#3.சனத் ஜெயசூர்யா:

1989ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை துவங்கிய சனத் ஜெயசூர்யா, ஒருநாள் போட்டிகளின் தொடக்க ஓவர்கள் முதலே எதிரணியின் பந்துவீச்சை பிரித்தெடுக்கும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார். அர்ஜுன ரணதுங்கா வழி நடத்திய இலங்கை அணி, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அத்தகைய உலக கோப்பை தொடரின் "தொடர் நாயகன்" விருதை சனத் ஜெயசூர்யா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஒருநாள் போட்டியில் பேட்டிங் 10,000க்கும் மேற்பட்ட ரன்களையும் பந்துவீச்சில் 300 விக்கெட்களையும் பீல்டிங்கில் 100 கேட்சுக்களையும் பிடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்னும் அரியதொரு சாதனையை படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, ஒருநாள் போட்டிகளில் அதி வேகமான 50, 100 மற்றும் 150 ரன்களை கடந்த பல்வேறு சாதனைகளை தனதாக்கி உள்ளார். இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனாக 13,430 ரன்களும் ஒரு பவுலராக 323 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.
சச்சின் டெண்டுல்கர் காலத்தில் மேற்குறிப்பிட்ட மூன்று வீரர்களும் தங்களது நாட்டுக்காக சர்வதேச களத்தில் போராடி பல வெற்றிகளை பெற்றுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு நாட்டு வீரர்களும் சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர், அறிமுகமாகி அவருக்கு முன்னரே ஓய்வு பெற்று வர்ணனையாளராக பயிற்சியாளராகவும் பல்வேறு தளங்களில் தங்களது பணியை துவங்கினர். எனவே, இப்பட்டியலில் இருந்திருக்க வேண்டிய பிரபலங்களை பற்றி உங்களுக்கு ஏதேனும் அறிந்திருந்தால் கமெண்ட் செய்யவும்.