ஐபிஎல் சீசன்-11 ஐ பொறுத்தவரை முன்னாள் சாம்பியனான மும்பை அணி தனது ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணி கடந்த முறை ஐந்தாம் இடத்தையே பிடித்தது.
மூன்று முறை சாம்பியன் படத்தை வென்ற அணி இம்முறையும் வெல்ல முயற்சிக்கும். அதற்கான முதல் படி நாளை டிசம்பர் 18 நடக்கவிருக்கும் வீரர்களுக்கான ஏலத்தில் இருந்தே துவங்கும். மும்பை அணி தனது முக்கிய வீரர்களை தக்கவைத்து கொண்டது, இருப்பினும் தனது அணியில் எஞ்சியுள்ள இடங்களை நிரப்ப முழு வீச்சில் முயற்சிக்கும். ஜே.பி டுமினி, பேட் கம்மின்ஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான் போன்ற சிறந்த வீரர்கள் தனது அணியிலிருந்து மும்பை விடுவித்துள்ளது. தனது அணியில் 7 இடங்களை நிரப்ப 10.65 கோடி ரூபாய் மீதம் உள்ளது.
தக்கவைத்துள்ள வீரர்களின் விவரம்: ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீட் பும்ரா, க்ருனால் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், மாயன்க் மார்க்கண்டே, ராகுல் சாஹார், அணுகுள் ராய், சித்தேஸ் லாட், ஆதித்யா தாரே, இவான் லீவிஸ், கிரேன் பொல்லார்டு, பென் கட்டிங், மிட்செல் மெக்லெகன், ஆடம் மில்னே, ஜெசன் பெஹண்ட்ராப்.
குவின்டன் டிகாகை பெங்களூரு அணியிடம் மும்பை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி நாளைய ஏலத்தில் ஒரேவொரு வெளிநாட்டு வீரரை மட்டுமே வாங்க முடியும். மும்பை அணி வாங்க முயற்சிக்கும் வீரர்களின் விவரம் பின்வருமாறு.
5. கார்லொஸ் ப்ராத்வெயிட்
ப்ராத்வெயிட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் விடுவிக்கப்பட்டார். இந்த செய்தி ஐதராபாத் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த ப்ராத்வெயிட் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார். சன்ரைசர்ஸின் இழப்பு மும்பை அணிக்கு சாதகமாக அமையவிருக்கிறது.
ப்ராத்வெயிட் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன் மற்றும் டெத் ஓவர்ஸ் என அழைக்கப்படும் இன்னிங்சின் கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் வல்லமை கொண்டவர். கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் 170 ரன்கள், 168.32 என இமாலய ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கிரேன் பொல்லார்டு சிறந்த பார்மில் இல்லாத நிலையில் மும்பை அணிக்கு ப்ராத்வெயிட் நம்பிக்கை அளிப்பார் என எதிரப்பார்க்களாம்.
4. முகமது ஷமி
குவின்டன் டிகாகின் வருகையும் மற்றும் வெளிநாட்டு வீரர்களான லீவிஸ், பென் கட்டிங் மற்றும் பொல்லார்டு உள்ளதால் மும்பை அணியால் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை ப்ளேயிங் 11ல் இடம்பெற செய்வது கடினம். ஆகையால் மும்பை அணி பும்ராவிற்கு ஜோடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளரை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
அவ்விடத்தை நிரப்ப வல்லவர் முகமது ஷமி. டெல்லி அணியிலிருந்து காயம் காரணமாக கடந்த சீசன் நடுவில் விடுவிக்கப்பட்டார்.
ஷமி போன்ற வீரருக்கு தனது முழு திறமையை வெளிப்படுத்த இதுவே சிறந்த தருணமாகும்.
ஒரு கோடி ரூபாயை தனது ஆரம்ப விலையாக கொண்டுள்ள ஷமி அனைத்து அணியின் கவனத்தையும் ஈர்ப்பார். இருப்பினும் மும்பை அணி இவரை தனது அணியில் இடம்பெற செய்ய முயற்சிக்கும்.