உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை இந்தியா ஏழாவது முறையாக வீழ்த்தியதற்கான 4 காரணிகள்

India v Pakistan - ICC Cricket World Cup 2019
India v Pakistan - ICC Cricket World Cup 2019

ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜீன் 16 அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டெஃபோர்ட் மைதானத்தில் இக்கட்டான மழை சூழ்நிலையில் நடந்தது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு கடும் போட்டியாகவும், அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகவும் ரசிகர்களால் பார்க்கப்படும். இந்திய அணி நெருக்கடியை சரியாக கையாண்டு வரலாற்றில் மீண்டுமொருமுறை பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. உலகக்கோப்பையில் மழைகுறுக்கீட்டிற்கு இடையில் மற்றொரு முறை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சஃப்ரஸ் அகமது இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். இந்திய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை எடுத்தது. ரோகித் சர்மா இப்போட்டியில் மற்றொரு மிகப்பெரிய சதத்தினை விளாசினார். இவர் இப்போட்டியில் 113 பந்துகளை எதிர்கொண்டு 140 ரன்களை குவித்தார். இவருக்கு உறுதுணையாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியில் அதிக ரன் இலக்கை குவிக்கப்பட்டது. இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சரியாக வகுத்து சிறப்பாக செயல்படுத்தினர். விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நாம் இங்கு உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை இந்தியா ஏழாவது முறையாக வீழ்த்தியதற்கு காரணமாக இருந்த 4 காரணிகளை காண்போம்.

#4 இந்திய ஆல்-ரவுண்டர்களின் கலவை

Shankar and Pandya picked 2 wickets apiece
Shankar and Pandya picked 2 wickets apiece

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா என 4 ஆல்-ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே தங்களது சிறப்பான ஆட்டத்திறனை இந்திய அணிக்கு அளிப்பதில் வல்லவர்கள். இந்தப் போட்டியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அதிக இலக்கை துரத்திய பாகிஸ்தானை புவனேஸ்வர் குமார் மற்றும் பூம்ரா ஆரம்ப ஓவர்களில் பந்துவீசி கட்டுபடுத்தி வந்தனர். இருப்பினும் புவனேஸ்வர் குமாருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் அவரது மூன்றாவது ஓவருடன் ஓய்வறைக்கு அனுப்பப்பட்டார். கேப்டன் விராட் கோலி அந்த ஓவரை சமநிலை படுத்தும் வகையில் விஜய் சங்கருக்கு பௌலிங் செய்ய வாய்ப்பளித்தார். கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் விஜய் சங்கர் தான் வீசிய முதல் பந்திலேயே இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இவர் சரியான இடங்களில் பந்தை வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்து நல்ல எகானமிக்கல் பௌலராக திகழ்ந்தார். விஜய் சங்கர் மேலும் தனது ஆல்-ரவுண்டர் திறனை நிறுபிக்கும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் சஃப்ரஸ் அகமதுவை போல்ட் ஆக்கி தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்திய அணியின் முதன்மை ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை சரியாக பயன்படுத்தியது இந்திய அணி. பேட்டிங்கில் 25 ரன்களை குவித்த 25 வயதான ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடின இலக்கை துரத்தி கொண்டிருந்த பாகிஸ்தானின் இரு அனுபவ பேட்ஸ்மேன்களான சோயிப் மாலிக் மற்றும் முகமது ஹபீஜை அடுத்தடுத்த இரு பந்துகளில் வீழ்த்தினார்.

விஜய் சங்கர் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பௌலிங் சிறப்பாக இல்லை என்ற விமர்சனம் எழுந்த வந்த நிலையில், இந்திய முதன்மை பௌலர்களுக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கும் விதத்தில் இரு ஆல்-ரவுண்டர்களும் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினர்.

#3 கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியின் நிலையான அரைசதம்

Virat kholi & KL Rahul Steady Fifty To help India Reach 300+ score
Virat kholi & KL Rahul Steady Fifty To help India Reach 300+ score

இந்திய அணியின் பெரும்பாலான ரன்கள் ரோகித் சர்மாவின் பேட்டிங்கிலிருந்தே வெளிபட்டு வந்தது. லோகேஷ் ராகுல் மற்றும் விராட் கோலியின் சிறப்பான அரைசதம் இந்திய அணிக்கு முண்ணணியாக அமைந்தது. இதன்மூலமே இந்தியா தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் 300+ ரன்களை குவிக்க முடிந்தது.

ஷீகார் தவானிற்கு காயம் ஏற்பட்டதால் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தன்னை ஏன் அதிக மதிப்புமிக்க வீரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்பதனை நிறுபித்தார். 26வயதான இவர் டாப் ஆர்டரில் ஒரு நிலையான மற்றும் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்தார்‌. இவருடைய நிலையான ஆட்டம் ரோகித் சர்மாவிற்கு மிகவும் பிடித்தது. இதனால் கே.எல்‌.ராகுல் பொறுமையாகவும், ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாகவும் விளையாட ஆரம்பித்தார். சரியாக வீசப்பட்ட பந்தை பயன்படுத்தி கொண்ட லோகேஷ் ராகுல் தனது முதல் உலகக்கோப்பை அரைசதத்தை விளாசினார்.

