மீண்டு வர வாய்ப்புள்ள மறக்கப்பட்ட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்!

இர்பான் பதான்
இர்பான் பதான்

#4. டெல் ஸ்டெய்ன்

டெல ஸ்டெய்ன்
டெல ஸ்டெய்ன்

இந்த மனிதனுக்கு அறிமுகமே தேவையில்லை. ஒரு காலகட்டத்தில் உலகின் தலைசிறந்த பௌலராக விளங்கியவர் ஸ்டெய்ன். காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியிருந்த ஸ்டெய்ன் சர்வதேச போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல் தொடர் தொடங்கின 2008-ஆம் ஆண்டிலிருந்தே ஸ்டெய்ன் ஐபிஎல் போட்டிகளில் அங்கம் வகித்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக இவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக விலகி இருந்தார்.

மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை போலவே இவரது கிரிக்கெட் வாழ்வும் முடிந்துவிட்டது என்று பலர் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா அணிக்கு திரும்பிய ஸ்டெய்ன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தென்ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்றார் ஸ்டெய்ன். தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 2018 மசான்ஸி லீக் தொடரிலும் ஆடி வருகிறார். அத்தொடரின் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார் ஸ்டெய்ன். 8 போட்டிகளில் பதினோரு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரது எகானமி 6.87 ஆக உள்ளது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்டெய்னை, அடுத்த வருட ஐபிஎல் போட்டிகளில் எதிர்பார்க்கலாம்.

#5. ஜீவன் மெண்டிஸ்

ஜீவன் மெண்டிஸ்
ஜீவன் மெண்டிஸ்

காற்சுழல்வீச்சாளார்கள் டி20 போட்டிகளில் அதிக கவனம் ஈர்ப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பந்துவீச்சில் பல வேறுபாடுகளைக் கொண்டு செயல்படும் காற்சுழல்வீச்சாளார்களை அணிகள் அதிகம் நாடுகின்றனர்.

வேறுபாடுகளை கணித்து பேட்டிங் செய்வது பேட்ஸ்மேனுக்கு கடினமான ஒன்றாக அமைந்து விடுகிறது. அதன் காரணமாகவே காற்சுழல்வீச்சாளார்கள் டி20 போட்டிகளில் ஜொலிக்கின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த மெண்டிஸ், பல நாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். 35 வயதுடைய இவர் கடந்த 2013-ஆம் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக மூன்று ஐபிஎல் போட்டிகளில் களம் கண்டிருந்தார். அதன் பின்பு எந்த ஒரு அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் மாசான்சி டி20 தொடரில் ஷ்வேனே ஸ்பார்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், 8 போட்டிகளில் 16 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். அத்தொடரின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளை காரணம் காட்டி பல முண்ணனி வீரர்கள் தொடரின் பாதியிலேயே வெளியேறும் நிலை உள்ளது. எனவே இவரை ஏலத்தில் எடுக்க அணிகள் மும்முரம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்து : சுஜித் மோகன்

மொழியாக்கம் : பாஹாமித் அஹமத்

App download animated image Get the free App now