1003 வீரர்கள் ஐபிஎல் 2019 காண ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த ஏலம் வரும் டிசம்பர் 18-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் நடக்கிறது. காலியாக இருக்கும் 20 வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தில் களம் காண சுமார் 232 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
அந்த 232 வீரர்களில் 35 பேர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்கள், இதில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், ஆரோன் பின்ச், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உலக கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு, ஐபிஎல் ஏலத்தில் இருந்து தங்களது பெயரை விலக்கிக் கொண்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வீரர்கள் அதிக அளவில் பதிவு செய்துள்ளனர், அந்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை 59 பேர். கிரிக்கெட் வளர்ந்துவரும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்தும் சுமார் 27 பேர் பதிவு செய்துள்ளனர். பல ஆப்கானிய வீரர்கள் குறிப்பாக லெக் ஸ்பின்னர்களை அணிகள் எதிர்பார்க்கக்கூடும் என்று தெரிகிறது.
ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலானது இன்னும் முழுமை அடையவில்லை, ஐபிஎல் அணிகளுக்கு நிர்வாகம் டிசம்பர் 10-ஆம் தேதி தனது விருப்பமான பிளேயர்களின் இறுதி பட்டியலை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. எனவே இப்பட்டியலில் பலரை நீக்கயும் புதியவர்களை சேர்த்தியும், பிரதான பட்டியல் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய 5 வெளிநாட்டு வீரர்களைப் பற்றி இத்தொகுப்பில் கீழ்வருமாறு காண்போம்.
#5. ஹார்டஸ் விலோஜென்
ஹார்டஸ் விலோஜென் சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடந்த முடிந்த டி10 போட்டி தொடரில் அசத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். டி10 தொடரில் சுமார் 18 விக்கெட்டுகளை 18 போட்டிகளில் வீழ்த்தியிருந்தார் விலோஜென். திறமையாக செயல்பட்ட இவர் அத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக விளங்கினார்.
டி10 தொடரில், இவர் பந்துவீச்சில் 7.70 என்ற சராசரியை வைத்திருந்தார். இவரது பவுலிங் ஸ்ட்ரைக் ரேட்டும் நம்பமுடியாத வகையில் 6.0 ஆக இருந்தது. 29 வயதான இவர் பௌன்சர்களை பயன்படுத்துவதில் வல்லவர். லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட் போட்டிகளுக்காகவே தன்னை செதுக்கி கொண்டவர் விலோஜென். இவர் பந்துவீச்சில் போட்டியின் தொடக்கத்திலும் , டெத் ஓவெர்ஸ் எனப்படும் போட்டியின் இறுதி கட்டத்திலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்.
இவர் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் நன்கு ஆடி இருந்தாலும், தேசிய அணியில் ஆட இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பெறவில்லை. இவரது கிரிக்கெட் வாழ்க்கையை பொருத்தமட்டில் ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் மட்டுமே ஆடியுள்ளார். 2016-ஆம் ஆண்டு கோல்பாக் ( சொந்த நாட்டில் வாய்ப்புகள் கிடைக்காததால் இங்கிலாந்து கிரிக்கெட் கவுண்டி போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒப்பந்தம்) என்னும் ஒப்பந்தத்தில் சேர்ந்தார் விலோஜென்.
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் போட்டிகளை புறந்தள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விலோஜென் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு ஏலத்தில் அதிக விலை கொடுக்க அணிகள் தயங்கமாட்டர் என்று கூறப்படுகிறது.