#2.சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இருப்பினும் சர்வதேச போட்டிகளில் அவரது ஆட்டத்திறனை கிரிக்கெட் ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் ஐபிஎல் தொடர்களில் அவரது சீரான ஆட்டத்திறனிற்கு ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் அடிமையாகி உள்ளனர். சென்னை அணியின் மிக முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா 176 போட்டிகளில் பங்கேற்று 4985 ரன்களை குவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார் சுரேஷ் ரெய்னா. இவருக்கு அடுத்தபடியாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 163 போட்டிகளில் பங்கேற்று 4948 ரன்களையும் குவித்துள்ளனர். ரோகித் சர்மா 173 போட்டிகளில் பங்கேற்று 4493 ரன்களை குவித்து மூன்றாவது இடத்தையும் வகிக்கிறார். இந்த வருட ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா 5000 ரன்களை குவித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் ரெய்னா கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிராக ஒரு சதத்தையும் , ஐபிஎல் தொடரில் மொத்தமாக 35 அரை சதங்களையும் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 138.47 ஆகவும் , சராசரி 34.37 ஆகவும் உள்ளது. சென்னை அணியில் இவரது சிறப்பான பங்களிப்பினால் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
ரெய்னா 2019 ஐபிஎல் தொடரிலும் மஞ்சள் நிற சட்டையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தி நிறைய சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.