இந்திய ஓடிஐ மற்றும் டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்க தகுதியானவர் என்பதற்கான 3 காரணங்கள்

Rohit sharma & Virat kholi
Rohit sharma & Virat kholi

#1 இம்முடிவால் விராட் கோலி எவ்வித நெருக்கடியும் இன்றி பேட்டிங்கில் கவனம் செலுத்துவார்

Virat kholi
Virat kholi

விராட் கோலி தற்போதைய தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். விராட் கோலி இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் விருப்புகிறது. கேப்டன்ஷீப்பிலிருந்து தளர்த்தப்பட்டால் விராட் கோலி எவ்வித நெருக்கடியுமின்றி பேட்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி தனது ஆட்டத்தை அதிகம் மேம்படுத்த இயலும். முழு கவனமும் பேட்டிங்கில் இருந்தால் விராட் கோலியை மிஞ்ச உலகில் எந்த பேட்ஸ்மேனும் இல்லை. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் விராட் கோலி, டி20 கிரிக்கெட்டிலும் முதலிடம் வர முயற்சிப்பார்.

கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் விராட் கோலியின் பேட்டிங்கில் விராட் கோலியின் மீது எவ்வித கேள்வியும் எழுந்ததில்லை. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே இனைந்து களத்தில் சிறப்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு கிடைத்தது பெரும் பாக்கியமாக ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி மிகவும் அற்புதமாக தலைமைப் பண்பை கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலங்களிலும் இவர்தான் கேப்டனாக டெஸ்ட் அணிக்கு தொடருவார் என தெரிகிறது. ஆனால் ஓடிஐ/டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலியின் ஆளுமைத் திறன் கவலையளிக்கும் விதமாக உள்ளது. இதனால் ரோகித் சர்மா இந்திய ஓடிஐ மற்றும் டி20 அணியின் முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்க இதுவே தக்க தருணம்.

PREV 3 / 3

Quick Links

Edited by Fambeat Tamil