ஸ்பின்னர்ஸ் - குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால்
சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இரு ஸ்பின் இரட்டையர்கள் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பெற்றிருப்பர். இரு சுழற்பந்து வீச்சாளர்களும் இந்திய பௌலிங்கில் ஒரு முக்கிய தூணாக இந்திய அணியில் செயல்படுகின்றனர். இவர்களது மாயஜால பௌலிங்கில் எதிரணி பேட்டிங்கை சிதைக்கும் வகையில் இவர்களது சுழற்பந்து வீச்சு அமைந்துள்ளது.
டி20 யில் குல்தீப் யாதவ்-வை விட யுஜ்வேந்திர சகால் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். குல்தீப் யாதவும் தனது பௌலிங் பார்ட்னர் சகால்-ற்கு சமமாக நியூசிலாந்து டி20 தொடரில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஏற்கனவே ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவ் சுழலில் மிகவும் தடுமாறி தங்களது விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தொடரில் குல்தீப் மற்றும் சகால் பௌலிங் நியூசிலாந்து மைதானங்களில் சரியாக எடுபட்டுள்ளது.எனவே டி20 தொடரிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சாளர்கள் : புவனேஸ்வர் குமார் மற்றும் சித்தார்த் கவுல்
புவனேஸ்வர் குமார் இந்திய டி20 அணியில் ஒரு முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவருடன் முகமது ஷமி அல்லது பூம்ரா இரண்டாவது பௌளராக செயல்படுவர்.புவனேஸ்வர் குமார் ஆஸ்த்ரெலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார்.
நியூசிலாந்து உடனான 5 ஒருநாள் போட்டிகளில் நல்ல எகானமி ரேட் உடன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.வெல்லிங்டன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.பவர் பிளே ஓவரில் இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் தேவை.
சித்தார்த் கவுல் முதல் டி20யில் கலில் அகமதுவிற்கு பதிலாக இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற வேண்டும். இவர் விளையாடிய 2 சர்வதேச டி20யிலும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளார். அத்துடன் இந்திய-ஏ அணியிலும் சிறப்பாக அசத்தியுள்ளார்.
கலீல் அகமதுவை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய இரு தொடர்களிலும் வாய்ப்பு அளித்தும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. எனவே இந்த இடத்திற்கு சித்தார்த் கவுல் சரியாக இருப்பார். அத்துடன் கலீல் அகமதுவை விட சித்தார்த் கவுல்-ற்கு அதிக டி20 அனுபவம் உள்ளது. எனவே சித்தார்த் கவுல்-ற்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.