ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட்-டின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என்பதற்கான காரணங்கள்

Shreyas Iyer
Shreyas Iyer

போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 68 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 71 ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு ஒரு சிறப்பான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிடைத்துள்ளார்.

டிசம்பர் 2017 முதல் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் ஈடுபட்டு வந்தும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இவர் இலங்கைக்கு எதிரான தனது முதல் சர்வதேச தொடரில் 9, 88 மற்றும் 65 ரன்களை குவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தனது இரண்டாவது சர்வதேச போட்டியிலேயே ரோகித் சர்மாவுடன் இரட்டைச்சத பார்டனர்ஷீப் செய்தார்.

சிறப்பான இந்த அறிமுக தொடருக்கு பின்னர் எதிர்பார்த்தபடி ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஸ்ரேயஸ் ஐயர் கடைசியாக 2018ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 37 ரன்களை விளாசினார். அதன்பின் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்திய தேர்வுக் குழுவும் வழக்கப்போல் சரியான நம்பர் 4 பேட்ஸ்மேனை அணியிலிருந்து நீக்கிவிட்டு மற்றொரு பேட்ஸ்மேனை தேடும் முயற்சியில் களமிறங்கிவிட்டது.

இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் மனம் தளராமல் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் இவர் ஒரு நிலையான மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிகொணர்ந்தார். ஆனால் இந்திய தேர்வுக் குழுவோ அதிரடி பேட்ஸ்மேன்களின் மேல் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

2019 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷீப் மற்றும் பேட்டிங் மூலம் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டார். இந்த அணி சமீபத்தில் கரேபியனில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது இரு அரைசதங்களை விளாசினார்.

இந்திய ஏ அணியில் இவரது ஆட்டத்திறனை கருத்தில் கொண்டு ஸ்ரேயஸ் ஐயரை இந்திய அணியில் சேர்க்க தக்க சமயமாக இந்திய தேர்வுக்குழு எண்ணியது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட போது அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பான இன்னிங்ஸை இந்திய அணிக்கு அளித்து தன்னை நிருபித்தார்.

இனிவரும் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயரை நம்பர் 4 பேட்டிங் வரிசையிலும், ரிஷப் பண்டை நம்பர் 5 பேட்டிங் வரிசையிலும் களமிறக்கலாம். இந்த மாற்றத்தின் மூலம் இந்திய அணியின் நீண்ட கால பேட்டிங் சொதப்பலிற்கு ஒரு தீர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

இம்மாற்றத்தை நிருபிக்க பல காரணங்கள் உள்ளன.

ஒரு பேட்டிங் வரிசையின் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் அந்தந்த இடங்களில் களமிறங்க வேண்டும்

ஒரு அணியில் நம்பர் 4 பேட்டிங் என்பது ஒரு ஸ்பெஷல் பேட்டிங் வரிசையாகும். எனவே இதனை அதற்கு தகுதியான வீரருக்கே வழங்கப்பட வேண்டும். இந்த வரிசை பேட்ஸ்மேன் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரின் பாலமாக செயல்படுவார். ஸ்ரேயாஸ் ஐயரை-ப் போன்ற ஒரு நிலையான மற்றும் சிறந்த பேட்ஸ்மேனால் மட்டுமே ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தாலும் நிலைத்து விளையாட இயலும்.

அத்துடன் பௌலர்கள் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்ந்தால் நம்பர் 4 பேட்ஸ்மேன் கண்டிப்பாக விக்கெட்டுகள் வீழ்த்தப்படுவார். இதன் மூலமே ஒரு அணியின் ரன் குவிப்பை கட்டுபடுத்த இயலும்.

சுழற்பந்துவீச்சை சமாளித்து ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும்

Shreyas iyer
Shreyas iyer

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் 71 ரன்களில் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என ஏதுமில்லை. ஆனால் அதிகபடியான சிங்கிள் மற்றும் டபுள்ஸை ரன் ஓட்டத்தின் மூலம் எடுத்தார்.

இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் ரோகித் சர்மா ரன் ஓட்டத்தை எடுக்கத் தவறியதால் ஆரம்பத்திலேயே விக்கெட் வீழ்த்தப்பட்டு வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்‌. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர், சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியுடன் இணைந்து அதிகபடியான ரன் ஓட்டத்தை மேற்கொண்டார். இதன் மூலம் போட்டி முழுவதுமாக மாற்றமடைந்தது.

ஒட்டுமொத்தமாக ஸ்ரேயாஸ் ஐயர் முதல் 23 பந்துகளில் 25 ரன்களையும், அடுத்த 26 பந்துகளில் 25 ரன்களையும் குவித்தார்.

ரிஷப் பண்ட் தான் எதிர்கொண்ட பந்துகளை மிட் விக்கெட் திசையில் விளாசி ஓரளவு ரன் குவிப்பில் ஈடுபட்டு 14 பந்துகளுக்கு 14 ரன்களை அடித்தார். ஆனால் அதன்பின் இவரது பேட்டிங் மங்கி ரோஸ்டன் சேஸ் சுழலில் போல்ட் ஆகினார்.

இறுதியாக ரிஷப் பண்ட் 35 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார். இவர் மொத்தமாக இந்த இன்னிங்ஸில் 23 டாட் பந்துகளை சந்தித்தார்.

அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அதுவரை மந்தமாக சென்று கொண்டிருந்த அப்போட்டி முழுவதுமாக மாற்றமடைந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மிடில் ஆர்டரில் அதிகபடியான ரன் ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.

