2019 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இணைய உள்ள வீரர்கள் 

IPL Qualifier - Chennai v Delhi
IPL Qualifier - Chennai v Delhi

#1.ரிஷப் பண்ட்:

India v Australia - ODI Series: Game 5
India v Australia - ODI Series: Game 5

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இடம் பெற்றதில் இருந்து இந்திய அணி ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிறார், ரிஷப் பண்ட். பல முறை இவர் மகேந்திர சிங் தோனியோடு ஒப்பிடப்பட்டு உள்ளார். நிச்சயம் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பின்னர், இவர் தான் இந்திய அணியில் நிலைத்து நிற்பார் எனவும் குரல்கள் வலுத்து வருகின்றன. விக்கெட் கீப்பிங் பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், ஆட்டத்தின் இறுதிகட்ட நேரங்களில் தனது பேட்டிங்கால் எதிர் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்வதில் வல்லவராக திகழ்கிறார். அதுமட்டுமல்லாது, இந்திய அணிக்கு முதல் பவர் பிளேயிலிருந்து அதிக ரன்களை குவிக்க அதிரடி தொடக்க ஆட்டக்காரர் தேவைப்படுகிறது. இடது கை பேட்ஸ்மேனான இவர், அத்தகைய பணியை மேற்கொள்வார் எனவும் நம்பப்படுகிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாடினால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார். ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணிக்காக இடம் பெற்று சிறந்த டி20 பேட்ஸ்மேனாக கைதேர்ந்த இவர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 488 ரன்களைக் குவித்து தனது ஸ்ட்ரைக் ரேட் 160க்கும் மேல் வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற அணிக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது உலகக் கோப்பை ஆட்டத்தில் விளையாடி 32 ரன்களை குவித்த நிலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார். இருப்பினும், இனி வரும் ஆட்டங்களில் தொடர்ந்து இடம்பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதன் மூலம், உலகக் கோப்பை தொடர பின்னர் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பிடித்து அடுத்தடுத்து வரும் தொடர்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றால் நிச்சயம் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடரிலும் ரிஷப் பண்ட் இடம் பெறுவார்.

Quick Links