இந்த தலைமுறையின் வீரேந்தர் ஷேவாக் யார்? 

ப்ரித்வி ஷா
ப்ரித்வி ஷா

# 2 ரிஷப் பன்ட்

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

பெரும்பாலும் 'அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட்' என்று கருதப்படும் பன்ட் ஹரித்வாரில் பிறந்தவர். மைதானத்திற்கு வந்தவுடன் பவுண்டரிகள் அடிப்பதில் சிறந்தவர். 2016 உலகக் கோப்பையில் இந்திய U-19-ல் ஆடிய ரிஷப் பன்ட், நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 பந்துகளில் 75 ரன்களை எடுத்து தொடரின் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். அவர் அடுத்த போட்டியில் ஒரு சதத்தை அடித்தார்.

இளம் வயதில் அனைத்து விதமான உயர்வையும் தாழ்மையையும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்து இருந்தார். ஆனால் அவர் ஒருபோதும் தன் பாணியில் இயற்கையான விளையாட்டை தொடர்வதை கைவிடவில்லை. 2018 ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய பன்ட், முக்கியமான ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

இந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடுமாறினாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார். அந்த போட்டியில் 146 பந்துகளில் 114 ரன்களை அதிரடியாக குவித்தார். அடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவரின் சராசரி 92. அதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தினார். இரண்டு ஒரு நாள் போட்டிகளில் பேட் செய்துள்ள அவரின் ஸ்ட்ரைக் ரேட் 132. இதனால் அவர் இந்திய அணியின் முக்கிய இளம் வீரராக உருவெடுத்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்து கொண்டிருக்கிறது.

Quick Links