ஐபிஎல் தொடர்: ரசிகர்களால் குறைவாக அறியப்பட்ட 5 ஐபிஎல் சாதனைகள்

முஸ்தபிஸுர் ரஹ்மான்
முஸ்தபிஸுர் ரஹ்மான்

#2. அணில் கும்ப்ளே - இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தும் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர்

அணில் கும்ப்ளே
அணில் கும்ப்ளே

இந்திய அணிக்காக அதிகமான சர்வதேச விக்கெட்களை எடுத்த வீரர் என்ற பெருமை பெற்ற அணில் கும்ப்ளே, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் சீசனில் மிகச்சிறப்பாக பந்து வீசினார். இரண்டாவது சீசனின் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்து சிறப்பாக தொடங்கினார். இரண்டாவது சீசனில் பெங்களூரு அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கும்ப்ளே, அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். இறுதிப்போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் மோதிய பெங்களூர் அணிக்கு முதல் ஓவர் வீசிய கும்ப்ளே, 3வது பந்திலேயே எதிரணி கேப்டன் கில்கிறிஸ்டை வீழ்த்தினார்.

பின்பு வரிசையாக சைமண்ட்ஸ், ரோஹித் ஷர்மா மற்றும் வேணுகோபால் ராவ் விக்கெட்களை வீழ்த்தி ஹைதெராபாத் அணியை நிலைகொலையச்செய்தார். இப்போட்டியில் 16 ரன்கள் வழங்கி 4 விக்கெட் எடுத்த கும்பலே ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். ஆனால் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.

#1. யுவ்ராஜ் சிங் - ஒரே போட்டியில் அரை சதம் மற்றும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்

யுவ்ராஜ் சிங்
யுவ்ராஜ் சிங்

இந்திய அணி 28 வருடங்களுக்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த வீரர்களுள் ஒருவர் யுவ்ராஜ் சிங். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இத்தொடரின் தொடர்நாயகன் விருதை பெற்றவர். ஆனால் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இவரது செயல்பாடு மாறி மாறி தான் உள்ளது. இதுவரை 5 வெவ்வேறு அணிகளுக்காக எல்லா சீசனிலும் பங்குபெற்றுள்ளார். இருந்தாலும் இவரின் சாதனைகள் எண்ணில் அடங்காத ஒன்று. ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் அரை சதமும் அடித்து பின்பு அதே போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்து உலக சாதனை படைத்தார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவ்ராஜ், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் இச்சாதனையை நிகழ்த்தினார். முதலில் பந்து வீசிய பஞ்சாப் அணி, 144 ரன்களுக்கு பெங்களூரு அணியை சுருட்டியது. 145 எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் அடுத்து ஆடிய பஞ்சாப் அணிக்காக 34 பந்தில் 50 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர்களும், 3 பௌண்டரிகளும் அடங்கும். இருந்தாலும் இப்போட்டியில் பஞ்சாப் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதே மைதானத்தில் தான் யுவ்ராஜ் சிங் ஸ்டுவர்ட் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.