உலகக்கோப்பை அரையிறுதியில் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் மிட்செல் சான்ட்னர் ஓவரில் அதிகப்படியான டாட் பந்துகளை தொடர்ச்சியாக எதிர்கொண்டனர். இதனால் தேவையான ரன் ரேட் பன்மடங்கு எகிறியது‌. அத்துடன் முக்கியமான கட்டத்தில் தங்களது விக்கெட்டுகளையும் இழந்தனர். மேலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ரிஷப் பண்ட் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் ரோஷ்டன் சேஸிற்கு எதிராக பயங்கரமாக தடுமாறினார்.

ஒரு நம்பர் 4 பேட்ஸ்மேன் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டையும் சரியாக எதிர்கொள்ளும் அளவிற்கு திறமை படைத்திருத்தல் அவசியம். இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் பொறுப்பான பேட்டிங்கை காணும் போது நம்பர் 4ற்கு சரியான வீரர் இவர்தான் என தெரிகிறது.

பெரிய இன்னிங்ஸை விளையாட ஸ்ரேயாஸ் ஐயர் சரியானவர்

Iyer
Iyer

டி20 போட்டியுடன் ஓடிஐ போட்டிகளை ஓப்பிடும் போது அதிகப்படியான ஓவர்களை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள வேண்டும். ஓடிஐ போட்டிகளானது ஒரு பேட்ஸ்மேனின் திறன் மற்றும் நிலைப்புத்தன்மையை ஆராய ஏதுவாக உள்ளது. ஒடிஐ கிரிக்கெட்டில் ஒரு பௌலருக்கு 10 ஓவர்கள் பந்துவீச வழங்கப்படுவதால் பேட்ஸ்மேனின் மனநிலையை அவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

இந்தச் சூழ்நிலையில் பேட் செய்ய ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பெரிய இன்னிங்ஸ் விளையாடக்கூடிய வீரர் தேவைப்படுகிறார். மேலும் சொந்த மண்ணாக இருந்தால் பன்மடங்கு சாதகமாகும். இந்த பேட்டிங் வரிசையின் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயருக்கு அதிகப்படியான ஓவர்கள் விளையாட வழங்கப்பட வேண்டும்.

விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலையான டாப் இன்னிங்ஸ் விளையாட வேண்டும்

குமார் சங்கக்காரா மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை எளிதாக பௌலர்களிடம் அளித்திடாமல் அதிகபடியான ரன் குவிப்பில் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்காலத்தில் அனுபவமில்லா மற்றும் குறைந்த பேட்டிங் திறன் கொண்ட வீரர்கள் இந்த இன்னிங்ஸை தங்கள் அணிக்கு அளிக்கத் தவறுகின்றனர்.

இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்ய களம் கண்டால் ரிஷப் பண்ட் நம்பர் 4 பேட்டிங் வரிசையில் 50 ஓவர் வரை நிலைத்து நின்று பேட்டிங் செய்யத் தவறுகிறார். மேலும் தவறான ஷாட் தேர்வை மேற்கொண்டு சொதப்பியும் வருகிறார்.

விக்கெட்டை பறிகொடுக்காமல் பெரிய இன்னிங்ஸை விளையாடிய ஒரே விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி மட்டுமே. இவர் ஓடிஐ-யில் 1500 ரன்களை இறுதி வரை ஆட்டமிழக்காமல் குவித்துள்ளார். மற்ற எந்த ஸ்பெஷலிஸ்ட் இந்திய விக்கெட் கீப்பர்ளும் இச்சாதனையை செய்யவில்லை. தோனி விளையாடியுள்ள 297 ஓடிஐ இன்னிங்ஸில் 48 இன்னிங்ஸில் மட்டுமே நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ளார்.

எனவே ரிஷப் பண்ட் ஓடிஐ கிரிக்கெட்டில் கடைநிலையில் பேட்டிங் செய்ய தகுதியானவர் ஆவார்.

ஸ்ரேயாஸ் ஐயருடன் ஒப்பிடும்போது ரிஷப் பண்ட் நம்பர் 5 பேட்டிங்கிற்கு தகுதியானவர்

Pant
Pant

ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் நம்பர் 5 அல்லது 6ல் பேட்டிங் செய்ய தகுதியானவர் என்பதை எடுத்துரைக்கிறது. ரன் இலக்கு சற்று அருகில் உள்ளபோது ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். மேலும் இன்னிங்ஸை சிறப்பாக முடிக்க இவரது பேட்டிங் முழுவதும் கை கொடுக்கும்.

ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்டை நம்பர் 4 பேட்டிங்கில் களமிறக்கி இந்திய அணி தவறு செய்து வருகிறது ‌

இவர் இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பதன் காரணமாக பௌலர்களுக்கு சரியான திசையில் வீச இவருக்கு சிரமப்படுவர். மேலும் ஹார்திக் பாண்டியா, ஜடேஜா, ரிஷப் பண்ட் போன்ற ஹீட்டிங் பேட்ஸ்மேன்கள் கடைநிலையில் இருப்பது இந்திய அணிக்கு பலமாகும்.

இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் நம்பர் 4 பேட்டிங்கில் களமிறக்கலாம். இவர் சுழற்பந்து மற்றும் வேகப்பந்தை சரியாக எதிர்கொண்டு விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் கடைநிலை ஃபினிஷர்களுக்கு ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தி தருவார்.

ஸ்ரேயாஸ் ஐயரை நம்பர் 4ல் களமிறக்கி, ரிஷப் பண்டை நம்பர் 5ல் களமிறக்கினால் இந்திய அணியின் நீண்ட கால பிரச்சினை முடிவுக்கு வரும். இந்த மாற்றம் இரு அணி வீரர்களுக்கும் இடையிலான புரிதல் உணர்வை அதிகரிக்கும்.

Quick Links