2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவி வெளியேறியது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக இருந்தது. இந்த பெரும் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சில மாற்றங்களை இந்திய அணியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட்டில் ஒரு கேப்டனை பொறுத்தே அந்த அணி சிறந்த அணியா என்பதனை நாம் கூற முடியும். ஒரு அணியில் கேப்டனின் பங்களிப்பு எப்பொழுதுமே மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. களத்தில் கேப்டனின் தந்திரமான முடிவுகள் அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
விராட் கோலி இந்திய கேப்டனாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது சாதனை மிகவும் பிரபலமானதாகும். உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியை தழுவியது இந்திய அணி. இதனால் ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது சரியாகது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முக்கிய ஐசிசி தொடர்களில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய இந்திய ஆடும் XI தேர்வு தொடர்ந்து சீராக ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. "விராட் கோலி 2018ன் இடைப்பகுதியில் தாங்கள் நம்பர் 4 பேட்ஸ்மேனை கண்டறிந்து விட்டோம் என அம்பாத்தி ராயுடுவை தேர்வு செய்தார். ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடிய ஆஸ்திரேலிய தொடரில் ராயுடுவின் மோசமான ஆட்டத்தால் இந்திய உலகக்கோப்பை அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.
இந்திய அணி நம்பர் 4 பேட்ஸ்மேனிற்கு 10 பேட்ஸ்மேன்களை முயற்சி செய்து பார்த்தது. ஆனால் ஒருவர் கூட தங்களுக்ககு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவில்லை. மேலும் இத்தகைய மோசமான பேட்டிங் வரிசையினால் இந்திய அணியை உலகக்கோப்பையில் கடுமையாக பாதித்து அணியின் வெற்றி வாய்ப்பை இழக்கச் செய்துள்ளது.
விராட் கோலிக்கு வெற்றியாக அமைந்த அனைத்து தொடர்களிலும், ஒடிஐ கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வெற்றியை அவரால் இந்திய அணிக்கு அளிக்க இயலவில்லை. ஒவ்வொரு போட்டிகளிலும் ஆடும் XIல் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். இது இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. கேதார் ஜாதவை தொடர்ந்து 3 வருடங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடச் செய்துவிட்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்பு அணியிலிருந்து கழட்டி விடுவது இதற்கு சான்றாக எடுத்துரைக்கலாம்.
இதனால் இந்திய அணியின் கேப்டன்ஷீப் மீது அதிக கேள்வி எழுந்து மாற்றம் செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு சரியான வீரராக ரோகித் சர்மாவை அனைவரும் தேர்வு செய்துள்ளனர்.
நாம் இங்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா நியமிக்கப்படலாம் என்பதற்கான 3 காரணங்களைப் பற்றி காண்போம்.
#3 கேப்டனாக அற்புதமான சாதனைகள்
ரோகித் சர்மா கேப்டனாக சிறந்த சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 7 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 4 முறை சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். அணியை வழிநடத்தும் போது மிகவும் சாந்தமாகவும், அனைத்து வீரர்களிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வார். அத்துடன் இந்திய கேப்டனாக ரோகித் சர்மா நிதஹாஷ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார். இவர் 9 ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு 8ல் வெற்றி பெற்றுள்ளார்.
ரோகித் சர்மா தந்திரமாக செயல்பட்டு விளையாட்டினை நன்கு புரிந்து கொண்டு அணியை வழிநடத்தும் திறமை கொண்டவர். 2019 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் லாசித் மலிங்கா அதிக ரன்களை தன் பௌலிங்கில் அளித்திருந்தாலும், இறுதி ஓவரை அவரிடம் அளித்து ஆட்டத்தின் முடிவை மும்பை இந்தியன்ஸ் வசம் மாற்றினார் ரோகித்.
அனைத்து முறையும் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா முழு பொறுப்பை ஏற்று விளையாடி வருகிறார். கேப்டன்ஷீப் மூலம் ரோகித் சர்மாவின் பேட்டிங்கில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விளையாடும் திறமை உடையவராக உள்ளார். அத்துடன் அரையிறுதியில் சிறந்த கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி முக்கியமான கோப்பைகளை வென்றதில்லை. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரு முறை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. அத்துடன் முக்கியமான ஐசிசி தொடர்களிலும் அரையிறுதி வரை சென்று நெருக்கடியை சமாளிக்க இயலாமல் நூழிலையில் கோப்பையை தவறவிட்டுள்ளார் விராட் கோலி.