களை வாங்கிய அணிகளை பற்றி மட்டுமே இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சில வீரர்களை அதிக விலைக்கு வாங்கியது

கிங்ஸ் லெவன் பஞ்சாப்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் போன்ற சூழல் பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ள நிலையில் பஞ்சாப் அணி ஏலத்தில் 8.4 கோடிக்கு வருண் சக்ரவர்திதியை வாங்கியது. 2019 உலக கோப்பை இந்திய அணிக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை. எனவே வருண் சக்ரவர்திதியை அதிக விலைக்கு வாங்கியது தவறான முடிவாக கருதப்படுகிறது.மேலும், மூன்றாவதாக ஒரு ஸ்பின்னரை பஞ்சாப் அணி ஆடும் 11-இல் சேர்க்க வாய்ப்பில்லை.

இங்கிலாந்து வீரர் சாம் கரனை 7.2 கோடி கொடுத்து வாங்கியது பஞ்சாப் அணி. அவர் இங்கிலாந்து நாட்டின் உலக கோப்பை போட்டி அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது .அவ்வாறு அவர் தேர்வு செய்யப்பட்டால், அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து பாதியில் விலக நேரிடும் .

ராஜஸ்தான் ராயல்ஸ் - சொதப்ப கூடிய வீர்ர்களை வாங்கியது

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் அணி ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான தருணத்தில் அதிகம் சொதப்ப கூடிய வீரர்களை வாங்கியுள்ளது. சென்ற வருடம் அந்த அணியில் விளையாடி சிறப்பாக செயல்படாத உனட்கட்டை ராஜஸ்தான் அணி 8.4 கோடிகள் கொடுத்து மீண்டும் வாங்கியுள்ளது.

மேலும் அந்த அணி ஐபிஎல் ஏலத்தில் வருண் ஆரோனை 2.2 கோடிக்கு வாங்கியுள்ளது. அவர் டி20 போட்டிகளில் அதிகம் அனுபவமில்லாதவர். மேலும் அவர் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் வீரர்களில் ஒருவர்.

ஆட்டத்தின் சிக்கலான தருணத்தில் சொதப்பக்கூடிய ஸ்டூவர்ட் பின்னி, தவல் குல்கர்னி,ஜெய்தேவ் உனத்கட், வருண் ஆரோன் போன்ற வீரர்கள் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருப்பது அந்த அணிக்கு தலைவலியை உண்டாக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அனுபவமில்லாத வெளிநாட்டு வீரர்களை வாங்கியது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன் அனுபவம் மிக்க வீரர்கள் ஸ்டார்க் மற்றும் ஜான்சானை விடுவித்தது. அந்த அணி ஐபிஎல் ஏலத்தில் அனுபவம் வாய்ந்த வீரரகளை வாங்க திட்டமிட்டது.

இருப்பினும் ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி லொக்கி பெர்குசன், அன்ரிச் நோர்ட்ஜெ , ஹாரி குர்னே போன்ற இந்திய ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத வீரர்களை வாங்கியது. அவர்களுக்கு பதில் கொல்கத்தா அணி மோர்னே மோர்கெல் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை வாங்கி இருக்கலாம்.

மோர்கெல் ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக விளையாடி அந்த அணி ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். கொல்கத்தா அணி அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு பந்துவீச்சாளரை வாங்காமல் தவறு செய்துவிட்டது போல தெரிகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சரியான வேகப்பந்துவீச்சாளரை வாங்கவில்லை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி,டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் உள்ளடக்கிய பெங்களூரு அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. ஆனால் சென்ற வருடம் பந்துவீச்சில் சொதப்பியதால் அந்த அணி ஐபிஎல் தொடரை வெல்ல முடியாமல் போனது.

அந்த அணியின் வேக பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் துல்லியமாக பந்துவீசாத காரணத்திலால் அந்த அணி பல போட்டிகளில் தோல்வி அடைந்தது.

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹெட்மேயர், சிவம் துபே போன்ற வீரர்களை வாங்கிய பெங்களூரு அணி தனது பலவீனமான வேகப்பந்து வீச்சை சரிசெய்ய தவறியது . இந்தக் குறையை அந்த அணி எவ்வாறு சரி செய்யும் என்பதை போட்டியில் காண்போம்

டெல்லி கேப்பிடல்ஸ் - அனுபவமில்லாத பௌலர்களை வாங்கியது

டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ்

ஐபிஎல் ஏலத்தில் அதிக வீரர்களை வாங்கிய அணி டெல்லி ஆகும். இருப்பினும் அந்த அணி ஏலத்தில் சரியான பந்துவீச்சாளர்களை வாங்கவில்லை.

அக்சார் படேல் நீங்கலாக டெல்லி அணி வாங்கிய பந்துவீச்சாளர்கள் அதிகம் அனுபவமில்லாதவர்கள். முகமது ஷமியை விடுவித்த டெல்லி அணி அவருக்கு பதில் கீமோ பால் மற்றும் நாத்து சிங்கை வாங்கியது. கீமோ பால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. நாத்து சிங் பெரிய தொடரில் விளையாடிய அனுபவமில்லாதவர்.

மேலும் டெல்லி அணி சமீப காலமாக டி20 போட்டிகள் அதிகம் விளையாடாத இஷாந்த் ஷர்மாவை வாங்கியுள்ளது. எனவே டெல்லி அணியின் பந்துவீச்சு கிறிஸ் மோரிஸ், கங்கிசொ ரபாடா, ட்ரெண்ட் போல்ட் போன்ற வீரர்களை பெரிதும் நம்பி உள்ளது

மும்பை இண்டியன்ஸ் - அக்சார் படேலை வாங்காதது

அக்சார் படேல் மும்பை அணிக்கு வலுசேர்த்திருப்பார்
அக்சார் படேல் மும்பை அணிக்கு வலுசேர்த்திருப்பார்

மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் அனுபவம் வாய்ந்த இந்திய வீரர் அக்சார் படேலை வாங்க தவறிவிட்டது. சென்ற வருடம் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தனது முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாக க்ருனால் பாண்டியா மற்றும் மாயன்க் மார்க்கண்டேவை களமிறங்கியது.

சென்ற வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் க்ருனால் பாண்டியா நிறைய ஓவர்கள் வீசவில்லை. மாயன்க் மார்க்கண்டே தொடரின் முதல் பாதியில் சிறப்பாக ஆடிய போதிலும் பிற்பாதியில் சரியாக விளையாடவில்லை .

அக்சார் படேல் மிடில் ஓவர்களில் துல்லியமாக பந்துவீசும் திறன் பெற்றவர். மேலும் அவர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பதிலும் வல்லவர்.அவரை ஐபிஎல் ஏலத்தில் வாங்கி இருந்தால், அவர் க்ருனால் பாண்டியா மற்றும் மார்கண்டேவுக்கு போட்டியாக இருந்திருப்பார் ,மேலும் அவர் மும்பை அணியின் சுழற்பந்துவீச்சை வலுபடுத்தியிருப்பார்.

எழுத்து- அமேய வைத்யா

மொழியாக்கம்- தினேஷ் சத்யா

Quick Links