இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் முதல் மைல்கல்லை எட்டியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா.
இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சின் மூலம் முதல் டி20யில் மேற்கிந்தியத் தீவுகள் 95 ரன்களில் சுருண்டது. புவனேஸ்வர் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் டக் அவுட் ஆக்கினர்.
இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆட்டத்தின் 5வது ஓவரில் தனது முதல் ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி இடதுகை பேட்ஸ்மேன்களான நிக்கலஸ் பூரான் மற்றும் ஷீம்ரன் ஹேட்மயர் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் ரவீந்திர ஜடேஜா மற்றும் க்ருநல் பாண்டியா ஆகியோர் தங்களது மாயாஜால சுழலில் மேற்கிந்தியத் தீவுகளை சுருட்டினர்.
நவ்தீப் சைனி 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
முதல் டி20யில் இந்திய அணி மிகவும் தட்டுத் தடுமாறி 6 விக்கெட்டுகளை இழந்து 96 என்ற இலக்கை 18வது ஓவரில் எட்டியது. விராட் கோலி 14வது ஓவரில் வீழ்த்தப்பட்டார். அப்போது இந்திய அணி வெற்றி பெற 5 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 27 ரன்கள் தேவைப்பட்டது. அச்சமயத்தில் பௌலிங் ஆல்-ரவுண்டர்களாக க்ருநல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இனைந்து இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தந்தனர்.
இரண்டாவது டி20யில் ஆரம்பத்தில் ரோகித் சர்மா மற்றும் இறுதியில் க்ருநல் பாண்டியா ஆகியோர் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தனர். ரோகித் தனது ஆட்டத்திறனை சிறப்பாக தொடர்ந்து 51 பந்துகளில் 67 ரன்களை விளாசியதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை குவித்தது. ஷீகார் தவான் (23) மற்றும் விராட் கோலி (28) ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் மீண்டுமொருமுறை சொதப்பி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் அடித்திருந்தது. ரோவ்மன் பவ்ல் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். இவர் 3வது விக்கெட்டிற்கு நிக்கோலஸ் பூரானுடன் இனைந்து 76 ரன்கள் குவித்தார். இருப்பினும் போட்டியின் நடுவே மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை குறுக்கிடும் முன்பாக க்ருநல் பாண்டியா இரு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார்.
சற்று தடுமாற்றத்ததுடன் விளையாடிக் கொண்டிருந்த நிக்கலஸ் பூரானை க்ருநல் பாண்டியா வீழ்த்தினார். இவர் விளாசிய பந்து பவுண்டரி லைனில் மேல்நோக்கி சென்ற போது மனிஷ் பாண்டே பிரம்மாண்டமான கேட்ச் பிடித்து அசத்தினார்.
இதே ஓவரின் 5வது பந்தில் ரோவ்மன் பவ்ல்-இன் கேட்சை க்ருநல் பாண்டியா பிடித்து மேற்கிந்தியத் தீவுகளின் சேஸிங் கனவை களைத்தார். 5 நிமிடத்தில் வீழ்த்தப்பட்ட இரு விக்கெட்கள் மற்றும் மழை குறுக்கிடு ஆகியவை ஆட்டத்தின் முடிவை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றியது. டக்வொர்த் விதிப்படி அமைந்த இலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அடையவில்லை.
இறுதியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டி20யில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இப்போட்டி முடிவில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது திட்டம் சரியாக வேலை செய்துவிட்டதாகவும், 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாம் இங்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3வது டி20யில் இந்திய அணியில் ஏற்பட வாய்ப்புள்ள 3 மாற்றங்களை பற்றி காண்போம்.