உலகக்கோப்பை தொடரில் ஸ்டீவன் ஸ்மித் விளையாடுவாரா??

Steven Smith
Steven Smith

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

ஸ்டீவன் ஸ்மித் 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். ஒரு நாள் போட்டிகளின் ரேங்கிங் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த அவர் தற்போது கடந்த ஒரு வருடமாக தன் தாய் நாட்டிற்காக விளையாட முடியாமல் வருத்தத்தில் இருக்கிறார். ஏன் அவரால் ஒருவருடம் விளையாட முடியவில்லை என்ற காரணத்தை பற்றி இங்கு காண்போம்.

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் என்ற கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார் ஸ்டீவன் ஸ்மித். தற்போது அவருக்கு முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் பிக் பாஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Warner And Smith
Warner And Smith

ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளும் கடந்த ஆண்டு டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடியது. அந்த தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அப்போது பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் பவுலர் பான்கிரிப்ட் தனது கையில் இருந்த உப்புத்தாள் கொண்டு பந்தை சேதப்படுத்தினார். இதனை அறிந்த தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளசிஸ் நடுவரிடம் முறையிட்டார்.

அதன் பின்பு விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் பந்து சேதபட்டிருப்பதை உறுதி செய்தது கிரிக்கெட் வாரியம். அதன்பிறகு ஆஸ்திரேலிய அணியின் பவுலர் பான் கிரிப்டிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரின் ஒப்புதலுடன் தான் இது நடைபெற்றது என்று ஆஸ்திரேலிய அணியின் பான்கிராப்ட் கூறினார். அதன்பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னர் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அதன்பிறகு கிரிக்கெட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது. ஆஸ்திரேலிய அணியின் பான் கிராப்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்தது.

Steve Smith
Steve Smith

எனவே ஸ்மித்ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் பிக் பாஸ் என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார். அப்போது முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த சிகிச்சைக்கு பிறகு ஆறு வாரங்கள் விளையாடாமல் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அடுத்து வரும் பாகிஸ்தான் தொடரிலும் அவரால் விளையாட முடியாது.

அதுமட்டுமின்றி வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பாகிஸ்தான் தொடரிலும் மற்றும் இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் விளையாடாமல் இருந்தால், இவரை நேரடியாக மே மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now