2019 உலக கோப்பை தொடர் குறைந்த ஸ்கோரிங் தொடராக அமைவதற்கான நான்கு காரணங்கள்

A look into why the batting in this tournament has been opposite of what was expected in the lead up to the World Cup.
A look into why the batting in this tournament has been opposite of what was expected in the lead up to the World Cup.

2019 உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் மட்டுமே கொண்டு நடத்துவதாக ஐசிசி முடிவெடுத்தது. அதன்படி, கடந்த 30ம் தேதி பெருமை மிகுந்த இந்த கிரிக்கெட் திருவிழா தொடங்கப்பட்டது. இதுவரை நடைபெற்றுள்ள 11 போட்டிகளில் ஓரிரண்டு போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டன. அவற்றில், நேற்று நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மழையின் தாக்கத்தால் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. எனவே, இதுவரை முடிந்துள்ள போட்டிகளை வைத்து பார்த்தால் பெரும்பாலான போட்டிகள் குறைந்த அளவிலான ஸ்கோர் குவிக்கப்பட்டன. எனவே, இனிவரும் போட்டிகளிலும் இதே நிலை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, இந்த ஒட்டுமொத்த தொடருமே குறைந்த ஸ்கோரில் தொடராக அமைவதற்கான நான்கு காரணங்களை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.

#1.கட்டுக்கோப்பான பேட்டிங் இன்னிங்ஸ் இதுவரை அமையவில்லை:

South Africa v India - ICC Cricket World Cup 2019
South Africa v India - ICC Cricket World Cup 2019

ஒரு சிறந்த ஸ்கோரை அளிப்பதற்கு இன்னிங்சில் தொடக்க முதலே பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு மிடில் ஓவர்கள் மற்றும் ஆட்டத்தின் இறுதி கட்ட ஓவர்கள் வரை தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும். இதுவரை நடைபெற்ற பெரும்பாலான ஆட்டங்களில் பவர் பிளே ஓவர்களிலேயே பல அணிகள் 3 முதல் 4 விக்கெட்களை இழந்து உள்ளனர். இதனால் பார்ட்னர்ஷிப் உருவாகுவது பெருமளவில் குறைந்தன. இதன் தாக்கத்தால் லோயர் மிடில் ஆர்டர் மற்றும் இறுதிக்கட்ட பேட்ஸ்மேன்கள் மீது கடும் நெருக்கடி அளிக்கப்பட்டது. இதே நிலைதான் இந்திய அணியின் பேட்டிங்கிற்கும் தொடர்கிறது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா ஒருவர் மட்டுமே தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#2.இங்கிலாந்து ஆடுகளத்தின் நிலைமை:

Most of the Pakistan batsmen got out in the attempt of an aggressive shot
Most of the Pakistan batsmen got out in the attempt of an aggressive shot

இங்கிலாந்து ஆடுகளங்கள் பொதுவாக 300 முதல் 350 ரன்களை குவிக்கும் திறன் பெற்றவை ஆகும். ஆனால், ஒரு சில போட்டிகளில் மட்டுமே இத்தகைய ஸ்கோர்கள் குவிக்கப்பட்டன. இவ்வகையான ஆடுகளங்கள் உலக கோப்பை தொடருக்கான பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டன. கவுன்டி அல்லது மற்ற எந்த சர்வதேச போட்டிகளில் இதுவரை இந்த ஆடுகளங்கள் உபயோகிக்கப்படவில்லை. நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வகை ஆடுகளங்கள் பந்து வீசுவதற்கும் பேட்டிங் செய்வதற்கும் ஏதுவாக காணப்படுகின்றன என்று கூறியுள்ளார். இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு பேட்ஸ்மேன்கள் தங்களது திறனை முழுமையாக வெளிப்படுத்தினால் மட்டுமே மேற்கண்ட ஸ்கோரை எந்த ஒரு அணியும் எட்ட முடியும். முதன்முதலாக பாகிஸ்தான் அணி தங்களது 5 பேட்ஸ்மேன்களை கொண்டு பலம் மிகுந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக இது போன்ற பெரிய ஸ்கோரை குவித்து வெற்றியையும் கண்டது. எனவே, இனிவரும் போட்டிகளிலும் கூட பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இவ்வகை ஆடுகளங்கள் அமையும் என்பதற்கு போதிய காரணங்கள் உள்ளன.

#3.மிடில் ஓவர்களில் ஏற்படும் தடுமாற்றங்கள்:

Apart from Kusal Perera, every batsman struggled against Afghanistan spinners
Apart from Kusal Perera, every batsman struggled against Afghanistan spinners

ஆட்டத்தின் மிடில் ஓவர்களான 11 முதல் 40 ஓவர்கள் வரை பேட்டிங் செய்வது எந்த ஒரு அணிக்கும் முக்கியமானதாகும். இந்த குறிப்பிட்ட ஓவர்களில் எந்த ஒரு விக்கெட்டையும் இழக்காமல் இருக்கும் அணிக்கே வெற்றி சாதகமாக முடியும். இருப்பினும், இந்த உலக கோப்பை தொடரில் பல அணிகளும் தங்களது விக்கெட்களை விரைவிலேயே இழந்து தவித்து வருகின்றன. குறிப்பாக, தென் ஆப்பிரிக்க அணி இதுவரை இவ்வகை ஓவர்களில் 17 விக்கெட்டுகளை இழந்து உள்ளன. இதுபோன்று விரைவிலேயே விக்கெட்களை இழந்துவிடுவதால் இறுதிகட்ட ஓவர்களில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இல்லாமல் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறது.

#4.நெருக்கடி ஒரு முக்கிய காரணம்:

The run-out of Najibullah Zadran against Sri Lanka was also a result of the pressure that was building up on both the teams toward the business end of the game.
The run-out of Najibullah Zadran against Sri Lanka was also a result of the pressure that was building up on both the teams toward the business end of the game.

2019 உலகக் கோப்பை தொடரில் எந்த ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளருக்கு கடுமையான நெருக்கடிகள் அளிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, அணியில் உள்ள வீரர்கள் திரும்ப திரும்ப ஒரே தவறை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வகை நெருக்கடியினை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி வீரர்கள் உணர்ந்ததை நாம் கண்டுள்ளோம். நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் மிட்செல் சேன்ட்னர் வீசிய பந்தில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்களை தேர்ந்தெடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர். இதேபோல் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா நெருக்கடி காரணமாக தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இது ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வி பெற முக்கிய காரணமாய் அமைந்தது.

Quick Links

Edited by Fambeat Tamil