#3. இர்பான் பதான்
இந்தியா களம் கண்டிருந்த சிறந்த ஆல்-ரவுண்டர்களில் முக்கியமான வீரராக கருதப்படுபவர் இர்பான் பதான். ஒரு காலகட்டத்தில் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார் பதான்.
2007 டி20 உலக கோப்பை வெற்றியில் மிக முக்கிய பங்காற்றியிருந்தார் பதான். இந்தியாவிற்காக 129 ஒருநாள் போட்டிகள், 29 டெஸ்ட் போட்டிகள், 24 டி20 போட்டிகள் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் களம் கண்டு தனது பங்கினை நிலைநாட்டியிருந்தார் பதான்.
2012 -ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார் பதான். அதன்பின் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பதான் இடம்பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை 100க்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்று 80 விக்கெட்களையும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்துள்ளார் பதான்.
2017 ஐபிஎல் தொடரில் வெறும் ஒரு போட்டியில் களம் கண்டிருந்தார் பதான். 2018 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்க முன்வராத காரணத்தினால் தனியார் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக களம் கண்டார் பதான்.
தற்போது நடந்து வரும் ரஞ்சி தொடரில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆடிய 6 போட்டிகளில் 317 ரன்களை எடுத்துள்ளார். இவரது சராசரி 40 ஆக உள்ளது. விக்கெட்டுகளை பொறுத்தவரை வெறும் 5 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து இருந்தாலும், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் பதான்.
எனவே ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் தவித்து வரும் அணிகள், இவரை ஏலத்தில் எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.