#3 தென்னாப்பிரிக்கா vs இலங்கை, டர்பன், 2019

இலங்கை அணி இங்கிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு எதிராக அந்நிய மண்ணிலும் கடும் தோல்வியை சந்தித்திருந்தது. இதனால் தென்னாப்பிரிக்காவில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் இலங்கை இழக்கும் என அனைவரும் எண்ணினர்.
தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இலங்கை 11 முறை தோல்வியும், 1 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1 முறை சமனில் முடிந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் எந்த ஆசிய அணியும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா முழு அதிக்கத்தை செலுத்தியது. இருப்பினும் குசல் பெரரா 4வது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட்த்தின் போக்கை மாற்றினார். பேட்டிங் செய்ய சற்று கடினமான ஆடுகளமான டர்பனில் தென்னாப்பிரிக்கா 235 ரன்களை முதல் இன்னிங்சில் குவித்தது. இலங்கை தனது முதல் இன்னிங்சில் 191 ரன்களில் சுருண்டது. கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸியின் பொறுப்பான ஆட்டத்தால் 90 ரன்களை இரண்டாம் இன்னிங்ஸில் குவித்தார். இதன் மூலம் இலங்கைக்கு 303 என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸில் 226 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. குசல் பெராரா அணியின் வெற்றிக்கு முழு பொறுப்பேற்று விளையாடிக் கொண்டிருந்தார். நம்பர் 11 பேட்ஸ்மேன் பெர்னான்டோவுடன்(6) சேர்ந்து 78 ரன்களை கடைசி விக்கெட்டிற்கு குவித்தார் குசல் பெரரா.
குசல் பெரரா இப்போட்டியில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 153 ரன்களை எடுத்தார். டேல் ஸ்டேய்ன், வெர்னோன் பிளாந்தர், காகிஸோ ரபாடா, கேசவ் மஹாராஜ், ஆலிவர் போன்ற சிறந்த பௌலர்கள் தங்களது நுணுக்கமான பௌலிங்கை வெவ்வேறு கோணங்களில் இலங்கை பேட்ஸ்மேன் குசல் பெரராவிற்கு எதிராக வெளிபடுத்தியும் அது பலிக்கவில்லை. பெரரா 304 என்ற இலக்கை கிட்டத்தட்ட தனி ஒருவராக இலங்கையை அடையச் செய்தார்.
இதைத்தொடர்ந்து போர்ட்ஸ் ஆஃப் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இலங்கை வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இதன்மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி இலங்கை என்ற பெருமையை பெற்றது.