ராகுல் திராவிட் வழங்கிய அடிப்படை ஆலோசனையை வெளிப்படையாக கூறிய சுப்மான் கில் !

Shubman Gill Reveals The Basic Mantra Given By Rahul Dravid

கதை என்ன?

இந்தியாவின் இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில், இவர் இந்தியா ஏ மற்றும் இந்தியா யு -19 அணிகளில் விளையாடி வருகிறார். இந்தியா ஏ மற்றும் இந்தியா யு - 19 பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனக்கு வழங்கப்பட்ட 'அடிப்படை மந்திரத்தை' வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் டிராவிடின் வழிகாட்டியானது தன்னுடைய இயல்பான விளையாட்டில் ஒட்டிக்கொள்ளும்படி எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் A க்கு எதிராக இரட்டை சதம் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி இவரின் சிறப்பாக ஆட்டத்தால் இவர் விரைவில் இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக பலர் தனது கருத்துக்களை தெறிவித்துள்ளார்கள்.

உங்களுக்குத் தெரியாவிட்டால் …

சுப்மான் கில் இந்தியாவில் பிரகாசமான இளம் பேட்டிங் வீரர் ஆவார். இவர் இளம் வயதாக இருந்தபோதிலும், யு -19 உலகக் கோப்பையை வென்றதிலிருந்து சிறந்த பேட்ஸ்மன்களில் ஒருவராக பலரால் கருதப்பட்டது.

சுப்மன் கில் சமீபத்தில் முதல் தர இரட்டை சதத்தை அடித்த இளைய இந்திய வீரரானார். வெள்ளை பந்து வடிவத்தில், 19 வயதானவர் இவர் குறிப்பிடத்தக்க வகையில் 218 ரன்களை (மூன்று அரைசதங்கள் உட்பட) 54.50 சராசரியாக அடுக்கி வைத்துள்ளார். இந்தத் தொடரில், இளம் வீரர் வெறும் ஐந்து ரஞ்சி டிராபி போட்டிகளில் 700 ரன்களுக்கு மேல் ரன்களை விளாசியுள்ளார். யு -19 அணிக்காக தனது ஆரம்ப நாட்களில் இருந்தே, சுப்மான் கில் புகழ்பெற்ற ராகுல் டிராவிட் தனது வாக்குறுதியையும் வெற்றியையும் பெரிதும் பாராட்டியுள்ளார்.

முக்கிய கதை

"இந்தியா யு -19 நாட்களில் இருந்து ராகுல் டிராவிட் எனது பயிற்சியாளராக இருந்து வருகிறார் இதன் பின் தற்போது இந்தியா ஏ அணிக்கு பயிற்சியாளராக இருப்பதாக கூறியுள்ளார். அவரிடமிருந்து ஒரு அடிப்படை அறிவுரை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். அது என்னவென்றால் உங்களுக்கு கிடைத்த உங்கள் அடிப்படை விளையாட்டை ஒருபோதும் மாற்ற வேண்டாம் அதுவே உங்களுக்கு வெற்றியை தரும். ஒருவர் தனது நுட்பத்தை மாற்றவோ அல்லது மாற்றங்களைச் செய்யவோ கூடாதென்றும், அது அவரது இயல்பான விளையாட்டில் செயல்ப்படுத்த வேண்டும் என்று டிராவிட் நம்புகிறார்.

Shubman Gill
Shubman Gill

ராகுல் டிராவிட் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் உறுதியானதாக இருக்க விரும்பினால், நீங்கள் செய்யும் அனைத்து மாற்றங்களும் அடிப்படை விளையாட்டின் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்று கூறியதாக சுப்மான் கூறியுள்ளார். "ராகுல் சார் என்னிடம் கூறினார், நான் எனது விளையாட்டை மாற்றினால் அது இயல்பாக இருக்காது இதன் விழைவு வெற்றியை வழங்காமல் போகலாம்.

சுப்மான் கில் இந்த மாத தொடக்கத்தில் தனது 204 ஐ தனது மிக உயர்ந்த நாக் என்று மதிப்பிட்டுள்ளார்: "வெஸ்ட் இண்டீஸ் ஏ-க்கு எதிரான எனது இரட்டை சதத்தை நான் நிச்சயமாக மதிப்பிடுவேன். போட்டியின் நிலைமையை கருத்தில் கொண்டு சிவப்பு பந்து தொடரில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து என்ன?

சுப்மான் கில் தேசிய அமைப்பிற்கான வாய்ப்புக்காக காத்திருக்கையில், தற்போது விராட் கோஹ்லி ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளில் விளையாடி வருகிறது..

Quick Links

Edited by Fambeat Tamil