#1.முகமது சமி - இந்தியா:
இந்திய அணியின் ஆடும் லெவனில் முகமது சமி இடம்பெறுவார் என பலரும் நினைத்த வேளையில், அணி நிர்வாகமும் கேப்டன் விராட் கோலியும் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரை ஆடும் லெவனில் இணைத்தனர். அவர்களின் நம்பிக்கையின் பேரில் சிறப்பாக செயல்பட்டார், புவனேஸ்வர் குமார். இருப்பினும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட கடும் தசைப்பிடிப்பால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இன்னும் அல்லது மூன்று போட்டிகளில் அவர் தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளார் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆடும் லெவனில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இணைக்கப்பட்டார். தமக்கு வழங்கிய வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திய முகமது சமி, நேற்றைய போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் உட்பட நான்கு விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தார். நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. தொடர்ந்து இரு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே களமிறக்கி வரும் இந்திய அணி, இனி வரும் போட்டிகளில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் கொண்டு களம் இறங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால், முகமது சமி ஆடும் லெவனில் தொடர்ந்து இடம்பெறுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை.