"ஒரு நல்ல மாணவருக்கு ஒரு சிறந்த ஆசிரியர் தேவையில்லை" என்பது பழமொழி. இது கிரிக்கெட் விளையாட்டிற்கும் நன்கு பொருந்துகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளங்கிய அனைத்து வீரர்களாலும் சிறப்பான பயிற்சியாளர்களாக ஜொலிக்க இயலவில்லை. கபில் தேவ் மற்றும் கிரேக் சேப்பல் போன்ற தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களால் ஒரு அணியின் பயிற்சியாளர்களாக செயல்பட இயலவில்லை. இவர்களது ஆட்டத்திறனில் எவ்வித குறையும் இல்லை என்றாலும், ஒரு அணியில் உள்ள வீரர்களை சரியாக புரிந்து கொள்வது, வீரர்களுடனான அணுகுமுறை சரியாக இல்லாதிருத்தல் போன்றனவும் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியாளராக ஜொலித்ததில்லை.
மறுமுனையில் சில கிரிக்கெட் வீரர்கள் தாங்களது கிரிக்கெட் வாழ்க்கை மோசமாக அமைந்தாலும் பயிற்சியாளர்களாக அசத்தியுள்ளனர். இத்தகைய வீரர்கள் ஒரு அணியை கட்டமைத்து அதனை சரியாக நிர்வகிப்பதில் வல்லவர்களாக திகழ்வார்கள். சில கிரிக்கெட் வீரர்கள் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடமல் சர்வதேச அணிகளுக்கு பயிற்சியாளர்களாக திகழ்ந்து அணியை பெரும் நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். நாம் இங்கு ஒரு சர்வதேச போட்டிகளில் கூட களமிறங்காமல் உலக கிரிக்கெட் அணிகளில் பயிற்சியாளர்களாக அசத்திய 5 பயிற்சியாளர்களைப் பற்றி காண்போம்.
#5 கிரஹாம் போர்ட்
கிரஹாம் போர்ட் முன்னாள் இலங்கை பயிற்சியாளர் மற்றும் தற்போதைய அயர்லாந்து பயிற்சியாளர் ஆவார். பயிற்சியாளராக மாறுவதற்கு முன்பாக கிரஹாம் போர்ட் தென்னாப்பிரிக்காவின் "நடால்-B" என்ற அணிக்காக விளையாடி வந்தார். அவரது 29 வயது வரை வெறும் 7 முதல்தர போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். இந்த 7 போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 13.50 ஆகும். போர்ட் தனது 31 வயதில் "நடால் புரோவைன்ஸ்" அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் பாப் வுல்மல்-ருக்கு துணை பயிற்சியாளராக 1999ல் நியமிக்கப்பட்டார். அந்த வருடத்தில் நடந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதன்பின் பாப் வுல்மர் நீக்கப்பட்டு தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக கிரஹாம் போர்ட் நியமிக்கப்பட்டார்.
2007ல் கிரஹாம் போர்ட்-ற்கு இந்திய பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக அதனை நிராகரித்துவிட்டார். இவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக 2012 மற்றும் 2016ல் பதவி வகித்துள்ளார். 2017ல் அயர்லாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
#4 மிக்கி ஆர்தர்
மிக்கி ஆர்தர் உலக கிரிக்கெட்டில் ஒரு உணர்ச்சிகரமான பயிற்சியாளராக திகழ்ந்துள்ளார். ஆர்தர் பெரும்பாலும் அணியினருடன் தனது மகிழ்ச்சிகளையும் ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொள்வார். ஆர்தர் பயிற்சியாளர் என்ற கடினமான பணி-யை தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அளித்துள்ளார். ஆர்தர் முதல் தர கிரிக்கெட்டில் சிறந்த அனுபவ வீரராக திகழ்ந்தவர். தென்னாப்பிரிக்காவைச் செர்ந்த இவர் 110 முதல் தர போட்டிகள் மற்றும் 150 லிஸ்ட்-ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தர போட்டிகளில் இவரது சராசரி 33.45 மற்றும் லிஸ்ட்-ஏ போட்டிகளில் 26.76 சராசரியையும் வைத்துள்ளார். எதிர்பாராத விதமாக இவருக்கு சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2001ல் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர் பயிற்சியாளராக உருவெடுத்தார்.
4 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறில் 2010ல் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். பல சொதப்பல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக பதவி வகித்தார். அதன் பின் பாகிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளராக விளங்கினார். இவரது தலைமையில் பாகிஸ்தான் 2017ல் நடந்த ஐசிசி சேம்பியன் கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் டி20 தரவரிசையில் தொடர்ந்து நீண்ட மாதங்கள் பாகிஸ்தான் முதலிடத்தில் இருந்தது.