2019 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்த 3 காரணிகள்

Indian cricket Team
Indian cricket Team

#2 விராட் கோலியின் சிறப்பான கேப்டன்ஷீப்

Virat kholi
Virat kholi

விராட் கோலி கேப்டனாக முதன் முதலாக உலகக்கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளார். இது முதல் போட்டியில் இவருக்கு ஒரு சவாலானதாக இருக்கும் என ரசிகர்கள் நம்பினர். விராட் கோலி தனது விளையாட்டை பேரார்வத்தோடு சிறப்பாக கையாளுவார் என்பது அனைவருக்கும் தெரியும். விராட் கோலியின் ஆர்வம் மற்றும் உற்சாகம் முழுவதும் வேறு மாதிரியாக உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இருந்தது. தனது சக இந்திய வீரர்களுடன் இனைந்து கலந்துரையாடி சிறப்பான கேப்டன் ஷீப்பை விராட் கோலி அளித்தார்.

விராட் கோலியின் அதிரடி கேப்டன் ஷீப்பாக, பவர் பிளேவில் 3 ஸ்லிப்கள் நிறுத்தியது ஒரு தந்திரமான செயலாகும். பூம்ரா பந்துவீச்சில் டிகாக் தடுமாறுவதை உணர்ந்த கோலி அவரே 3வது ஸ்லிப்பின் கவர் திசையில் சென்று நின்றார். டிகாக் மேன்மேலும் தடுமாறி வந்தார். பின்னர் பூம்ரா வீசிய ஓவரில் டிகாக் பேட் கொண்டு மெதுவாக தட்டிவிட விராட் கோலி எதிர்பார்த்த படியே அவரிடமே கேட்சாக மாறியது. பவர் பிளே முடிந்த பிறகு விராட் கோலி வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என மாறி மாறி வீச வைத்தார். குல்தீப் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் பேட்ஸ்மேன்களுக்கு அதிக இடர்பாடுகளை ஏற்படுத்தினர்.

பின்னர் யுஜ்வேந்திர சகாலை விராட் கோலி பந்துவீச செய்தார். குல்தீப் யாதவ் மற்றும் சகால் இருவரும் மிடில் ஓவரில் சிறப்பான சுழலை மேற்கொண்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தென்னாப்பிரிக்க கடைநிலை பேட்ஸ்மேன்கள் சற்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்ற போது பூம்ராவை மீண்டும் பந்துவீச கோலி அழைத்து வந்தார். அவரும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு ரன்கள் உயர்வதை கட்டுபடுத்தினார்.

விராட் கோலியின் கேப்டன்ஷீப் சரியில்லை என்று அதிக விவாதத்திற்கு கடந்த காலங்களில் உள்ளாக்கப்பட்டிருந்தது. தற்போது கோலி தனது கேப்டன் ஷீப் திறனை அதிகம் மேம்படுத்தி புத்தம் புது பொலிவுடன் உலகக் கோப்பை தொடரின் இந்தியாவின் முதல் போட்டியிலேயே சிறப்பாக வெளிபடுத்தியுள்ளார். சரியான முடிவுகளை எடுப்பதனையும் சிறப்பாக கையாண்டுள்ளார். இதன் மூலமே தென்னாப்பிரிக்க அணியை சுமாரன ரன் இலக்கில் இந்தியா வீழ்த்தியது.

Quick Links