உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்பதற்கான 4 காரணங்கள்

Indian cricket Team
Indian cricket Team

#2 இந்திய அணியின் நிலையான பேட்டிங் vs தென்னாப்பிரிக்காவின் சொதப்பலான பேட்டிங்

KL Rahul's form at No. 4 will put Virat Kohli at ease and make Indian batting order more intimidating
KL Rahul's form at No. 4 will put Virat Kohli at ease and make Indian batting order more intimidating

கடந்த இரு ஆண்டுகளாக உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்து வந்துள்ளது. இதற்கு தீர்வாக கே.எல்.ராகுல் அமைந்துள்ளார். கடந்த வாரத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கி சதம் விளாசினார்.

கே.எல்.ராகுலின் தக்க சமயத்தில் இந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி தற்போது வலிமையான பேட்டிங் அணியாக திகழ்கிறது. கே.எல்.ராகுல், நம்பர் 3ல் களமிறங்கும் விராட் கோலி மற்றும் நம்பர்-5ல் களமிறங்கும் எம்.எஸ்.தோனியுடனும் இனைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவராக திகழ்கிறார். உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை விராட் கோலி குவித்து சாதனை படைப்பார் என நம்பப்படுகிறது, அத்துடன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் தான் வெளிபடுத்திய ஆட்டத்திறனை உலகக் கோப்பை தொடரிலும் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார் மகேந்திர சிங் தோனி.

இந்திய அணிக்கு தற்போது உள்ள மிகப் பெரிய கவலை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தான். இரு பயிற்சி ஆட்டத்திலுமே ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவருமே ஆரம்பத்திலே தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இருப்பினும் இந்திய அணி இரு வாரங்கள் இங்கிலாந்தில் நன்கு பயிற்சி மேற்கொண்டு அந்த ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்து வைத்திருக்கும். எனவே ரோகித், தவான் இருவரும் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. 2013 சேம்பியன் டிராபியில் இங்கிலாந்து மைதானத்தில் ரோகித் மற்றும் தவான் இருவருமே சிறந்த பார்டனர்ஷீப் விளையாடியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்திய அணியின் பேட்டிங் அதிரடியாக இருக்குமெனில், தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாற வாய்ப்புள்ளது. ஹாசிம் அம்லாவும் இந்த போட்டியில் பங்கேற்பது சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஃபேப் டுயுபிளஸ்ஸி மற்றும் குவின்டன் டிகாக் ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் அந்நிய ஈரப்பத மற்றும் மேகமுட்டமான மண்ணில் சற்று விளையாட தடுமாறுவார்கள். அத்துடன் தென்னாப்பிரிக்க அணி கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஏபி டிவில்லியர்ஸிற்குப் பிறகு மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேனை கொண்டு வர தவறவிட்டனர். கூடிய விரைவில் இந்த மிடில் ஆர்டரில் ஒரு நிலையான பேட்ஸ்மேனை தென்னாப்பிரிக்கா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil