மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை விட, குல்தீப் யாதவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கபடுமா? 

It will be a tough choice to pick between the spin trio of Kuldeep, Ashwin, and Jadeja.
It will be a tough choice to pick between the spin trio of Kuldeep, Ashwin, and Jadeja.

ஜடேஜாவின் உறுதியான நிலைத்தன்மை

Jadeja
Jadeja

குல்தீப் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வர முக்கிய காரணமாக அற்புதமான கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். கிட்டத்தட்ட அணியிலிருந்து புறந்தள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா, தனது முழு ஆட்டத்திறனையும் கிடைத்த குறுகிய வாய்ப்பில் பயன்படுத்தி கொண்டு தன்னை நிரூபித்துள்ளார் ஜடேஜா. இவர் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்து வருகிறார். அத்துடன் ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கிற்கு ஈடுஇணையே யாரும் இல்லை. அதிகபடியான திறமைகளை தன்னிடத்தில் கொண்ட ஜடேஜா இந்திய அணியின் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறார்.

மேலும் இங்கிலாந்திற்கு எதிரான தொடரின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் கடைநிலை பேட்ஸ்மேன்களின் முக்கியத்துவம் குறித்து உணர்ந்திருப்பார்கள். இந்தியாவிற்கு சரியான முடிவாக அமையாத 2019 உலகக்கோப்பை தொடரில் ஜடேஜாவின் பேட்டிங் கடைநிலையில் மிகவும் அற்புதமாக இருந்தது. எனவே ஜடேஜா இந்திய அணியின் ஆடும் XIல் கண்டிப்பாக இடம்பெறுவார். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை விட குல்தீப் யாதவிற்கு அதிக முக்கியத்துவம் டெஸ்ட் அணியில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் அவரது சிறப்பான சைனாமென் பௌலிங். யாரும் எதிர்பாராத விதமாக மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் ஆடும் XIல் இடம்பெறச் செய்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூட அதிக வாய்ப்புள்ளது. சமீப காலமாக விராட் கோலியின் சிறப்பான டெஸ்ட் கேப்டன்ஷீப்பினால் அவர் எடுக்கும் முடிவு சரியானதாக அமைந்து வருகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஆடும் XIஐ காண அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Quick Links