ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் அருமையான களமாக இருக்கிறது. இந்த தொடரில் பலர் பல சாதனைகளை படைத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி இந்த தொடரில் சிறப்பாக விளையாடி பலர் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது ஒரு மெகா சாதனையாக திகழ்கிறது. அதேபோல், பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய சாதனையாக இருப்பது சதங்களை குவிப்பதாகும். அணியின் இக்கட்டான சூழ்நிலையில் தனது பேட்டிங்கில் ரன்களை குவித்து அணியை வெற்றி பெற வைப்பதுமாகும். அதேப்போல தனது உலகக்கோப்பையின் கடைசி ஆட்டத்தில் சதம் அடித்து சாதனை படைத்த மூன்று நட்சத்திர வீரர்கள் பற்றி இப்போது காண்போம்.
# 1 ரிக்கி பாண்டிங் ( ஆஸ்திரேலியா அணி கேப்டன் )

2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆட்டமிழக்காமல் 148 ரன்கள் எடுத்து தனது நாட்டிற்கு வெற்றியை பெற்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் இந்த இரு அணிகளும் மீண்டும் களத்தில் சந்தித்தது. இந்தப் போட்டியில் சதம் அடித்து அசத்தினார் ரிக்கி பாண்டிங். ஆனால் இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் விளையாட முடியாமல் போனது. ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் இந்திய அணி 2003 ஆஸ்திரேலியாவுடனான தோல்வியை சமம் செய்தது. எனவே, ஆஸ்திரேலியா அணி கேப்டன் தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் சதம் அடித்து மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
# 2 ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா)

2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இலங்கையை எதிர்கொண்டபோது, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. 2007 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளில், ஆடம் கில்கிறிஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு விரைவான சதங்களை அடித்ததன் மூலம் அருமையான தொடக்கத்தை அளித்திருந்தார்.
2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதி போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. இதனால் 38 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. இதன் பின் களமிறங்கிய விக்கட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மனான ஆடம் கில்கிற்ஸ்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் வெகு விரைவாக அரைசதத்தை எட்டினார். இதன் பின் மீண்டும் சிறப்பாக விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார்.104 பந்துகளில் 149 ரன்கள் குவித்தார். கில்கிறிஸ்டின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 38 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்தது. டி / எல் முறை மூலம் ஆஸ்திரேலியா 53 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டியில் வென்றது, மேலும் கில்கிறிஸ்ட் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
# 3 இம்ரான் நசீர் ( பாகிஸ்தான் அணி )

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பாகிஸ்தானுக்கு ஒரு பேரழிவுகரமான உலகக் கோப்பையாக இருந்தது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் வூல்மர் மர்மமான சூழ்நிலையில் இறந்தார். இது பாகிஸ்தான் அணிக்கு அந்த ஆண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் அணி ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. இதன் பின் ஆப்பிரிக்க தேசத்திற்கு எதிராக ஒரு அற்புதமான சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் வீரர் இம்ரான் நசீர் தனது அணிக்கு உற்சாகத்தை அளித்தார். தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய இம்ரான் நசீர் 8 சிக்ஸர்கள் மற்றும் 14 பவுண்டரிகளை அடித்தார், அவர் 121 பந்துகளில் 160 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தான் ஒரு பெரிய ஸ்கோர் அடைவதற்கு காரணமாக இருந்தது.
மழை குறுக்கிட்டதால் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டு 193 ரன்கள் இலக்காக ஜிம்பாப்வே அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்ன பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் ஆரம்பத்தில் தங்களது விக்கெட்களை இழந்தனர். இறுதியில், டி / எல் முறை மூலம் பாகிஸ்தான் இந்த ஆட்டத்தை 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர், மேலும் இம்ரான் நசீர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.எனவே, இது இம்ரான் நசீரின் கடைசி உலகக் கோப்பை தொடராக இருந்தது.