ஐபிஎல் தொடர்: ரசிகர்களால் குறைவாக அறியப்பட்ட 5 ஐபிஎல் சாதனைகள்

முஸ்தபிஸுர் ரஹ்மான்
முஸ்தபிஸுர் ரஹ்மான்

#3. மனீஷ் பாண்டே மற்றும் பால் வால்டட்டி - சதம் அடித்த முதல் ஆன்-காப்ட்(uncapped) வீரர்கள்

மனீஷ் பாண்டே
மனீஷ் பாண்டே

2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தென்னாபிரிக்கா மண்ணில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்த பெங்களூர் மற்றும் ஹைதெராபாத் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறி தொடரை விறுவிறுப்பாகியது. கடைசியாக நடைபெற்ற 6 லீக் போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கடைசி லீக் போட்டியில் சூப்பர் ஹீரோவாக அமைந்தவர் மனீஷ் பாண்டே. அதுவரை அணியில் இடம்பெறாமல் வெளியில் அமரவைக்கப்பட்ட இவர், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தார். ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்தார்.

அதே போல அப்போதைய நிலையில் சதம் அடித்த முதல் அன்-காப்ட் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் பாண்டே. இந்த ஆட்டத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் மனீஷ் பாண்டே. 73 பந்துகள் விளையாடிய பாண்டே, 114 ரன்கள் குவித்தார். இதில் 10 பௌண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். இந்த போட்டியில் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பால் வால்டட்டி
பால் வால்டட்டி

அதன் பிறகு 3வது ஐபிஎல் சீசனில் பால் வால்டட்டி அடித்த சதமும் பெருமைக்குரியதே. சென்னை மற்றும் பஞ்சாப் அணிகர்களுக்கு இடையேயான போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 188 ரன்கள் எடுத்தது. பின்பு கடினமான இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே அதிரடியை ஆடினார் பால் வால்டட்டி. பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக 120 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 63 பந்துகள் ஆடிய இவர், 19 பௌண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்தார். அபாரமான ஆட்டத்தால் பஞ்சாப் அணிக்கு வெற்றி தேடி கொடுத்த வால்டட்டி, மனீஷ் பாண்டேவிற்கு பிறகு சதம் அடித்த மற்றொரு அன்-காப்ட் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர்களுக்கு பிறகு இந்த சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.