நியூசிலாந்து vs இந்தியா 2019: இந்திய அணி தொடரை வென்றதற்கான் 4 காரணங்கள்

Dhawan
Dhawan

#2. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்த குல்தீப் மற்றும் சகால்

Kuldeep-chahal
Kuldeep-chahal

நியூசிலாந்திற்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் குல்தீப் மற்றும் சகால் சுழலில் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறினர். நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளான ராஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் விக்கெட்டுகளை சகால் வீழ்த்தினார். இப்போட்டியில் சகால் 10 ஓவர்களை வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்‌.

குல்தீப் யாதவ் , நியூசிலாந்து கேப்டன் கானே வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்திருந்த போது அவரது விக்கெட்டை வீழ்த்தினார் . அத்துடன் நியூசிலாந்து அணியின் கடை நிலை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவர் 10 ஓவர்களை வீசி 39 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியை 157 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்ய மிகவும் உதவியாக இருந்தார்.

குல்தீப் யாதவ்-வின் இந்த மாயாஜால பௌலிங் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்தது. இந்திய அணி 325 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கோலி இந்த போட்டியில் சற்று தாமதமாகதான் இவரை பந்து வீச அழைத்தார். இருப்பினும் ஸ்சோதி, ஹன்றி நிக்கோல்ஸ், காலின் டி கிரான்ட் ஹாம் , டாம் லேதம் போன்ற விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் சகால் , கானே வில்லியம்சன் மற்றும் நிலைத்து விளையாடிய டாம் லேதம் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் சிறப்பான பௌலிங் திறனை பெற்ற வீரர்களாக இந்திய அணியில் திகழ்கின்றனர். இவர்கள் இருவர் மட்டும் சேர்ந்து 26 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Quick Links