இந்த வருட ஐபிஎல் தொடரில் கேப்டனை மாற்ற வாய்ப்பிருக்கும் 4 அணிகள்!

பெங்களூரின் விராட் கோலி மற்றும் ராஜஸ்தானின் ரகானே
பெங்களூரின் விராட் கோலி மற்றும் ராஜஸ்தானின் ரகானே

ஐபிஎல் என்ற கோளாகலத் திருவிழா 11 வருடம் நடந்து முடிந்துள்ள வேளையில் இந்த வருடம் வெகுசீக்கிரமாகச் செய்திகளில் அடிபடத் துவங்கிவிட்டது. 12வது ஐபிஎல் தொடர் அடுத்த வருட மார்ச் மாத மத்தியில் துவங்கி மே மாத 3ஆம் வாரம்வரை நடக்க உள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு செட் ஆகாத வீரர்களைக் கழற்றி விட்டு விட்டு அதற்கேற்ப வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. அவர்களுக்கான ஒப்பந்தத்தை முடித்துவிட்டு அடுத்த மாத மத்தியில் கோவாவில் நடக்கவுள்ள ஐபிஎல் ஏலத்தில் புதிய வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் அணிகள் களம் இறங்கும்.

வீரர்கள் மட்டுமல்லாது ஒரு சில அணிகளுக்குச் சரியான மற்றும் தகுதி வாய்ந்த கேப்டன்கள் இன்னும் அமையவில்லை. சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஒரு சில அணிகள் முதல் தொடரிலிருந்து தற்போது வரை சரியான ஒரு கேப்டன் இல்லாமல் கடுமையாகச் சோடை போவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். கிரிக்கெட் என்பது ஒரு கேப்டனுக்கான கேம் என சமீபத்தில் முன்னாள் இந்திய ஜாம்பவான் கங்குலி கூறியுள்ளதை கேட்டோம். கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு கேப்டன் தன் அணியை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதும் பரபரப்பான ஆட்டத்தில் சூட்டோடு சூடாக எப்படி சரியான முடிவுகளை எடுக்கிறார் என்பதில்தான் அணியின் வெற்றி பெரும்பாலும் அடங்கியிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் கேப்டன்களின் பங்கு மிகப் பெரியதாகவும், இன்றியமையாததாகவும் இருந்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளில் தங்களுக்கு கிடைத்த உள்ளூர் வீரர்களை வைத்துக்கொண்டே அற்புதமாகக் கேப்டன்ஷிப் செய்து தலைமைப் பண்பின் வழிநடத்தல் காரணமாகக் கோப்பையை வென்று குவித்துள்ளனர். ஆனால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் போன்ற அணிகளைப் பார்க்கும்போது அந்த அணியில் சிறந்த வீரர்கள் சூழ்ந்து இருப்பினும் கேப்டன் என்னும், ட்ரம்ப் கார்ட், சரியாக அமையாததால் தற்போது வரை அந்த அணிகளால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை என்பது நிதர்சனம்.

தற்போது 12வதுஐபிஎல் தொடரில் தங்களது கேப்டன்களை மாற்ற வாய்ப்பு இருக்கும் அணிகளைப் பற்றிப் பார்ப்போம்


4. கிங்ஸ் லெவன் பஞ்சாப்

இஞ்சினியர்ங் மூலையை வைத்துக் கண்க்கிட்டு வெற்றி பெரும் அஸ்வின்
இஞ்சினியர்ங் மூலையை வைத்துக் கண்க்கிட்டு வெற்றி பெரும் அஸ்வின்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சென்ற வருட ஏலத்தில் பெரிது பெரிதாகக் காய்களை நகர்த்தியது. தன்னிடம் இருந்த அனைத்து வீரர்களையும் வெளியேற்றிவிட்டு அக்சர் பட்டேலை மற்றும் வைத்துக்கொண்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிக்கொண்டிருந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை வாரிச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டது.

சென்ற வருட ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் அஸ்வின். நுணுக்கமான கிரிக்கெட் வித்தைகளைக் கற்று தேர்ந்தவர் அவர். எதையும் கணக்கிட்டு செய்து வெற்றி கொள்ளும் சுபாவம் உடையவர். தொடர் துவங்கும் முன்பே பலமுறை வாய் வார்த்தையில் விளையாடினார். நான் 'Unpredictable' கேப்டனாக இருக்கப்போகிறேன் என்றெல்லாம் கூறினார்.