கே.எல்.ராகுல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய பிறகு, விராட் கோலி அவரது இன்னிங்க்ஸை தொடங்கினார். விராட் கோலி ஆர்ம்பத்தில் மிகவும் மெதுவாக நிலைத்து விளையாட தொடங்கினார். சிறு சிறு இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தார் விராட். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவே 11,000 ரன்களை 222 இன்னிங்ஸில் அடித்து சாதனை படைத்தார். விராட் கோலி 65 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 77 ரன்களை குவித்தார்.

#2 குல்தீப் யாதவின் மாயஜாலம்

Golden Arm of Kuldeep Yadav tore through the top order of Pakistan
Golden Arm of Kuldeep Yadav tore through the top order of Pakistan

337 என்ற கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் ஆரம்பத்திலே தனது முதல் விக்கெட்டை இழந்தது. இருப்பினும் பாபர் அஜாம் மற்றும் இவரது பேட்டிங் பார்டனர் ஃபக்கர் ஜமான் நிலைத்து விளையாடினர். மொத்தமாக 104 ரன்களை பார்டனர் ஷீப் செய்து விளையாடினர்.

இந்த இரு பேட்ஸ்மேன்களும் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் யுஜ்வேந்திர சகால் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ஓவரை துவம்சம் செய்து விளையாடினர். சுழல் வித்தையை தன் கைகளில் கொண்ட குல்தீப் யாதவ், பாபர் அஜாம் மற்றும் ஃபக்கர் ஜமானை தனது சுழலில் தடுமாறச் செய்து கொண்டிருந்தார். சைனா மேன் குல்தீப் யாதவ் பந்தை நன்றாக சுழற்றி வீசி பாபர் அஜாமை போல்ட் ஆக்கினார். பின்னர் குல்திப் வீசிய அடுத்த ஓவரிலேயே ஃபக்கர் ஜமான் தவறான ஸ்விப் ஷாட் விளையாட முயன்ற போது சகாலிடம் கேட்ச் ஆகி வெளியேற்றப்பட்டார்.

உலகக்கோப்பை தொடரில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் ஆட்டத்திறன் குறித்து அதிக கேள்வி எழுந்து வந்தது. அத்துடன் இவருக்கு பதிலாக முகமது ஷமியை களமிறக்கலாம் என்ற விவாதமும் நடந்து வந்தது. இருப்பினும் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்து தனது மாயாஜால பௌலிங் வித்தையை உலகிற்கு மீண்டும் அறிவித்துள்ளார்.

#1 மான்செஸ்டரில் ரோகித் சர்மாவின் மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்

Rohit Sharma
Rohit Sharma

ஒரு நெருக்கடியான மிகப்பெரிய போட்டிகளில் அதிக ரன்களை குவிப்பவர் மிகவும் தனித் திறமையுடன் திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிகொணர்ந்து இந்திய அணியில் தனது முக்கியத்துவத்தை மீண்டுமொருமுறை சதம் விளாசி வெளிபடுத்தியுள்ளார். சற்று நெருக்கடியான சூழ்நிலையில் ரோகித் சர்மா பாகிஸ்தானின் வலிமையான பௌலிங்கை சிதரவிட்டார்.

ரோகித் சர்மா சற்று சரியான வேகத்தில் மற்றும் திசையல் வீசிய முகமது அமீரின் பந்துவீச்சை தடுத்து நிறுத்தி விளையாடினார். மற்ற அனைத்து பௌலர்களுக்கு எதிராகவும் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி வந்தார். குறிப்பாக ஹாசன் அலி பந்துவீச்சை அடித்து துவைத்தார். "ஹீட்மேன்" ரோகித் சர்மா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்து ரன்களை குவித்து வந்தார். ஒரு பௌலர்களை கூட சிறப்பாக பந்துவீச ரோகித் விடவில்லை.

இந்திய துனைக் கேப்டனான ரோகித் சர்மா 2019 உலகக்கோப்பை தொடரில் மூன்றாவது முறையாக 50+ ரன்களை எடுத்தார். எப்போதுமே ரோகித் அரை சதம் அடித்ததற்கு பின் அவரது பேட்டிங் அதிரிடியாக இருக்கும், இதே வித்தை பாகிஸ்தானிற்கு எதிராகவும் வெளிபடுத்தினார். மூன்று இலக்க ரன்களை நோக்கி தனது பேட்டிங்கை திருப்பினார் ரோகித். உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். ரோகித் சர்மாவினா சிறப்பான பவுண்டரிகள் மற்றும் அதிரடி சிக்ஸர்கள் ரசிகர்களின் இமைகளுக்கு விருந்தாக அமைந்தது. 32 வயதான ரோகித் சர்மா 2019 உலகக்கோப்பை தொடரில் தனது இரண்டாவது சதத்தினை விளாசினார். இவர் தற்போது இவ்வருட உலககோப்பை தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிக்கிறார்.

Quick Links

Edited by Fambeat Tamil