அதே போன்று முதல் 5 போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் உண்மையிலேயே ஒரு அற்புதமான கேப்டன் என்னும் அளவிற்கு நன்றாகச் செயல்பட்டார். ஆனால் வெகுவேகமாக ஓடிய அந்த அணி கடைசி 8 போட்டிகளில் படு பாதாளத்தில் விழுந்தது.

இதற்கெல்லாம் காரணம் அஸ்வின் கேப்டன்ஷிப் தானெனக் கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் எழுதத் துவங்கினர். 32 வயதான அஸ்வின் கேப்டன்ஷிப்பில் சற்று சோடை போகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் தற்போது அந்த அணியின் ஆலோசகராக இருந்த விரேந்தர் சேவாக்கை நீக்கியுள்ளது. இதன் காரணமாக அஸ்வினின் கேப்டன்ஷிப் பறிபோக நிறைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் அந்த அணிக்குத் துவக்க ஆட்டக்காரராக அதிரடியாக விளையாடிப் பலமுறை வெற்றி வாய்ப்புகளை உருவாக்கிய கேஎல் ராகுலை தலைமையிடத்தில் அமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. ராஜஸ்தான் ராயல்ஸ்

டஓப்பனிங்கை தவிற ரகானே வேறு எந்த இடத்தில் ஆடினாலும் ரகானே ஜோலிப்பது கடினம்
டஓப்பனிங்கை தவிற ரகானே வேறு எந்த இடத்தில் ஆடினாலும் ரகானே ஜோலிப்பது கடினம்

ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் தலைமையில் களமிறங்கிய இந்த அணி 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றது. அதன்பின்னர் கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்த அணியிடமிருந்து பெரிதாக எந்த ஒரு செயல்பாட்டையும் நாம் பார்க்கவில்லை.

சென்ற வருடம் அஜின்கியா ரஹானே தலைமையில் களமிறங்கிய இந்த அணி ஐபிஎல் தொடரின் இறுதியில் நான்காவது இடத்தைப் பிடித்தது. ஆனால் திறமையான வீரர்களைக் கொண்டிருந்த ராஜஸ்தான் கோப்பையை வென்று இருக்க வேண்டும். கடைசிவரை படுபாதகமான சொதப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி ஒரு சில போட்டிகளில் வென்று நான்காவது இடத்தைப் பிடித்தது என்பதே உண்மை நிலைமை. அந்த அணியின் கேப்டனாக இருந்த அஜின்கியா ரஹானே பேட்டிங், கேப்டன்ஷிப் என அனைத்திலும் கடுமையாகச் சொதப்பினார்.

அவரிடம் பார்ம் கையில் இல்லை, பேட்டிங்கில் பார்மில் இல்லாத காரணத்தால் சொதப்பினார். மேலும் 20 ஓவர் போட்டிகளுக்கு ஏற்ற அதிரடி ஆட்டம் அவரிடம் இல்லை. பேட்டிங்கில் பார்ம் இல்லாத்தால் அவரால் ஒரு அணியைத் தலைமை தாங்கி நடத்த முடியவில்லை. இதன் காரணமாக இந்த முறை அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் அந்த இடத்திற்காக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பட்லர் கடந்த ஒரு வருடமாக நல்ல ஃபார்மில் இருக்கிறார். மேலும் சென்ற வருடம் ராஜஸ்தான் அணிக்காகத் தொடர்ந்து 6 அரை சதம் விளாசினார் டி20 கிரிக்கெட்டில் மிகவும் அமைதியாகவும் பொறுப்பான அதிரடியுடன் ஆடும் அவருக்குப் பேட்டிங் பற்றிப் பிரச்சனை இல்லை. அவர் ஒரு நல்ல கேப்டனாக இருப்பாரென நாம் நம்பலாம்.

2.டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லியின் ஸ்ரேயஸ் பேட்டிங்கில் இன்னும் கவன்ம் செலுத்த வேண்டிய வீரர்
டெல்லியின் ஸ்ரேயஸ் பேட்டிங்கில் இன்னும் கவன்ம் செலுத்த வேண்டிய வீரர்

முதல் ஐபிஎல் தொடரிலிருந்து தற்போது வரை பெரிதாக ஏதும் சாதிக்காமல் ஓரணி இருக்குமென்றால் அது டெல்லி டேர்டெவில்ஸ் அணியேயாகும். ஒவ்வொரு ஆண்டும் அணியை மாற்றியும் கேப்டனை மாற்றியும் பல வியூகங்களை வகுத்துப் பார்த்தும் இந்த அணிக்கு ஒன்றும் கைகூடவில்லை.

ஆனால் இந்த அணியில் பல இளம் வீரர்களும் அதிரடியான திறமை வாய்ந்த வீரர்களும் வருடா வருடம் வந்து குவிந்து விடுவார்கள். அவர்களது தனிப்பட்ட ஆட்டம் அற்புதமாக அமையும். ஆனால், ஒரு அணியாக டெல்லி டேர்டெவில்ஸ் என்றால் பெரிதாக ஏதும் சாதிக்கமுடியவில்லை.

சென்ற வருடம் கௌதம் காம்பீர் இந்த அணிக்குக் கேப்டனாக முதலில் பொறுப்பேற்றார். ரிக்கிபாண்டிங் பயிற்சியாளராக இருந்தார். முதலில் சில போட்டிகள் கவுதம் கம்பீர் தலைமையில் தோற்க ரிக்கி பாண்டிங் மற்றும் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ஆகிய இருவருக்கும் பனிப்போர் ஏற்பட்டு கவுதம் காம்பீர் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அணியிலிருந்தும் ஓரம் கட்டப்பட்டார். லெவனில் இருந்தும் அவர் நகர்த்தப்பட்டு புதிய வீரர் சேர்க்கப்பட்டார்.

அதன் பின்னர் இந்தியாவின் இளம் வீரர் ஷ்ரேயஸ் கேப்டனாக இணைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டார். இதன் பின்னர் டெல்லி அணி ஓரளவிற்கு நன்றாக ஆடியது. பேட்டிங்கை போல் ஸ்ரேயசால் கேப்டன்ஷிப்பில் அனைவரையும் ஈற்க முடியவில்லை. மேலும் அவருக்குப் போதிய அனுபவமும் இல்லை. இந்த வருட ஏலத்திற்கு முன் நடக்கும் மாற்றங்களில் தவான் டெல்லி அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார் தற்போது டெல்லி அணிக்குத் திரும்பியுள்ள சிகர் கேப்டன் பொறுப்பை ஏற்கலாமெனத் தெரிகிறது.

1. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

பெங்களூரின் நட்சத்திரங்கள் ஏபிடி-விராட்
பெங்களூரின் நட்சத்திரங்கள் ஏபிடி-விராட்

என்னதான் இந்திய அணிக்கு மிகச்சிறந்த கேப்டனாகவும் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என முடிசூடா மன்னனாக வலம் வந்தாலும் விராட் கோலி ஐபிஎல் தொடர்களின்போது தனது அணியைப் பெரிதாக வெற்றி பெற வைக்க முடியவில்லை என்பதே நிதர்சமான உண்மை. பெங்களூர் அணியிடம் அனைத்தும் இருக்கிறது விராட் கோலிக்கு உறுதுணையாகச் சிறந்த பயிற்சியாளர், அற்புதமான வீரர்கள், ஆல்ரவுண்டர்கள் நுணுக்கமான சுழற்ப்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைவருமே வருடாவருடம் அவரது அணியில் வந்து குவிகின்றனர்.

ஆனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அவரால் ஒரு சிறந்த கேப்டனாகத் தற்போது வரை செயல்பட முடியவில்லை. கடந்த 11 வருடமாக அந்த அணியில் ஆடி வரும் கோலி ஏழு வருடங்களாகக் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். மொத்தம் 96 போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனாக இருந்து உள்ள கோலி 44 போட்டிகளில் வெற்றி 47 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளார். 2 டை, 3 முடிவில்லை.

சென்ற வருட ஐபிஎல் தொடரில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 6வது இடத்தைப் பிடித்தது. இந்த வருடம் விராட் கோலி கேப்டனாக மாற்றப்பட பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என்ற இரண்டு பாரங்களையும் சுமக்கும் அவர் ஒரு பாரத்தை தற்போது ஓய்வுபெற்றுள்ள ஏபிடி வில்லியர்ஸ் இடம் கொடுக்கலாம். இதுகுறித்து முன்னதாகச் செய்திகளும் வந்துள்ளது. அதனைத் தாண்டி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் உலக கோப்பை தொடர் கையோடு தொடங்குகிறது. இதனால் விராட் கோலிக்கு ஓய்வு தேவை இதன் காரணமாக இந்த வருடம் அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ஏபிடி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.